கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அக்டோபர் 5 – சென்னையில் சரித்திரம் படைக்கும் சாதனை மாநாடு .

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் 5-10-2013 சனிக்கிழமை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் எம்.எஸ்.எஃப் முஸ்லிம் மாணவர் பேரவை மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது.

மாணவர்கள் பங்கேற்கும் மாநில மாநாடா? – என்று சிலர் வினா தொடுக்கிறார்கள் – பலர் வியந்து மாநாட்டை எதிர் நோக்கியிருக்கிறார்கள். எம்.எஸ்.எஃப் முஸ்லிம் மாணவர் பேரவையில் உள்ள தம்பிகள் – நம் சமுதாயத்திற்கு பணிபுரிய வந்துதித்த தங்கக் கம்பிகள். சில ஆண்டுகளாக மாவட்ட அளவில் பயிலரங்கங் கள் என்று நடத்தி பேரும், பாராட்டும் பெற்று வந்தவர்கள்.

இப்போது முதல் முறையாக மாநில மாநாடு என்று அறிவித்து மிகுந்த உற்சாகத்துடன் களம் இறங்கி காரியங்கள் செய்து வருகிறார்கள். முதலில், சில இடங்களில் எம்.எஸ்.எஃப் மாநில மாநாடு என்று சுவர் விளம்பரம் எழுதினார்கள். அதற்கு பிறகு பார்த்தால் தமிழ்நாட்டின் பெருநகரங்கள், நகரங்கள், பேரூர்கள், சிற்றூர்கள் என்று எங்கு பார்த்தாலும் சுவர் விளம்பரங்கள் தெரிகின்றன! இதனை பார்த்து சிலர் வயிறும் எரிகின்றனர்.

நமக்குந்தான் பெரு வியப்பாக இருக்கிறது. மாநில அளவில் செய்யது பட்டாணி – ஒரு பொறியியல் கல்லூரி மாணவர் – தலைமையில் 12 பேர் அடங்கிய அமைப்புக்குழு தான் அமைத்தோம்.

அவரும், அவரது அணியினரும் எம்.எஸ்.எஃப் அமைப்புப் பணிகளில் முழுவீச்சுடன் ஈடுபட்டு முழுமூச்சுடன் பாடுபட்டு இப்போது எங்கு பார்த்தாலும் எம்.எஸ்.எஃப் என்பதை பார்ப்பவர்களின் கண்களில் படும்படி செய்திருக்கிறார்கள்.

சுவர் விளம்பரத்தில் ஆரம்பித்து ஸ்டிக்கரில் பரவி, டிஜிட்டல் பேனர்களில் ஒளிவீசி இன்றைக்கு தமிழக முஸ்லிம் சமுதாயத் தில் உள்ள அனைவரும் பேசக்கூடிய அளவுக்கு எம்.எஸ்.எஃப் மாநில மாநாட்டுச் செய்தி விளம்பரம் ஆகியிருக்கிறது.

இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது?

எம்.எஸ்.எஃப் தலைமை குழுவுக்கு ஆதரவும், ஒத்துழைப்பும், அறிவுரையும், அறவுரையும் ஒவ்வொரு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிர்வாகிகளும், சமுதாயப் பெரியோரும் சங்கைமிகுந்த உலமாகளும் வழங்கியுள்ளதே காரணமாகும்.

சமுதாயத்தின் சான்றோரும், ஆன்றோரும், பெரியோரும் மனம் மகிழும் அளவுக்கு மாணவர்கள் எழுச்சி பெற்றிருக்கிறார்கள்.

தமிழகம் முழுவதிலும் புதுச்சேரி உள்பட 43 மாவட்டங்கள் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என அமைப்பு விதிகள் கூறுகின்றன.

எம்.எஸ்.எஃப் மாநில மாநாட்டையொட்டி இந்த 43 மாவட்டங்களிலும், மாவட்ட எம்.எஸ்.எஃப். அமைப்பாளர்களை நியமித்து பட்டியலும் தந்திருக்கும் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் பாராட்டுக் குரியவர்கள்.

காலங்காலமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்காக சேவை செய்து வரும் மூத்த தலைவர்கள் சமயம் வரும்போது எப்படி சாதனை புரிவார்கள் என்பதற்கு இந்த மாவட்ட அமைப்பு பட்டியல் ஓர் அத்தாட்சியாகும்.

இதுதான் இன்றைய தேவை! இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் அரவணைப்பு தேடுகிறார்கள். அதனை மூத்தவர்கள் தரும்போது அவர்களுக்கு மத்தியில் புதியதொரு எழுச்சி பிறக்கிறது – இதனால் சமுதாயம் சிறக்கிறது.

