கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கோவையில் மது எதிர்ப்பு பிரச்சாரம்

தலை நிமிர்ந்து நடக்க வேண்டுமா?
தள்ளாடி நடக்க வேண்டுமா?


"செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே" என்று பாடினான் மகாகவி. ஆனால் இன்றோ "செந்தமிழ் நாடெனும் போதினிலே எங்கும் சாராயம் ஓடுது வீதியிலே" என மாற்றி வாசிக்கும் அளவிற்கு எங்கு பார்த்தாலும் மதுக்கடைகள் நிரம்பி வழிகின்றது. மது வீட்டுக்கும் நஷ்டம், நாட்டிற்கும் நஷ்டம், அரசுக்கு மட்டும் கொள்ளை இலாபம்?


போதை ஏற ஏற தடுமாறுகிறது இளைஞனின் நேரான பாதை. அப்பாவி மனைவிமார்களின் கண்ணீர் துளிகளால் அரசு மதுக்கடையின் கல்லாப்பெட்டிகள் நிரம்பி வழிகிறது. மதுக்கடை வாசல்களில் வீசுகிறது மரணத்தின் வாசம். சிறந்த குடிமகன்களை உருவாக்க வேண்டிய அரசாங்கம் சீரழிந்த குடிகாரர்களை உருவாக்கி வருகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தேசத்திற்கே முன்மாதிரியாக இருந்த தமிழகம், இன்று மது விற்பனையில் தேசத்திலேயே முதலிடம் பிடித்துள்ளது என்பது எவ்வளவு வெட்கக் கேடானது.


"மது தீமைகளின் தாய்" என்று இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள். மது விற்பனை அதிகரிக்க அதிகரிக்க கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற சமூக தீமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மது விற்பனையில் அரசாங்கத்தின் வருமானம் வேண்டுமானால் உயரலாம், ஆனால் காற்றில் பறப்பதோ தேசத்தின் மானம். தேசத்தின் பல இடங்களிலும் "விலைமதிப்பற்ற மனித உயிர்களை மது குடித்துக் கொண்டிருக்கிறது".


இந்த சூழ்நிலையில், மதுவிற்கு எதிராக அணி திரள வேண்டியது மனித நேய மிக்கவர்களின் அவசியமான பணியாகும். தீமைகளின் ஆணிவேரான மதுவை வெட்டி சாய்ப்பதற்கு நல்லவர்கள் ஓர் அணியில் திரள வேண்டும். மக்களின் பொருளாதாரத்தை சுரண்டும் லாட்டரியை அரசு தடை செய்ததைப் போன்று பொதுமக்களை போதை எனும் படுகுழியில் தள்ளும் மது விற்பனையையும் அரசாங்கம் தடைவிதிக்க வேண்டும். நாளைய தலைமுறை தலை நிமிர்ந்து நடக்க வேண்டுமா? தள்ளாடி நடக்க வேண்டுமா?


சரியான முடிவெடுப்போம்.
மதுவுக்கு எதிரான பிரச்சாரத்தில் நம் கரங்களை ஒன்றிணைப்போம்.




மது எதிர்ப்புப் பிரச்சார இயக்கம் :
ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த்

உணரப்படாத தீமை: வட்டி

இன்றைய உலகில் பணம் அதிகமாக சேர்க்கவேண்டும் என்ற பேராசையால் பல தீமைகள் மனித வர்க்கத்தால் தீமை என்றே உணரப்படவில்லை. இவற்றில் சினிமா, வட்டி, வரதட்சனை போன்றவை முதலிடம் வகிக்கின்றன. இன்னும் சில தீமைகள் தீமை என்று தெளிவாக அறிந்தும் பணத்தின் மீதுள்ள பேராசையால் அரசாங்கமே அத்தீமைகளை அங்கீகாரம் செய்துள்ளது. அவற்றுள் முக்கியமானவை லாட்டரி, குதிரைப் பந்தயம், விபச்சாரம், குடி போன்றவையாகும். இத்தகைய அரசாங்கத்திற்கு சமூக நலனைவிட பணமே பெரிதாகத் தெரிகின்றது.

தனி மனிதன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் அது குற்றம், ஆனால் அரசாங்கமே அதை லாட்டரி, குதிரைப் பந்தயம் என்ற பெயரில் செய்தால் அது குற்றமில்லை. இரட்டை வேடம் குளறுபடி ஆகியவற்றின் மொத்த உருவமே இன்றைய அரசாங்கம்.

அரசாங்கமும் தனிமனிதனும் வட்டியை ஒரு தீமையாகவே கருதுவதில்லை. ஆனால் சமுதாயத்தில் இது எவ்வளவு பெரிய சுயநலவாதிகளையும், பேராசைக்காரர்களையும், சகோதர மனப்பான்மை அற்றவர்களையும், பொருளாதார வீழ்ச்சியையும் உருவாக்குகிறது என்பதை யாரும் உணருவதில்லை ஏன்? அரசாங்கத்திற்கும் இது மிகப்பெரிய இழப்பாகும்.

இத்தகைய சமுதாயத் தீமையாகிய வட்டியை விட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் விலகாமல் இருப்பது மிகவும் வேதனைக்குறியதே. இதற்கு முக்கிய காரணம் பலர் இதை ஒரு பெரும் பாவமாகக் கருதவில்லை என்பதேயாகும். ஆனால் இறைமறையும், நபி மொழியும் இதை மிகப்பெரும் பாவமாகக் கருதி மனித குலத்தை எச்சரிப்பதை பாருங்கள்.

ஒட்டுமொத்தமாக எல்லா வட்டியும் ஹராம் என்று கூறும் வசனம்:


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَأْكُلُواْ الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً وَاتَّقُواْ اللّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

ஈமான் கொண்டோரை! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக்கொண்டால்) வெற்றியடைவீர்கள். (3:130)

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لاَ يَقُومُونَ إِلاَّ كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُواْ إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَن جَاءهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىَ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللّهِ وَمَنْ عَادَ فَأُوْلَـئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ

யார் வட்டி(வாங்கித்) தின்றார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய்) எழமாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைத் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின்பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (2:275)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ وَذَرُواْ مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையான மூஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டுவிடுங்கள். (2:278)

فَإِن لَّمْ تَفْعَلُواْ فَأْذَنُواْ بِحَرْبٍ مِّنَ اللّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُؤُوسُ أَمْوَالِكُمْ لاَ تَظْلِمُونَ وَلاَ تُظْلَمُونَ

இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது. நீங்கள் தவ்பா (இப்பாவத்திலிருந்து) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல்-முதல் உங்களுக்குண்டு. (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள்- நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (2:279)

உண்மை முஸ்லிம் அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிய துணிவானா என்பதை வட்டி தொழில் செய்யும் முஸ்லிம்கள் உணர்வார்களா? உணர்ந்து விட்டால் அவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் தவ்பா (இப்பாவத்திலிருந்து) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல்-முதல் உங்களுக்குண்டு. (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள்- நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.

மேலும் பலர் வட்டியும், வியாபரமும் ஒன்றுதான் என்றும் திருமறையில் வட்டியைப்பற்றி கூறிய வசனம் இக்காலத்திற்கு பொருந்தாது. அது அன்றைய நிலையில் உள்ள கொடும் வட்டியைத்தான் குறிக்கும். அதுவும் இரட்டிப்பு (கூட்டு) வட்டிதான் தடை செய்யப்பட்டுள்ளது என்று பணத்தின் மீது கொண்ட பேராசையால் தாமாகவே தாம் செய்யும் தவறுகளை நியாயப்படுத்திக் கொள்கின்றனர். இன்னும் சிலர் வட்டி வாங்குவது தான் பாவம். கொடுப்பது பாவமில்லை என்றும் வட்டியை அடிப்படையாகக் கொண்ட வங்கியில் வேலை செய்வது கூடும் என்றெல்லாம் கருதுகின்றனர்.

வட்டி வங்குவது, வட்டி கொடுப்பது, வட்டிக் கணக்கை எழுதுவது வட்டியின் சாட்சிகள் ஆகியோரை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் பாவத்தில் சமமானவரே. அறிவிப்பாளர்: ஜாபிர்(ரழி) ஆதாரம்: முஸ்லிம், திர்மிதீ, முஸ்னத் அஹ்மத்

இறைவன் நான்கு பேர்களை சுவர்க்கத்திற்கோ அல்லது அதனுடைய சுகத்தை அனுபவிப்பதற்கோ விட மாட்டான். அவர்கள்

1. குடிப்பதை வழமையாகக் கொண்டவர்கள்.

2. வட்டி வாங்கித் தின்றவர்கள்.

3. அநாதைகளின் சொத்தை அநியாயமாக அபகரித்தவர்கள்.

4. பெற்றோரைத் துன்புறுத்தியவர்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: ஹாக்கிம்)

வட்டி என்றால் என்ன?

بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ

தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் மனிதர்களுக்கு அருளப்பட்டதை (நபியே!) நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். (16:44)


மேலே உள்ள இறைவசனத்தின் மூலம் குர்ஆனில் வரும் வட்டிக்கு விளக்கம் தர அங்கீகாரம் பெற்ற நபி(ஸல்) அவர்கள் அதைப்பற்றி கூறுவதை கீழே காண்போம். பலவித கொடுக்கல் வாங்கலில் நபி(ஸல்) அவர்கள் இவையெல்லாம் கூடும், இவையெல்லாம் வட்டி (ஹராம்) கூடாது என்று கூறியுள்ளதால் குறுகிய கண்ணோட்டத்தில் அணுகாமல் எல்லா ஹதீஸ்களையும் கருத்தில் கொண்டு அதைப்பற்றி அறிய முற்படவேண்டும்.

வட்டி எல்லாம் தவணை முறையில்தான். கைக்குகை மாற்றும் பொருட்களில் வட்டி இல்லை. (உஸாமத்துபின் ஜைத் (ரழ) நூல்: புகாரி, முஸ்லிம்

தங்கத்தை தங்கத்திற்கு பதிலாகவும், வெள்ளியை வெள்ளிக்கு பதிலாகவும், மணிக்கோதுமையை மணிக்கோதுமைக்கு பதிலாகவும், தொலிக்கோதுமையை தொலிக்கோதுமைக்கு பதிலாகவும், பேரிச்சம் பழத்தை பேரிச்சம் பழத்திற்கு பதிலாகவும், உப்பை உப்பிற்கு பதிலாகவும் சம எடையில், சம தரத்தில், கரத்திற்கு கரம் விற்றுக்கொள்ளுங்கள். இவ்வினங்கள் பேதப்படுமானால் கரத்திற்கு கரம் நீங்கள் விரும்பிய பிரகாரம் விற்றுக் கொள்ளுங்கள். எவர் கூடுதலாகக் கொடுக்கவோ அல்லது கூடுதலாக வாங்கவோ செய்த போதினும் அது வட்டியாகும். விற்பவரும் வாங்குபவரும் சமமானவரே. (உபாதாத்துப்னிஸ்ஸாமித் நூல்: முஸ்லிம், திர்மிதி)

நபி (ஸல்) அவர்களிடம் பிலால் (ரழி) அவர்கள் பர்னீ வகையைச் சார்ந்த பேரீச்சம் பழத்தை கொண்டு வந்தனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இது உமக்கு எங்கிருந்து கிடைத்தது? என்று வினவினர். அதற்கு அவர்கள் என்னிடம் தரத்தில் குறைந்த பேரிச்சம் பழம் இருந்தது. அதில் நான் இரண்டு மரக்கால் கொடுத்துவிட்டு அதற்கு பகரமாக ஒரு மரக்கால் பர்னீ பேரிச்சம்பழம் வாங்கினேன் என்றார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் ஆ! இது வெளிப்படையான வட்டி முழுக்க முழுக்க வட்டி, இவ்வாறு செய்யாதீர், இவ்வாறு நீர் செய்ய நாடினால் முதலில் (உமது) பேரிச்சம் பழத்தை விற்றுவிட்டு பின்னர் இதனை வாங்கிக் கொள்வீராக! என்று கூறினார்கள். (அபூ ஸயீது நூல்: புகாரி, முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக வட்டிப் பொருள் வளர்ந்த போதிலும், உண்மையில் அதன் இறுதிப் பலன் நாசம்தான். (இப்னுமஸ்ஊத் (ரழி). திர்மிதி, நஸயீ)

வட்டித்தொழில் செய்து சாப்பிட்டவர் மறுமையில் தட்டழிந்து தடுமாறும் பைத்தியக்காரராகவே எழுப்பப்படுவார். (இப்னு அப்பாஸ் (ரழி). இப்னு அபீஹாத்திம் )

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு ஒரு காலம் வரும். அக்காலத்தவர் தமது சம்பாத்தியம் ஹலாலானதா? ஹராமானதா? முறையானதா? முறையற்றதா? என்பனவற்றைப் பொருட்படுத்தாது இருப்பர். (அபூஹுரைரா (ரழி) புகாரி)

வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத்(ரழி) ஆதாரம்:முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

மக்கள் மீது நிச்சயமாக ஒரு காலம் வரும். அக்காலத்தில் வட்டி உண்பவனைத் தவிர வேறெவரும் இருக்கமாட்டார்கள். அவ்விதம் வட்டி உண்ணாதிருப்பவர்மீது வட்டி உண்பவரின் மூச்சாவது படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: அபூதாவூத், நஸயீ

இத்தகைய பெரும்பாவமான வட்டியிலுருந்து விலகி இன்றைய உலகில் நாம் வாழமுடியாது. அப்படி வாழமுற்பட்டால் நாமும் நமது சமுதாயமும் மிகப்பெரும் பொருளாதர வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்று அஞ்சவேண்டியதில்லை. ஏனெனில் அல்லாஹ்வும் அவனது தூதரின் வாக்கும் எக்காலத்திலும் பொய்யாகாது.

يَمْحَقُ اللّهُ الْرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ அல்லாஹ் வட்டியை (எந்த பரகத்தும் இல்லாமல்) அழித்து விடுவான். இன்னும் தான தர்மங்களை பெருகச் செய்வான். (2:276)


நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: இறைவன் எனது உள்ளத்தில் போட்டான். நிச்சயமாக எந்த நபரும் அவரது ரிஜ்கு முடியாதவரை ஒருபோதும் மரணிக்க முடியாது. ஆகவே, அல்லாஹ்வை பயந்து ரிஜ்கை சம்பாதிக்கும் வகையில் ஹலாலான (ஆகுமான) சிறந்த முறையைக் கடைபிடிப்பீர்களாக! (இப்னுமஸ்வூத்(ரழி) நூல்: பைஹகீ, ஸ்ரஹுஸ்ஸுன்னா)

எனவே நாம் எவ்வளவு அதிகமாக கஷ்டப்பட்டு உழைத்தாலும், இறைவனால் நமக்கு அளித்த ரிஜ்க்கு மேல் அடைய முடியாது. அடையுமுன் யாரும் மரணிக்க முடியாது. ஆகவே வட்டி என்ற ஹராமை தவிர்த்து ஹலாலான வழியிலேயே முயற்சி செய்வோம். நமக்குள்ள ரிஜ்க்கு நம்மை வந்தே அடையும் என்ற நபி(ஸல்) அவர்களின் வார்த்தையில் உறுதிகொண்டு உழைப்போமாக
thanks readislam

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் மின்னஞ்சல் முகவரி

பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்வதற்காக தமிழ சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கு தனித் தனி மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்படும் என சமீபத்தில் தமிழக அரவு அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து தற்போது 234 சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டது அதன் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் முகவரியை உருவாக்குது பெரிய விசயமல்ல.. சம்பந்தப்பட்ட எம்எல்ஏ க்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் சரியான பதில் வருமா? உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் மின்னஞ்சல் முகவரி

1 Acharapakkam mlaacharapakkam@tn.gov.in
2 Alandur mlaalandur@tn.gov.in
3 Alangudi mlaalangudi@tn.gov.in
4 Alangulam mlaalangulam@tn.gov.in
5 Ambasamudram mlaambasamudram@tn.gov.in
6 Anaicut mlaanaicut@tn.gov.in
7 Andhiyur mlaandhiyur@tn.gov.in
8 Andimadam mlaandimadam@tn.gov.in
9 Andipatti mlaandipatti@tn.gov.in
10 AnnaNagar mlaannanagar@tn.gov.in
11 Arakkonam mlaarakkonam@tn.gov.in
12 Arantangi mlaarantangi@tn.gov.in
13 Aravakurichi mlaaravakurichi@tn.gov.in
14 Arcot mlaarcot@tn.gov.in
15 Ariyalur mlaariyalur@tn.gov.in
16 Arni mlaarni@tn.gov.in
17 Aruppukottai mlaaruppukottai@tn.gov.in
18 Athoor mlaathoor@tn.gov.in
19 Attur mlaattur@tn.gov.in
20 Avanashi mlaavanashi@tn.gov.in
21 Bargur mlabargur@tn.gov.in
22 Bhavani mlabhavani@tn.gov.in
23 Bhavanisagar mlabhavanisagar@tn.gov.in
24 Bhuvanagiri mlabhuvanagiri@tn.gov.in
25 Bodinayakkanur mlabodinayakkanur@tn.gov.in
26 Chengalpattu mlachengalpattu@tn.gov.in
27 Chengam mlachengam@tn.gov.in
28 Chepauk mlachepauk@tn.gov.in
29 Cheranmahadevi mlacheranmahadevi@tn.gov.in
30 Cheyyar mlacheyyar@tn.gov.in
31 Chidambaram mlachidambaram@tn.gov.in
32 Chinnasalem mlachinnasalem@tn.gov.in
33 CoimbatoreEast mlacoimbatoreeast@tn.gov.in
34 CoimbatoreWest mlacoimbatorewest@tn.gov.in
35 Colachel mlacolachel@tn.gov.in
36 Coonoor mlacoonoor@tn.gov.in
37 Cuddalore mlacuddalore@tn.gov.in
38 Cumbum mlacumbum@tn.gov.in
39 Dharapuram mladharapuram@tn.gov.in
40 Dharmapuri mladharmapuri@tn.gov.in
41 Dindigul mladindigul@tn.gov.in
42 Edapadi mlaedapadi@tn.gov.in
43 Egmore mlaegmore@tn.gov.in
44 Erode mlaerode@tn.gov.in
45 Gingee mlagingee@tn.gov.in
46 Gobichettipalayam mlagobichettipalayam@tn.gov.in
47 Gudalur mlagudalur@tn.gov.in
48 Gudiyatham mlagudiyatham@tn.gov.in
49 Gummidipundi mlagummidipundi@tn.gov.in
50 Harbour mlaharbour@tn.gov.in
51 Harur mlaharur@tn.gov.in
52 Hosur mlahosur@tn.gov.in
53 Ilayangudi mlailayangudi@tn.gov.in
54 Jayankondam mlajayankondam@tn.gov.in
55 Kadaladi mlakadaladi@tn.gov.in
56 Kadayanallur mlakadayanallur@tn.gov.in
57 Kalasapakkam mlakalasapakkam@tn.gov.in
58 Kancheepuram mlakancheepuram@tn.gov.in
59 Kandamangalam mlakandamangalam@tn.gov.in
60 Kangayam mlakangayam@tn.gov.in
61 Kanniyakumari mlakanniyakumari@tn.gov.in
62 Kapilamalai mlakapilamalai@tn.gov.in
63 Karaikudi mlakaraikudi@tn.gov.in
64 Karur mlakarur@tn.gov.in
65 Katpadi mlakatpadi@tn.gov.in
66 Kattumannarkoil mlakattumannarkoil@tn.gov.in
67 Kaveripattinam mlakaveripattinam@tn.gov.in
68 Killiyoor mlakilliyoor@tn.gov.in
69 Kinathukadavu mlakinathukadavu@tn.gov.in
70 Kolathur mlakolathur@tn.gov.in
71 Kovilpatti mlakovilpatti@tn.gov.in
72 Krishnagiri mlakrishnagiri@tn.gov.in
73 Krishnarayapuram mlakrishnarayapuram@tn.gov.in
74 Kulithalai mlakulithalai@tn.gov.in
75 Kumbakonam mlakumbakonam@tn.gov.in
76 Kurinjipadi mlakurinjipadi@tn.gov.in
77 Kuttalam mlakuttalam@tn.gov.in
78 Lalgudi mlalalgudi@tn.gov.in
79 MaduraiCentral mlamaduraicentral@tn.gov.in
80 MaduraiEast mlamaduraieast@tn.gov.in
81 MaduraiWest mlamaduraiwest@tn.gov.in
82 Maduranthakam mlamaduranthakam@tn.gov.in
83 Manamadurai mlamanamadurai@tn.gov.in
84 Mangalore mlamangalore@tn.gov.in
85 Mannargudi mlamannargudi@tn.gov.in
86 Marungapuri mlamarungapuri@tn.gov.in
87 Mayiladuturai mlamayiladuturai@tn.gov.in
88 Melmalaiyanur mlamelmalaiyanur@tn.gov.in
89 Melur mlamelur@tn.gov.in
90 Mettupalayam mlamettupalayam@tn.gov.in
91 Mettur mlamettur@tn.gov.in
92 Modakkurichi mlamodakkurichi@tn.gov.in
93 Morappur mlamorappur@tn.gov.in
94 Mudukulathur mlamudukulathur@tn.gov.in
95 Mugaiyur mlamugaiyur@tn.gov.in
96 Musiri mlamusiri@tn.gov.in
97 Mylapore mlamylapore@tn.gov.in
98 Nagapattinam mlanagapattinam@tn.gov.in
99 Nagercoil mlanagercoil@tn.gov.in
100 Namakkal mlanamakkal@tn.gov.in
101 Nanguneri mlananguneri@tn.gov.in
102 Nannilam mlanannilam@tn.gov.in
103 Natham mlanatham@tn.gov.in
104 Natrampalli mlanatrampalli@tn.gov.in
105 Nellikkuppam mlanellikkuppam@tn.gov.in
106 Nilakottai mlanilakottai@tn.gov.in
107 Oddanchatram mlaoddanchatram@tn.gov.in
108 Omalur mlaomalur@tn.gov.in
109 Orathanad mlaorathanad@tn.gov.in
110 Ottapidaram mlaottapidaram@tn.gov.in
111 Padmanabhapuram mlapadmanabhapuram@tn.gov.in
112 Palacode mlapalacode@tn.gov.in
113 Palani mlapalani@tn.gov.in
114 Palayamkottai mlapalayamkottai@tn.gov.in
115 Palladam mlapalladam@tn.gov.in
116 Pallipattu mlapallipattu@tn.gov.in
117 Panamarathupatti mlapanamarathupatti@tn.gov.in
118 Panruti mlapanruti@tn.gov.in
119 Papanasam mlapapanasam@tn.gov.in
120 Paramakudi mlaparamakudi@tn.gov.in
121 ParkTown mlaparktown@tn.gov.in
122 Pattukkottai mlapattukkottai@tn.gov.in
123 Pennagaram mlapennagaram@tn.gov.in
124 Perambalur mlaperambalur@tn.gov.in
125 Perambur mlaperambur@tn.gov.in
126 Peranamallur mlaperanamallur@tn.gov.in
127 Peravurani mlaperavurani@tn.gov.in
128 Periyakulam mlaperiyakulam@tn.gov.in
129 Pernambut mlapernambut@tn.gov.in
130 Perundurai mlaperundurai@tn.gov.in
131 Perur mlaperur@tn.gov.in
132 Pollachi mlapollachi@tn.gov.in
133 Polur mlapolur@tn.gov.in
134 Pongalur mlapongalur@tn.gov.in
135 Ponneri mlaponneri@tn.gov.in
136 Poompuhar mlapoompuhar@tn.gov.in
137 Poonamallee mlapoonamallee@tn.gov.in
138 Pudukkottai mlapudukkottai@tn.gov.in
139 Purasawalkam mlapurasawalkam@tn.gov.in
140 Radhapuram mlaradhapuram@tn.gov.in
141 Rajapalayam mlarajapalayam@tn.gov.in
142 Ramanathapuram mlaramanathapuram@tn.gov.in
143 Ranipet mlaranipet@tn.gov.in
144 Rasipuram mlarasipuram@tn.gov.in
145 Rishivandiyam mlarishivandiyam@tn.gov.in
146 Dr.RadhakrishnanNagar mlarknagar@tn.gov.in
147 Royapuram mlaroyapuram@tn.gov.in
148 Saidapet mlasaidapet@tn.gov.in
149 Salem -I mlasalem1@tn.gov.in
150 Salem-II mlasalem2@tn.gov.in
151 Samayanallur mlasamayanallur@tn.gov.in
152 Sankaranayanarkoil mlasankaranayanarkoil@tn.gov.in
153 Sankarapuram mlasankarapuram@tn.gov.in
154 Sankari mlasankari@tn.gov.in
155 Sathyamangalam mlasathyamangalam@tn.gov.in
156 Sattangulam mlasattangulam@tn.gov.in
157 Sattur mlasattur@tn.gov.in
158 Sedapatti mlasedapatti@tn.gov.in
159 Sendamangalam mlasendamangalam@tn.gov.in
160 Sholavandan mlasholavandan@tn.gov.in
161 Sholinghur mlasholinghur@tn.gov.in
162 Singanallur mlasinganallur@tn.gov.in
163 Sirkazhi mlasirkazhi@tn.gov.in
164 Sivaganga mlasivaganga@tn.gov.in
165 Sivakasi mlasivakasi@tn.gov.in
166 Sriperumbudur mlasriperumbudur@tn.gov.in
167 Srirangam mlasrirangam@tn.gov.in
168 Srivaikuntam mlasrivaikuntam@tn.gov.in
169 Srivilliputhur mlasrivilliputhur@tn.gov.in
170 Talavasal mlatalavasal@tn.gov.in
171 Tambaram mlatambaram@tn.gov.in
172 Taramangalam mlataramangalam@tn.gov.in
173 Tenkasi mlatenkasi@tn.gov.in
174 Thalli mlathalli@tn.gov.in
175 Thandarambattu mlathandarambattu@tn.gov.in
176 Thanjavur mlathanjavur@tn.gov.in
177 Theni mlatheni@tn.gov.in
178 Thirumangalam mlathirumangalam@tn.gov.in
179 Thirumayam mlathirumayam@tn.gov.in
180 Thirupparankundram mlathirupparankundram@tn.gov.in
181 Thiruvattar mlathiruvattar@tn.gov.in
182 Thiruverambur mlathiruverambur@tn.gov.in
183 Thiruvidamarudur mlathiruvidamarudur@tn.gov.in
184 Thiruvonam mlathiruvonam@tn.gov.in
185 Thiruvottiyur mlathiruvottiyur@tn.gov.in
186 Thondamuthur mlathondamuthur@tn.gov.in
187 Thottiam mlathottiam@tn.gov.in
188 Tindivanam mlatindivanam@tn.gov.in
189 Tiruchendur mlatiruchendur@tn.gov.in
190 Tiruchengode mlatiruchengode@tn.gov.in
191 Tirunavalur mlatirunavalur@tn.gov.in
192 Tirunelveli mlatirunelveli@tn.gov.in
193 Tiruppattur-194 mlatiruppattur194@tn.gov.in
194 Tiruppattur-41 mlatiruppattur41@tn.gov.in
195 Tirupporur mlatirupporur@tn.gov.in
196 Tiruppur mlatiruppur@tn.gov.in
197 Tiruthuraipundi mlatiruthuraipundi@tn.gov.in
198 Tiruttani mlatiruttani@tn.gov.in
199 Tiruvadanai mlatiruvadanai@tn.gov.in
200 Tiruvaiyaru mlatiruvaiyaru@tn.gov.in
201 Tiruvallur mlatiruvallur@tn.gov.in
202 Tiruvannamalai mlatiruvannamalai@tn.gov.in
203 Tiruvarur mlatiruvarur@tn.gov.in
204 TheagarayaNagar mlatnagar@tn.gov.in
205 Tiruchirapalli-I mlatrichy1@tn.gov.in
206 Tiruchirapalli-II mlatrichy2@tn.gov.in
207 Triplicane mlatriplicane@tn.gov.in
208 Tuticorin mlatuticorin@tn.gov.in
209 Udagamandalam mlaudagamandalam@tn.gov.in
210 Udumalpet mlaudumalpet@tn.gov.in
211 Ulundurpet mlaulundurpet@tn.gov.in
212 Uppiliyapuram mlauppiliyapuram@tn.gov.in
213 Usilampatti mlausilampatti@tn.gov.in
214 Uthiramerur mlauthiramerur@tn.gov.in
215 Valangiman mlavalangiman@tn.gov.in
216 Valparai mlavalparai@tn.gov.in
217 Vandavasi mlavandavasi@tn.gov.in
218 Vaniyambadi mlavaniyambadi@tn.gov.in
219 Vanur mlavanur@tn.gov.in
220 Varahur mlavarahur@tn.gov.in
221 Vasudevanallur mlavasudevanallur@tn.gov.in
222 Vedaranyam mlavedaranyam@tn.gov.in
223 Vedasandur mlavedasandur@tn.gov.in
224 Veerapandi mlaveerapandi@tn.gov.in
225 Vellakoil mlavellakoil@tn.gov.in
226 Vellore mlavellore@tn.gov.in
227 Vilathikulam mlavilathikulam@tn.gov.in
228 Vilavancode mlavilavancode@tn.gov.in
229 Villivakkam mlavillivakkam@tn.gov.in
230 Villupuram mlavillupuram@tn.gov.in
231 Virudhunagar mlavirudhunagar@tn.gov.in
232 Vridhachalam mlavridhachalam@tn.gov.in
233 Yercaud mlayercaud@tn.gov.in
234 ThousandLights mlathousandlights@tn.gov.in

