கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

புத்தாண்டு கொண்டாட்டமும், முஸ்லிம்களும்

இன்று செவ்வாய்க்கிழமை இரவு 12 மணியுடன் 2013 நிறைவடைந்து 01-01-2014 புது வருடம் பிறக்கின்றது.

அபுதாஹீரை உங்களுக்கு தெரியுமா…?

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும்! 

ஆட்சியாளர்கள் அஞ்சிக் கொள்ளட்டும்.

நீதி தேவன் மயக்கத்தில் தான் இருக்கின்றான் என நினைப்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்...

அபுதாஹீரை உங்களுக்கு தெரியுமா…? 14 ஆண்டுகாலமாக சிறையில் வாடும் இவரின் இழப்புகளை குறித்து பேச ஆரம்பித்தால் உங்களால் நிச்சயம் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது - வல்வை அகலினியன் அவர்கள் இன்று http://tamizl.comல் எழுதிய உணர்ச்சி பூர்வமான யதார்த்தம் ....

கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் .

கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திருச்சியில் நடந்த முஸ்லிம் லீக் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மற்றும் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நேற்று திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் காதர் மொய்தீன் தலைமை தாங்கினார்.

அணைக்கரை பாலத்தில் கனரக போக்குவரத்து தொடங்க கோரி வியாபாரிகள் கடையடைப்பு

திருவிடைமருதூர் டிச. 27
சென்னை–கும்பகோணம் சாலையில் கும்பகோணம் அருகே அணைக்கரை பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 2 வருடங்களுக்கு முன் பழுதடைந்தது.இதனை தொடர்ந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடந்த ஒரு வருடத்திற்கு முன் இந்த பாலம் பழுது பார்க்கப்பட்டது.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோரிக்கையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி, இல்லையேல் 10 தொகுதிகளில் தனித்து போட்டி – மாநில செயற்குழுவில் தீர்மானம்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமையில் 22.12.2013 அன்று சென்னையில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அரசு காப்பீட்டு திட்ட உதவியுடன் இதய நோய்களுக்கு ஆபரேஷன் இல்லாமல் நவீன சிகிச்சை

அரசு காப்பீட்டு திட்டத்தின் உதவியுடன் இதய நோய்கள் மற்றும் ரத்த குழாய் நோய்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாத நவீன சிகிச்சை முறை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தொடங்கப்பட்டு உள்ளது.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி டீன் கீதாலட்சுமி கூறியதாவது:-

துபாய் இந்திய தூதரக பெண்ணின் மன மாற்றம்! மாபெரும் அரங்கில் இஸ்லாத்தில் இணைகிறார்


திருச்சியில் இஸ்லாமிய வாழ்வியல் கண்காட்சி

Islamic Expo in Trichy

உலக முஸ்லிம்களின் ஒருமைத்துவம்

இஸ்லாம் ஒருமைத்துவத்தையும், அமைதியையும் இதர வாழ்க்கை சம்மந்தமான அனைத்து இன்னோரன்ன சமூக ஒருமையையும் விரும்புகின்றது, காலை மலர்ந்து மாலை உதிரும் பூப் போல அல்ல உலக முஸ்லிம்களின் ஒருமைப்படும் வெற்றியும் நாம் ஒவ்வொரு தனி நபரின் மூலம்தான் ஒரு குழுவாக மாறும்.

மருத்துவரின் மனம் கவர்ந்த இஸ்லாம்

அமெரிக்காவில் ஓர்ஃபியா என்ற பெண் மருத்துவர் ஒரு விசித்திரமான பிரசவ கேஸைச் சந்திக்கின்றார். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர் ஓர் அரபியப் பெண்மணி! அந்தப் பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கின்றார். நடந்தது என்ன? அந்த மருத்துவரே விவரிக்கின்றார்.

காலம் ஓர் ஆயுதம்!

‘காலம் ஓர் ஆயுதம்’ என்ற தலைப்பின் கீழ் காலத்தின் அவசியம் பற்றியும், அதை எவ்வாறு இறைவழியில் செலவிடலாம் என்பது பற்றியும் சகோதாரி ஆயிஷாவும், சகோதாரி ஆமினாவும் அவர்களின் உரையாடல் மூலமாக விளக்குகிறார்கள்.

