கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அசதுத்தீன் உவைசியின் ஆணித்தரமான உரை.

                      

ஐந்து நிமிடப் பேச்சு அது. ஆனால் ஆணித்தரமான, அழகான, நிறைவான பேச்சு.

மணிச்சுடர், இனி தனிச்சுடர் தான்!

முஸ்லிம்கள் சிறுபான்மையினர் இல்லையா?

நஜ்மாவின் கருத்து எல்லா மதச் சிறுபான்மையினரையும் நோக்கி விடுக்கப்பட்டதுபோல்தான்

‘இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்லர் - பார்சிகளே சிறுபான்மையினர்' என்ற சிறுபான்மையினர் நலத் துறையின் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நஜ்மா ஹெப்துல்லாவின் கருத்து, பெரும் சர்சையை எழுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் தகவல்தொடர்பு ஆலோசகராக இருந்து, பிறகு பா.ஜ.க-விலிருந்து விலகிய சுதீந்திரா குல்கர்னி இதுகுறித்து தனது ட்வீட்டர் பதிவில் ‘அது உண்மையெனில், 69,000 பார்சிகளுக்காக கேபினட் தகுதியில் ஒரு அமைச்சர் தேவையா? உண்மையை உணருங்கள் நஜ்மா’ என்று விமர்சித்துள்ளார்.