கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

லைலத்துல் கத்ர் இரவு.

ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாளாகிய லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் அறிவோம். எனினும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து அதை நாம் பெற வேண்டும் எனும் ஆவலில் நாம் செயல்பட வேண்டும். அல்லாஹ் இதைப்பற்றி குர் ஆனில் கூறுவதையும் முறையாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

இஃதிகாஃப் எனும் இறை தியானம்!

புனித ரமலான் மாதத்தின் முதல் இருபது நோன்புகளை முறையாக நோற்ற நிலையில், ஈமானை உறுதியாக்கிக் கொண்டும் இறைவனை நெருங்க வைக்கும் அமல்களை அதிகப் படுத்திக் கொண்டும் ஹலாலான உணவுகளை உண்பதையும் தண்ணீர் முதல் ஏனைய அனைத்து ஹலாலான பானங்களைப் பருகுவதையும் ஹலாலான மனைவியை/கணவனைக் கூட நோன்பு வைத்த நிலையில் அணுகுவதைத் தவிர்த்து, தமக்கு விருப்பமும் நாட்டமும் தேவையானவையுமான இவற்றை நோன்பு எனும் இறை அருளின் மூலம் விட்டு விலகியிருக்கப் பழகியுள்ளோம்.

காவு கொடுக்கும் காவி அரசியல்!

பா.ஜ.க உறுப்பினர் ஆடிட்டர் ரமேஷ் கொலையை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என இன்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டது ஏன்? மற்றும் தமிழகத்தில் உள்ள மற்ற பா.ஜ.க உறுப்பினர்களும், இந்து முன்னணியினரும் படுகொலை செய்யப்பட்டது ஏன்? கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஆறு பேர்கள் படுகொலை செய்யப்பட்டதன் நோக்கம் என்ன? உண்மையான குற்றவாளிகள் யார்? என்பதை எல்லாம் மறைத்து வைத்துவிட்டு, 'இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் எங்கள் இந்து முன்னணியினரை கொலை செய்து இருக்கிறார்கள்' இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்தே தீரவேண்டும் என்று ஆவேசப்படும் பா.ஜ.க அராஜகவாதிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பு என்கிறது தமிழக அரசு.

“பத்ரு” களம்…! தரும் படிப்பினை!

இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய “பத்ரு” போர் ரமழான் 17ல் நடைபெற்றது. ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் நோன்பு கடமையாக்கப்பட்டது. சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டிய அந்த “பத்ரு” போரின் வயது இன்றைக்குச் சற்றொப்ப 1432 ஆண்டுகள். இறை மார்க்கத்தை மேலோங்கச் செய்யும் அறப் போராட்டத்தில் அயராது ஈடுபடும் நெஞ்சுரத்தை அளிப்பதற்காகவே இஸ்லாமிய வழிபாடுகள் அனைத்தும் விதியாக்கப்பட்டுள்ளன. எனவேதான் நோன்புக்கும் அறப்போருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை பார்க்க முடிகிறது.

ரமழானில் சில பிழையான நடத்தைகள்

ரமலான் அருள் நிறைந்த மாதம். இம்மாதத்தில் பலர் அல்லாஹ்வை நெருங்குவதற்கான நற்செயல்களில் அதிகம் கவனம் செலுத்தினாலும் சிலர் இம்மாதத்தில் சில பிழையான, ரமலான் மாதத்தின் புனித தன்மைக்கு இழுக்கு ஏற்படுத்துகின்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். இத்தகையவர்களில் அதிகமானவர்கள் தாம் செய்யும் தவறை அறியாமல் இருப்பதும் இத்தவறுகள் ஒரு தலைமுறையினூடாக அடுத்த தலைமுறையினருக்கு கடத்தப்படுவதற்கு காரணமாக அமைகின்றது.

இஸ்லாமிய இயக்கங்கள் பத்திரிகையாளர் சந்திப்பு


தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் 23.07.2013 அன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ரமளான் தொடர்பான கட்டுரைகள், புத்தகங்கள், வீடியோ/ஆடியோ மற்றும் மின்புத்தகம்


எங்கோ-எதற்கோ-யாருக்கோ கொட்டப்படும் ஏழைவரி!


ஐம்பெரும் கடமைகளில் ஜக்காத் ஏழைகளின் நலனுக்காக ஏகன் அல்லாஹ் ஏவிய முக்கியக் கடமை. ஈந்துவந்து இன்பம் காண்பதே ஈமான்கொண்டோரின் சீமான்தனம் என்ற சீரியக் கருத்தை வல்ல நாயனின் அருள்மறையும் அகிலத்தின் அருட்கொடையாய் அவனியில் அவதரித்த நம் அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகிய நடைமுறையும் நமக்கெல்லாம் கற்பித்துத்தருகின்றன.

நான்காவது முறையாக அணைக்கரை பாலம் விரிசல்! சுதந்திர இந்தியாவின் அவலம்!


நான்காவது முறையாக அணைக்கரை பாலத்தில் (அணை) நெரிசல் ஏற்ப்பட்டு பொதுமக்களை அவதிப்பட வைத்திருக்கிறது. இதற்கு காரணம் பொதுப்பணித்துறை அதிகாரிகளா? காவல்துறையா? பொதுமக்களா? என ஆய்வு செய்வதற்கு முன்பு பாலத்தின் வரலாற்றை சற்று சுறுக்கமாக பார்ப்போம்.

சவூதியில் 40 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அங்கீகாரம்.


சவூதி அரேபியாவில் பணியாற்றும் சுமார் 40 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களை அந்நாட்டு அரசு முறைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரமும் பாதுகாப்பும் கிடைத்துள்ளது.

ரமலான் மாதத்தில் உலகை உலுக்கிய ஐந்து வரலாற்று நிகழ்வுகள்….


1.பத்ர் போர் :
இன்று நாம் முஸ்லிம்களாக வாழ்வதற்கு அன்று அம்முந்நூறு சஹாபாக்கள் தங்களின் உயிரையும் அல்லாஹ் உடைய பாதையில் தியாகம் செய்வதற்கு முன்வந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட எதிரிகளை வீழ்த்தி இஸ்லாம் என்றும் நிலைத்திருக்க வித்திட்ட அப்போரும் இப்புனிதமிகு ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 17 இல்தான்.

துபாயில் ஈமான் அமைப்பு வழங்கி வரும் தமிழகத்து நோன்புக் கஞ்சி


துபாய் : துபாயில் ஈமான் என்றழைக்கப்படும் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் நோன்பாளிகளுக்கு பாரம்பர்ய தமிழகத்து நோன்புக் கஞ்சியினை தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) வழங்கி வருகிறது.

இது குறித்து ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ.லியாக்கத் அலி தெரிவித்ததாவது ஈமான் அமைப்பு கடந்த 1976 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. கல்வி மற்றும் சமுதாய மேம்ப்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மறுமலர்ச்சி தரும் ரமளான்


புண்ணியம் பூத்துக் குலுங்கும், நன்மையும் நற்செயலும் செழிக்கும், இறையச்சமும் தியாகமும் வளர்க்கும் புனித ரமளான் வந்துவிட்டது. ஈடு இணையற்ற நன்மைகளை வாரிச் சொரியும் ரமளான் கிடைத்து விட்டது. மனிதருள் ரமளான் தரும் வாழ்க்கை மாற்றங்கள் எண்ணிலடங்காதவை. அல்லாஹ் தந்த அருட்கொடைகளில் ரமளான் மாதம் மறக்க முடியாததாகும். ரமளானின் மேன்மையையும், சிறப்பையும் அறிந்தவர்களெல்லாம் காலம் முழுதும் ரமளானாக இருக்கக் கூடாதா? என ஏங்கித் தவித்தார்கள். ஸஹாபாக்களும், இறை நேசர்களும், ஞானிகளும் ரமளானில் நோன்பு வைப்பத்திலும் திருக்குர்ஆன் ஓதுவதிலும் இரவெல்லாம் நின்று வணங்குவதிலும் அவர்களுக்கிருந்த பேரானந்தமும், பேராசையும் சொல்லில் வடிக்க முடியாதவையாக இருந்தன.

அறநெறிகளைத் தூண்டும் ஆன்மீக நோன்பு


நோன்புக் கடமை
  “நிலந்தெளியும் பஜ்ருக்கு சற்று முன்பிருந்து பகல் முழுவதும் – சூரியன் மறையும் வரை உண்ணல், பருகல், உடலுறவு கொள்ளுதல் போன்ற நோன்பை முறிக்கும் எதுவுமின்றி, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நோன்பு நோற்றல்” எனும் இக்கடமை ஹள்ரத் ஆதம் நபிக்கு சொர்க்கத்திலிருந்தும் தொடர்ந்து உலகில் எல்லா நபிமார்களுக்கும் கடமையாக்கப்பட்டிருந்ததாக திருக்குர்ஆன் நமக்கு எடுத்தியம்பிக் கொண்டிருக்கிறது.