இ.யூ. முஸ்லிம் லீக் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை

சென்னை, டிச. 14- பாரதீய ஜனதா கட்சியை முஸ்லிம் சமூகத்தில் எவரும் ஆதரிப்பார்கள் என்பது பகல் கனவே என குறிப்பிட்டுள்ள பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை இது போன்ற விஷமத்தனமான செயல் களுக்கு பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அணைக்கரை பாலத்தை மீண்டும் போக்குவரத்துக்கு பயன்படுத்த வேண்டும் தஞ்சை மாவட்ட கலெக்டரிடம், வணிகர் சங்க பேரவையினர் வலியுறுத்தல்

தஞ்சாவூர்,அணைக்கரை பாலத்தை மீண்டும் போக்குவரத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் வணிகர் சங்க பேரவையினர் வலியுறுத்தி உள்ளனர்.

மின்கட்டண தொகை தெரிந்து கொள்ள மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் செல்போன் எண் பதிய அழைப்பு

தஞ்சை, : மாதாந்திர மின்கட்டணம் குறித்த தகவல்கள் எஸ்எம்எஸ் வாயி லாக அறிந்து கொள்ள மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் செல்போன் எண்ணை பதிவு செய்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சவுந்திரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கல்வி உதவித்தொகை பெற திறன் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

8–ம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேசிய திறன் தேர்வு

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித்தொகை வழங்க மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு என்.எம்.எம்.எஸ். தேர்வு அனைத்து வட்டார அளவில் நடைபெறவுள்ளது. தேர்வு தேதி 22–2–2014 இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை இத்துறையின் இணையதளம் வழியாக 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.

புகார்களை அனுப்ப தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணயதளம்!

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணயதளம் புதிதாக துவங்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளம் மூலம்  இனி புகார்களை ஆன்லைனிலேயே பதிவு செய்ய இயலும். இதுவரை தமிழக முதல்வர் தனி பிரிவிற்கு ஏதேனும் துப்பு அல்லது புகார் தரவேண்டுமெனில் அவற்றை நேரடியாகவோ, தொலைபேசி  மற்றும் கடிதம் வாயிலாகவோ தான் அனுப்ப இயலும். அதுவும் அவற்றின் நிலை குறித்து நம்மால் அறிய இயலாது.

கும்பகோணத்தில் இஸ்லாமிய இலக்கிய கழக பன்னாட்டு மாநாடு: பிப்ரவரி மாதம் நடக்கிறது

கும்பகோணத்தில் வருகிற பிப்ரவரி மாதம் இஸ்லாமிய இலக்கிய கழக பன்னாட்டு மாநாடு நடைபெறும் என்று முன்னாள் வக்பு வாரிய தலைவர் கவிக்கோ.அப்துல்ரகுமான் கூறினார்

இஸ்லாமிய இலக்கிய கழக தலைவரும், முன்னாள் வக்பு வாரிய தலைவருமான கவிக்கோ.அப்துல்ரகுமான் கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு: மாநில ஜமாத்துல் உலமா சபை கோரிக்கை

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என மாநில ஜமாத்துல் உலமா சபை செயற்குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தப்பட்டது.

சவூதி வேலை இழந்த தமிழர்கள் தாயகம் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது :-

கல்லூரி மாணவ மாணவிகளுக்கான கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்


சென்னை அரசு மருத்துவமனையில் பள்ளிவாசல்!

சென்னை மாநகராட்சி மருத்துவமனைசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அல்லாஹ்வை வணங்கும் அற்புத பள்ளி ஒன்றை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவியுள்ளனர் அங்கு பணிபுரியும் இஸ்லாமிய மருத்துவர்கள்!

“டிசம்பர் 6“ பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு! (Tamil & English)

பிரச்சினை உருவான விதம்  1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.

அட... அங்கேயும் இப்படி தானா ?

முன்பெல்லாம் கிராமங்களில் “மணமகளே மருமகளே வா… உன் வலது காலை எடுத்து வைத்து வா…” எனும் பாடல் ஒலிக்கும். அப்போது மணப்பெண் புகுந்த வீட்டுக்குள் “வலது காலை” எடுத்து வைத்து நுழைவார். இதற்காகவே சுற்றிலும் பாட்டிமார் நிற்பார்கள். “முதல்ல.. உன் வலது காலை எடுத்து உள்ளே வைம்மா” என்று அட்வைஸ்கள் விழும். வலது காலை எடுத்து வைத்து வீட்டுக்குள் நுழைவது வீட்டுக்கு வளத்தைக் கொண்டு வரும் என்பது நமது செண்டிமெண்ட்.

கோணுழாம்பள்ளம் தியாக திருநாள் தொழுகை புகைப்படங்கள்.


எனது பெயர் ஜனாஸா!

நான் படுக்கையில் கிடக்கிறேன். என்னுடைய பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் என்னருகில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கின்றனர்.

‘‘வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்கும் ஆணையம்’’ & ‘‘ஆணையிடுமா தமிழக அரசு?’’

பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு! எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!

திருமணத்தில் எடுக்கப்படும் வீடியோ – விழிகளுக்கு விருந்தாகும் வீட்டுப் பெண்கள்!

திருமணம் ஒரு நபிவழியாகும். ஆனால் இன்று அந்தத் திருமணம் இறைவனுக்கு மாறுசெய்வதில் தான் துவங்குகின்றது. அதுதான் வரதட்சணை. இதனைத் தொடர்ந்து ஆடம்பரமான அழைப்பிதழ், பணத்தின் மதிப்பைக் காட்டுகின்ற விருந்து, பகட்டான மண்டபம், பந்தல், வண்ண விளக்குகள் அலங்காரம், இன்னிசைக் கச்சேரி, வாணவேடிக்கை, ஊர்வலம் என்று பாவகரமான செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

கோணுழாம்பள்ளம்பள்ளிவாசல்தெரு சுபைதாபீவி அவர்கள் மறைவு.

                                அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) 
கோணுழாம்பள்ளம்பள்ளிவாசல்தெரு(மர்ஹூம்அப்துல்லாஹ் அவர்களின் மனைவியும்)அப்துல்ஹமீது, ஹஜ்ஜிமுகம்மது அவர்களின் தாயாருமாகிய‌ ,சுபைதாபீவி அவர்கள் இன்று காலை (10.11.2013) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 4.30  மணியளவில் நடைபெற்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’   எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

பந்தநல்லூர் மின்சார வசூல் மையத்தில் உள்ள கணினியில் தொழில்நுட்ப கோளாறு

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQItEcWZZc4SRaGC7NpQIjUsiOeALsasx6FSBNC1lf-tyTM4nL9திருவிடைமருதூர், : பந்தநல்லூரில் உள்ள மின்சார வசூல் மையத்தில் பெரும்பாலான நேரங்களில் கணினியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதால் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருச்சி ஜமாஅத்துல் உலமா நடத்திய ஷரீஅத் மாநாடு தீர்மானம்

575716
திருச்சி, நவ.7- திருச்சி மாநகர மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஷரீஅத் மாநாடு திருச்சி சிங்காரதோப்பு நியூ கோல்டன் மஹாலில் நடைபெற்றது. காலையில் நடைபெற்ற முதல் அமர்வில் மார்க்க கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவி ஏ.முஹம்மது ரூஹுல் ஹக் தலைமை வகித்தார். திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டமான திருச்சி மாநகர், புறநகர், கரூர், பெரம்பலூர், அரியலூர் உள் ளிட்ட மாவட்டங்களின் ஜமாஅத் தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

வதைக்கும் விவாகரத்து வழக்குகள்! மௌலவி, அ. முஹம்மத்கான் பாகவி!

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நான்கு குடும்ப நல நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.இவற்றில் 2013 ஆகஸ்டுவரை 15,324 குடும்ப வழக்குகள் நிலுவையில் உள்ளன. விவாகரத்து,ஜீவனாம்சம், குழந்தைகள்மீதான உரிமை, மீண்டும் சேர்ந்துவாழ விருப்பம் ஆகிய வழக்குகள்ஆயிரக்கணக்கில் தேங்கிக்கிடக்கின்றன.

கோணுழாம்பள்ளம் T.C.முஸ்லிம்தெருK.S சயீத்யாசீன்.அவர்கள் மறைவு.


                                         அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் T.C.முஸ்லிம்தெரு K.S.சயீத்யாசீன்.அவர்கள் இன்று (06.10.2013) இரவு 6.00 மணியளவில்  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.ஜனாஸா நல்லடக்கம் நாளை நடைப்பெறும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.



அக்டோபர் 5 – சென்னையில் சரித்திரம் படைக்கும் சாதனை மாநாடு .

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் 5-10-2013 சனிக்கிழமை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் எம்.எஸ்.எஃப் முஸ்லிம் மாணவர் பேரவை மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வெள்ள கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்

தஞ்சாவூர்,தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வெள்ள கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது. கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ளப்பாதிப்பு குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்தார்.

கோணுழாம்பள்ளம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் ஜனவரி 28 போராட்ட விளம்பர பேனர் வாசகம்

முஸ்லீம்ஸ் ஏமாத்திடுவாங்க.

வீட்டின் முன்புறமாக கற்கள் ஒட்ட வேண்டிய வேலை ஒன்றிருந்தது. சில வீடுகளின் முன்பாக கருங்கற்களை வரிசையாக ஒட்டியிருப்பதை கவனித்திருப்பீர்கள். அந்த வேலைதான். கற்களை வெட்டுவதிலிருந்து நேர்த்தியாக ஒட்டுவது வரைக்கும் முஸ்லீம்கள்தான் இந்த வேலையை கச்சிதமாகச் செய்வார்கள் என்று சொன்னார்கள்.

பேராசை

இறைத்தூதர் அவர்களிடம்  நான் (நிதியுதவி) கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களிடம் (நிதியுதவி)  கேட்டேன். அப்போதும் அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகு என்னிடம், ‘ஹகீமே!  இச்செல்வம் (பார்க்கப்) பசுமையானதும் (சுவைக்க) இனிப்பானதும் ஆகும்.

T.சாகுல்ஹமீது-T.ரெஜீனா பர்வீன் திருமணம்.

பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு செல்லத் தடை!

பள்ளிகளுக்கு மாணவ- மாணவிகள் செல்போன் கொண்டு செல்ல தமிழக கல்வித்துறை அதிரடியாக தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தற்போது மாணவ- மாணவிகள் அதிக அளவு செல்போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால், அவர்களின் கவனம் வேறுவிதமாக சென்று வாழ்க்கையை வீணாகும் அளவுக்கு போய்விடுகிறது.

உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை!

 செப்டம்பர்  14 உலக முதலுதவி தினம்!
இந்தியாவில் விபத்துகளால் உயிர் இழப்பவர்களில் 80 சதவிகிதம் பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்தில் பலியாகிறார்கள்.

இத்தகைய விபத்தில் சிக்கியவர்களுக்கு முறையான முதலுதவி கிடைத்திருந்தால், அவர்கள் நிச்சயம் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு முதலுதவி என்பது தேவையானதாகவும், அவசியமாகவும் இருக்கின்றது.

இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும் ....எச்சரிக்கைச் செய்தி.

முழுவதும் படித்துவிட்டு மற்றவர்களுக்குப் பகிரவும்..எனக்குத் தெரிந்த நண்பரின் வாழ்வில் நடந்த கொடுமை இது..Internetல் எல்லா தளங்களுக்கும் செல்பவர்..ஒருநாள், அத்தளத்தில் 'அழகான தமிழ்ப் பெண்கள்'என்ற தலைப்பில் இருந்த பகுதியைத் திறந்து பார்த்திருக்கிறார்..நான்கைந்து பக்கங்களைப் பார்வையிட்டவருக்கு ஆறாவது பக்கத்தில் காத்திருந்தது பேரதிர்ச்சி...ஆம்...!