ஒவ்வொரு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தத்தமது மாவட்டங்களிலிருந்து 200, 300, 500 மாணவர்களை மாநாட்டுக்கு அழைத்து வருவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடக்கின்றன என தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை தலைமை நிலையத்திற்கு வந்துள்ள தகவல்களை பார்க்கும் போது சென்னை பெரியார் திடல் மாணவர் பேரவை மாநில மாநாட்டுக்கு போதுமா? என்ற ஐயத்தை எழுப்பியிருக்கிறது.

போகிற போக்கைப் பார்த்தால், எம்.எஸ்.எஃப். மாநில மாநாட்டுக்கு இனிமேல் சென்னை தீவுத்திடல்தான் சரியான இடம் எனத் தெரிகிறது. இதை இன்று சமுதாயம் புரிகிறது.

அக்டோபர் 5 சனிக்கிழமையில் எம்.எஸ்.எஃப். மாநாடு வன்முறைக்கு பணியவும் கூடாது!

வன்முறைக்கு துணியவும் கூடாது! – என்று ஒங்கி ஒலிக்கப் போகிறது. இந்த ஓங்கார ஒலிதான் நாட்டில் எங்கும் இனி ஒலிக்கப் போகிறது.

காயிதெ மில்லத் காலத்தில் மாநில பொதுச் செயலாளராக செயல்பட்ட பன்னூலாசிரியர் ஏ.கே. ரிபாயி சாஹிப் அவர்களால் முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் என இந்த எளியேன் அறிவிக்கப்பட்டபோது நான் ஒருவன்தான் எம்.எஸ்.எஃப். உறுப்பினன் என்ற நிலை இருந்தது.

சிந்தனைச்செல்வர் சிராஜுல் மில்லத் காலத்தில் இன்றைய பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் மற்றும் மில்லத் இஸ்மாயில், கவிஞர் ஷேக் மதார், ஏ.எச். முஹம்மது இஸ்மாயில், காரை சஹாபுதீன், ஆடுதுறை ஜமால் இப்றாஹீம், வந்தவாசி அப்துல் காதர் ஷெரீப், கீழக்கரை எஸ்.கே.எஸ். அமீதுர் ரஹ்மான், இப்றாஹீம் மக்கீ, மேட்டுப்பாளையம் யு.எஃப். அப்துல் ஹக்கீம், ஹாங்காங் ஹசன், பள்ளபட்டி யூனுஸ், காயல் ஜரூக், லால்பேட்டை அப்துல் ரஹ்மான், திருச்சி பைஸுர் ரஹ்மான், கடையநல்லூர் ஹபீபுல்லாஹ் போன்ற தம்பிகள் மாணவர் பேரவையில் முன்னணியில் இருந்து ஒவ்வொரு கல்லூரியிலும் எம்.எஸ்.எஃப். அமைப்புப் பணியில் ஈடுபட்டனர். மீலாது விழாக்கள் நடத்தினர். மீலாது கட்டுரைப் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கினர்.

அன்றைக்கு இந்த மாணவர் பேரவையினர் குற்றாலத்தில் மாபெரிய மாநாடு ஏற்பாடு செய்து பனாத்வாலா சாஹிப் மற்றும் கேரளத் தலைவர்களை பங்கேற்கச் செய்து சாதனை புரிந்தனர்.

இன்றைக்கு அந்த மாணவர் பேரவையில் தோன்றிய சகோதரர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் இன்று மாநில பொதுச் செயலாளர் பொறுப்பில் பணியாற்றுகிறார்.

பொதுச் செயலாளர், மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான், மற்றும் ஹமீதுர் ரஹ்மான், லால்பேட்டை அப்துல் ரஹ்மான், நாகூர் ஆலியா சேக் தாவூது மiடிரக்காயர், கத்தார் கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மது, முகம்மது முஸ்தபா, சிங்கை கவுஸ் முகம்மது, ஆடிட்டர் முகம்மது ஹஸன், குவைத் பாரூக், ஷகீன்ஷா, பாங்காக் வாவு சம்சுதீன், ஹாங்காங் முகம்மது ஹஸன் ஆகியோர் பெரும் தூண்டு சக்தியாக இருந்து இன்றைக்கு செய்யது பட்டாணி தலைமையில் மாநில மாநாடு நடக்கிறது.

மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் எம்.எஸ்.எஃப். பிரதிநிதிகளுக்கு மதிய உணவை அளிக்கும் பொறுப்பை விருதுநகர் ஹோட்டல் அதிபர் இப்ராஹிம்ஷா பெருமன துடன் ஏற்று உற்சாகப்படுத்துகிறார்.

இது சரித்திரம் படைக்கும் சாதனை மாநாடு. மாணவர் எழுச்சிக்கு இது தொடக்கம். இனி ஆண்டுதோறும் நாடு வியக்க எழுச்சி மாநாடு நடக்கும். புதிய சரித்திரம் படைக்கும். -கே.எம்.கே.

0 கருத்துகள்: