கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

உடல் நலம்.

உடல் நோய்கள் இரு வகைப்படும். ஒன்று; மனித, மிருகங்களின் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்தவை. இவற்றிற்கு எந்த மருத்துவரின் சிகிச்சையும் தேவையில்லை. இவை பசி, தாகம், குளிர், களைப்பு ஆகியன. இவற்றிற்கு இயற்கையான பரிகாரங்கள் உள்ளன. மற்றொன்று; மருத்துவரின் ஆலோசனையும், சிகிச்சையும் தேவைப்படும் நோய். உடலின் உஷ்ணமும், குளிர்ச்சியும், வறட்சியும், ஈரமும் ஏற்றத்தாழ்வு நிலையடையும்போது மனிதனின் மனநிலை பாதிப்புக்குள்ளாகிறது. இதனால் மறைமுகமான அல்லது வெளிப்படையான நோய்கள் ஏற்படுகின்றன.

இஸ்லாமிய விரோத வலைத் தளங்களை எவ்வாறு கையாள்வது?

தற்காலத்தில் இஸ்லாமிய விரோத வலைத் (Anti- Islamic sites) தளங்கள் தாராளமாக மலிந்துவிட் டன. இஸ்லாமிய விரோத பிரசாரம் என்பது இன்று நேற்று துவங்கியதொன்றன்று, இஸ்லாம் தோன்றிய காலம் முதல் இந்த செயற்பாடுகளும் துவங்கிவிட்டன. ஆனால் தொழில் நுட்ப வளர்ச்சியுடன் இந்த இஸ்லாமிய விரோத சக்திகளின் செயற்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. சாதா ரண ஈமானிய உணர்வு உள்ளவனே கொதித்தெழுகின்ற அளவுக்கு இவர்களது செயற்பாடுகள் வியாபித்து விட்டன.

திருக்குர்ஆன் தெளிவுரை : அறிவுக்கு அறை கூவல் !


”நீங்கள் சிந்தித்துப்பாருங்கள், ஆராய்ந்து பாருங்கள். உற்றுணர்ந்து பாருங்கள்’’ என்று மனிதனுடைய அறிவுக்கு அதிகமாக வேலை கொடுக்கும் திருவேதம் திருக்குர்ஆன்.

மனிதனுடைய அறிவு முதிர்ச்சி பெறாத ஒரு காலத்திலேயே இறையுண்மையை நிலைநாட்ட, மனிதனுடைய சக்திக்கு மீறிய அவனுக்கு அச்சந்தரக்கூடிய சில நிகழ்ச்சிகளோ, வார்த்தைகளோ போதுமானவைகளாக இருந்தன. அற்புதங்களைக் கொண்டே மக்களை நேர்வழியில் செலுத்தப்பட்டது

இணையதளம், ஃபேஸ்புக் பயன்பாடுகளும் முஸ்லிம்கள் அணுகவேண்டிய முறைகளும்.


எழுத்தும், பேச்சும் மாபெரும் அறிவாயுதங் களாகும். இவ்விரு திறமைகளும் ஒருவருக்கு அமையுமானால் அவர் மிகச்சிறந்த தலைவராக வும், வழிகாட்டியாகவும், நிர்வாகியாகவும் உருவாக வாய்ப்புகள் உண்டு.

இரண்டையும் சரிவரப் பயன்படுத்தாதவர்களும், தவறாகப் பயன்படுத்துபவர்களும் வாய்ப்பு களை இழந்தவர்களின் பட்டியலில்தான் இடம் பெறுவார்கள்.

தொழுகையாளிகளே உங்களுக்காக காத்திருக்கும் நற்பாக்கியங்கள்!


மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி 
‘பிலாலே! தொழுகைக்காக இகாமத்துச் சொல்லும்; தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் தான் நாம் மன நிம்மதி பெறுகின்றோம்’ (அபூதாவுத்).

இது நமது உயிரிலும் மேலான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வார்த்தைகளாகும். உண்மையில் முஃமினுக்கு தொழுகையில் தான் மன நிம்மதி இருக்கின்றது என்பதை இந்தக் கூற்று உறுதி செய்கின்றது. ஆனால் இன்றைய நமது தொழுகைகளையின் நிலையை கொஞ்சம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அவைகள் நமக்கு சுமைகளாக மாறிவட்டனவா? அல்லது அதன் மூலம் உண்மையில் மன நிம்மதியைத் தான் பெற்றுக்கொண்டிருக்கின்றோமா?

இஸ்லாமியப் பெண்கள் எப்படிங்க விவாகரத்து செய்ய முடியும்..?


திருமணமென்னும் வாழ்க்கை ஒப்பந்தத்துடன் வாழ்விலே சங்கமிக்கும் ஓர் ஆணும் பெண்ணும், பரஸ்பரம் நேசித்து.. இன்பங்களைப் பகிர்ந்து.. துன்பங்களில் பங்கெடுத்து.. துயர‌ங்களில் தோள் கொடுத்து, ஓருயிர் ஈருடலாய் ஒருமித்து வாழ்வதே இனிய இல்வாழ்க்கையாகும். இரத்த பந்தமில்லா ஓர் அந்நியம்.. திருமண பந்தத்தின் மூலம் அந்நியோன்யமாகி, மற்றெல்லா உறவுகளையும் நட்புகளையும்விட நெருக்கமாகி, அந்தரங்க உணர்வுகள் வரை ஊடுருவி இரண்டறக் கலந்துவிடும் கணவன்-மனைவி உறவுதான் சந்தோஷமான குடும்ப சூழ்நிலையின் அஸ்திவாரமாக உள்ளது. ஆனால் அந்த அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிடுமானால் அன்பும், மன அமைதியும் நிலவும் வாழ்க்கை என்பது கேள்விக்குறியே!

இந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை!


இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு விமானம் மூலம் செல்லும் பயணிகள் எரிச்சலாக கருதும் விஷயங்களில் ஒன்றான குடியேற்ற படிவம் நிரப்புதல் சீக்கிரம் முடிவுக்கு வரும் என தெரிய வந்துள்ளது. சாதாரணமாக இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்பவர்கள் தங்கள் பொருட்களை எடை போடும் போதே குடியேற்ற படிவம் கொடுக்கப்படும். அதில் தங்கள் கடவுசீட்டு விபரம், செல்லும் இடம், விமான விபரங்கள் முதலியவை நிரப்பப்பட வேண்டும்.

நியூயார்க் டைம்ஸ் - இஸ்லாம் - பிரான்ஸ்


CRÉTEIL பகுதியில் உள்ள சஹாபா மசூதி 
ஒன்றை தீவிரமாக எதிர்ப்பதால் அது விளம்பரமாக அமைந்து எதிர்க்கப்பட்டதின் வளர்ச்சிக்கு உதவி விடும் என்பது உண்மையானால் அது இஸ்லாமிற்கு மிக சரியாகவே பொருந்தும். எதிர்ப்புகளின் வளர்ச்சியில் வளர்ந்த மார்க்கம் இஸ்லாம்.

பெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்.


அ. முஹம்மது கான் பாகவி
முன்பெல்லாம் பெற்றோர்கள் ஏழெட்டுக் குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியோடுதான் வாழ்ந்துவந்தார்கள். பிள்ளைகளுக்குச் செல்லம் கொடுத்த அதேநேரத்தில், கண்டிப்பும் அவர்களது வளர்ப்பில் இருந்தது. பல பிள்ளைகளிடையே பாசம் பகிர்ந்து போனதாலோ என்னவோ, அளவுக்கதிகமாகச் செல்லம் காட்டியதில்லை. இதனால்,  பொறுப்புள்ளவர்களாக அவர்களின் பிள்ளைகள் வளர்க்கப்பட்டார்கள். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம்.

தேர்தல் சீர்த்திருத்தம் தேவை! டெல்லியில் மமக, முஸ்லிம் லீக்,முழக்கம்!


தலைநகர் டெல்லியில் கடந்த மார்ச் 6 மற்றும் 7 தேதிகளில் தேர்தல் சீர்த்திருத்திற்கான தன்னார்வ அமைப்பான ‘CERI’ சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தற்போது இந்தியாவில் இருக்கும் தொகுதி வாரி தேர்தல் முறைக்கு மாறாக, ஜெர்மனி, சுவீஸ் போன்ற நாடுகளில் நடைமுறையில் இருக்கும் விகிதாச்சார அடிப்படையிலான தேர்தல் முறையை இந்தியாவில் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற அக்கருத்தரங்கில் மமக சட்டமன்ற கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்!


சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும்!
“உங்களில் எவரேனும் சபைக்குச் சென்றால் ஸலாம் கூறட்டும். அங்கிருந்து எழ நாடினாலும் ஸலாம் கூறட்டும்.  ஏனெனில் முன்னால் (ஸலாம்) கூறியது பின்னால் (எழுவதற்கு கூறியதாக) ஆகாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத், திர்மிதி, இப்னுஹிப்பான்.

வேறு மதத்திலிருந்து இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்


இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவருமான பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் இன்று (27.02.2013) பிற்படுத்தப்பட்ட ஆணையத் தலைவர் நீதியரசர் ஜனார்த்தனன் அவர்களை நேரில் சந்தித்தார்கள்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிகளின் தியாகம்…..


அந்நியனுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சிக் கட்டிலும், அதிகார இடங்களிலும் அமர்ந்து கொண்டு சுதந்திரத்திற்கு தங்கள் எதிர்கால சந்ததியினரின் நலன்களை அர்ப்பணித்த சமுதாயத்தை அடக்கியாகின்ற அவலம் இங்குமட்டும் சுதத்திரத்திற்கு வாளேந்திய சமுதாயம் வாழ்வுரிமை கேட்டு வீதியில் நிற்கும் அவலம் இங்கு மட்டுமே.