சிறுபான்மையினர் எதிர்ப்பில்... அன்று பட்டேல் இன்று மோடி

வல்லபாய் பட்டேலுக்கு 182 மீட்டர் உயரத்தில் சிலை அமைக்கப்பட இருக்கிறது. இனிமேல் இதுதான் உலகிலேயே மிக உயரமான சிலையாக இருக்கப்போகிறது. சிலை வைக்கப்போவதாக அறிவித்துள்ளவர் யார் தெரியுமா?

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான்.

ஷைத்தானின் ஊசலாட்டம்...

நிலையாய் இருப்பவன், பிறப்பு, இறப்பு  பசி, தூக்கம், தேவை, மற்றும் சந்ததிக்கு அப்பாற்பட்ட தூய இறைவன் முதன் முதலாக மண்ணிலிருந்து மனிதனை ( ஆதம் நபியை ) படைத்தான். மேலும் சுவனத்து இன்பங்களை அனுபவிக்கச் சொல்லி, ஆறறிவையும் கொடுத்து பலகீனம் என்னும் ஒரு யதார்த்தமான ஒன்றையும் கூடவே கொடுத்து, ஷைத்தான், மலாயிக்கத், என இரண்டு தூண்டுதல்களையும் கொடுத்து சோதனை செய்தான்.

M.முஹம்மது ரியாஸ்-தஸ்லீம் பர்வீன்,திருமணம்

=======================================================================
மணமகன்:  M.முகம்மது ரியாஸ்.            மணமகள்:R.தஸ்லீம் பர்வீன்,
           S/O.R.முகம்மது இக்பால்,.                                 D/O.A.M.ரஹ்மத்துல்லாஹ்,
========================================================================
                                  இடம்:கோணுழாம்பள்ளம்,ஜாமிஆ மஸ்ஜித்.
                                                             நாள் :12.09.2013
========================================================================
 பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்.
========================================================================

வக்ஃப் சொத்துகளை அபகரிப்பது ஜாமீன் இல்லா குற்றம்! – திருத்த மசோதாவை மக்களவை அங்கீகரித்தது!

புதுடெல்லி: வக்ஃப் சொத்துகளை பாதுகாப்பதற்கும், வளர்ச்சிக்குமான வக்ஃப் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.

முன்னர் இம்மசோதாவை மாநிலங்களை அங்கீகரித்திருந்தது. குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டால் இம்மசோதா அமலுக்கு வரும். சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹ்மான் கான் தாக்கல் செய்த மசோதாவை பா.ஜ.க., இடது சாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் ஆதரித்தனர்.

இப்படியும் ஒரு சட்டமன்ற உறுப்பினர்!!

படத்தை பார்த்ததும் பட ஹீரோ என்று என்ன தோன்றுகிறதல்லவா ஆம்! இவர் ஒரு அரசியல் ஹீரோ.

நாஜிம், காரைக்கால் தெற்கு தொகுதியில் தொடர்ந்து 25 வருடங்களாக தோல்வியே இல்லாத திமுக சட்ட மன்ற உறுப்பினர். 

எதிர்மறைச் சூழலிலும் நேர்மையாய் இருப்போம்.

எதிர்மறைச் சூழலை மிக நுட்பமாய் முறியடிக்கும் வழி நாம் நேர்மறையாய் (positive) நடந்துகொள்வது தான்.எல்லா நேரங்களிலும் நம்முடைய சூழல் நாம் விரும்புவது போல் அமைந்துவிடுவதில்லை. பல நேரங்களில் எதிர்பாராமலே நாம் எதிர்மறைச் சூழலில் சிக்கிக் கொள்கிறோம்.

கண்ணியமிக்க காயிதே மில்லத்

கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களைப் போன்ற ஒரு தலைவர் தமிழ்மண்ணில் பிறந்தது நம் கண் முன்னே வாழ்ந்து மறைந்த காட்சிகளைக் காண நாம் பாக்கியம் செய்தவர்கள். இன்றைய இளைய சமுதாயத்தினர் நம்பி பின் தொடர்ந்து போகும் பல மாறுபட்ட இயக்கங்களின் தலைவர்கள் இத்தகைய தகுதிகளைப் பெற்று இருப்பார்களா என்பது பெரும் சந்தேகத்துக்குரியது. காயிதே மில்லத் அவர்களைப் பற்றி இன்னும் இரண்டொரு செய்திகளை சுட்டிக் காட்டிவிட்டு தொடர எண்ணுகிறேன்.

அண்ணா பிறந்த நாள்: முஸ்லிம் சிறைவாசிகளுக்கு விடிவு பிறக்குமா?

“இந்தியாவில் வாழும் முஸ்லிமாக இருந்தால் நீங்கள் சிறையில் இருக்கும் அபாயம் இரண்டு மடங்கு அதிகம். ஆளுங்கட்சி மதச்சார்பற்றது என்பது கூட முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தரவில்லை.” (இந்தியா டுடே வார இதழின் களஆய்வு அறிக்கை, டிசம்பர் 26, 2012)

இந்தியாவில் இன்று முஸ்லிம்களின் வாழ்வு நிலை மிகப் பெரும் போராட்டத்தின் ஊற்றாக மாறிக் கொண்டிருக்கின்றது. ஆம்! சுதந்திரத்திற்காக எவ்வளவோ தியாகங்கள் செய்து, ஆங்கிலேயர்களை விரட்டியடித்த ஒரு சமுதாயம் இன்று குற்றப் பின்னணியோடு வாழ்ந்து வருகிறது.

அரசு தலையிடாவிட்டால்… ஆயிரக்கணக்கான கோடி வக்ஃப் வருமானம் நஷ்டமாகும்!

புதுடெல்லி: மத்திய அரசு உளப்பூர்வமாக தலையிடாவிட்டால் வக்ஃப் சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமானத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று சச்சார் கமிட்டியில் சிறப்புப் பணி அதிகாரியாக பணியாற்றிய ஸக்காத் பவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் தலைவர் டாக்டர் ஸஃபர் மஹ்மூத் தெரிவித்துள்ளார்.

முற்றிலும் இலவசம் – அது என்ன? அதாங்க “அட்வைஸ்”

இளைஞர்களுக்குப் பிடிக்காதது, முதியர்வர்களுக்குப் பிடித்தது. தெரிந்தவர்களோ தெரியதவர்களோ எங்கு போனாலும், சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வரம்பு இல்லாமல் அனைவருக்கும் இலவசமாகக் கிடைப்பதும், அனைத்து காலங்களிலும் பொழியும் மழை அதுதான் “அட்வைஸ் மழை”.

கீழணை பாலம் பாதுகாப்பு அவசியம் : பாசனத்தை காக்க போக்குவரத்தை தடை செய்தால் என்ன?

கடலூர், நாகை மற்றும் தஞ்சை மாவட்டங்களின் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும், பழமையான கீழ்அணையை பாதுகாக்க, அப்பாலத்தின் மீது, போக்குவரத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும். போக்குவரத்திற்காக, மாற்றுப் பாலம் அமைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

மயிலாடுதுறையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளாம்!

மதுரை, மயிலாடுதுறையில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி
மும்பை:பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இலங்கை மற்றும் கடலோர மாநிலங்கள் வழியாக, தென் மாநிலங்களில் நுழைந்து, தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, மகாரஷ்டிர மாநில உளவுத் துறை எச்சரித்துள்ளது.

மத்திய அரசு சிறுபான்மையினருக்காக உருவாக்கும் 5 பல்கலைக்கழங்களில் ஒன்றை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்.

சிறுபான்மையினருக்காக மத்திய அரசு உருவாக்க உள்ள 5 பல்கலைக்கழகங் களில் ஒன்றை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் எம். அப் துல் ரஹ்மான் எம்.பி. இன்று கோரிக்கை வைத்தார்.

சிறுபான்மையின சமுகத் தின் கல்வி மேம்பாட்டின் அவசியம் குறித்து ஆய்வு செய்த மத்திய அரசு சிறுபான்மை யினருக்கென பிரத்யேகமாக நாடு முழுவதும் பல்கலைக் கழகங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்றும், அதன் முதற்கட்டமாக ஐந்து பல்கலைக் கழங்களை ஐந்து வெவ்வேறு மாநிலங்களில் உருவாக்க வேண்டும் என்றும் முடிவு செய்தது.