மூணு நாளா இடுப்பை ஒடிச்சுப்புட்டாங்க…!

www.samooganeethi.org என்ற இணையத்தில் வந்ததை அப்படியே உங்களின் பார்வைக்கு தருகின்றேன்.பெருநாள் அன்னிக்கு கூட எங்களுக்கு நிம்மதி இல்லாமப் போச்சு. இந்தப் புள்ளைங்கள பெத்ததுக்கு சும்மா இருந்திருக்கலாம். தெனமும் எழும்புனா புள்ளைங்கள வேலைக்கு அனுப்புறது, துணி தொவைக்கிறது, அப்புறம் மத்தியான சாப்பாடு, நைட்டு சாப்பாடுன்னு எப்ப பார்த்தாலும் மிசின் மாதிரி அதையே திருப்பி திருப்பி செஞ்சுக்கிட்டு கிடக்கிறோம். ஏன்டா பொம்பளயா பொறந்தம்னு வெறுத்துப் போச்சு. ஒரு நாளு படுத்துகிட்டா கூட ஊடு நாறிப் போவுது.

முன்னாலெல்லாம் துணிமணிங்க கொஞ்சமாத்தான் இருக்கும். இந்தக் காலத்துல 5 பேருக்கே தெனமும் 10-15 துணி சேருது. கை காலெல்லாம் வலிக்குது.

நான் இந்த கடிதத்த ஒங்களுக்கு ஏன் எழுதினேன்னா இந்த வருசம் ஹஜ் பெருநாள்ல எங்க ஊட்ல நடந்த கொடுமையை எல்லாத்துக்கும் சொல்லனும்னுதான் எழுதுறேன். நான் எழுதினத ஒங்க பத்திரிகையிலே அப்படியே போடுங்க!

எங்க வீட்டுல என்னுடைய மூத்த பையன் தவ்ஹீது ஜமாஅத்துல இருக்கான். இரண்டாவது பையனுக்கு PJ அண்ணன பிடிக்காது. அதனால “ஜாக்” அமைப்பில இருக்கான். எங்க வீட்டுக்காரரு ஜமாஅத்து நிர்வாகத்துக்கு பயந்துகிட்டு அவங்க சொல்லுறதுக்கு தலைய ஆட்டுவாரு. அப்படின்னா ஒரு நிமிசம் என் நிலமைய கொஞ்சம் நெனைச்சுப் பாருங்க!

இந்த ஹஜ்ஜுப் பெருநாள் வந்துச்சு பாருங்க. மூணு நாளா நான் படாதபாடு பட்டுட்டேன்.

என் கஷ்டத்தை நான் யாருகிட்ட போய் பொலம்புறதுன்னு தெரியல.

மொத நாலு செவ்வாக்கிழமை என்னோட ரெண்டாவது பையன் “ம்மா இன்னிக்கு தான் பெருநாள். வா தொழுகப் போவோம்னு” கூப்புட்டான். சரி, அவன் மனசு நோக கூடாதுன்னு போய் தொழுதுட்டு வந்து கறி வாங்கி ஆக்கி கொடுத்தேன். ரெண்டாவது நாளு புதன்கிழமை ஊரே பெருநாள் கொண்டாடினிச்சு. நானும் என் வீட்டுக்காரரும் எங்க வீட்டுல இன்னொரு ஆள் இருக்கு. ஒங்க கல்வி நிகழ்ச்சிய பார்த்து காலேஜ்ல சேர்த்துவுட்டு இப்ப காசு காசுன்னு என் உசுர வாங்கறா! என் பொம்பள புள்ளைதான். நாங்க மூணு பேருமா சேர்ந்து போய் தொழுதுட்டு வந்து அன்னிக்கும் கறி வாங்கி பிரியாணி வச்சு சமைச்சு முடிக்க 4 மணியாச்சு. நான் ஒருத்தி மட்டும் கெடந்து அவ்வளவு வேலையும் பார்த்து முடிக்க அம்புட்டு நேரமாச்சு.

நான் வேலையில்லாம பெத்தேனே ஒரு பொம்புள புள்ளைய… தெண்டம்! ஒரு வேல பார்க்க மாட்டேங்கிறா. எந்த நேரமும் டி.வி.தான் பார்க்கிறா. என்னத்த சொல்றது.

மூனாவது நாளு காலயில மூத்த பையன் வந்து இன்னிக்குதாம்மா பெருநாளுன்னு சொன்னான். எனக்கு ஒன்னுமே புரியல. அப்ப நேத்து நாங்க தொழுவுனது என்னான்னு கேட்டேன். அது டூப்பிளிகேட்டுன்னு சொன்னான். எனக்கு கோவம் வந்துச்சு. ஏன்டா இப்படி பன்றீங்கன்னு கேட்டேன். நீ தொழுவ வர்ரீயா இல்லியான்னு கத்த ஆரம்பிச்சுட்டான். அவங்க கூப்புட்டவுடன் போய் தொழுவுன மாதிரி எங்கூடயும் வான்னு கையபுடிச்சு இழுத்தான். சரின்னு அவங்கூடயும் போய் மூணாவது நாளா தவ்ஹீத் ஜமாஅத் நடத்துன தொழுகையை தொழுதுட்டு வந்து அன்னிக்கும் கறி எடுத்து ஆக்கி கொடுத்து மூனு நாளா என் இடுப்பு எலும்பு முறிஞ்சு போச்சுங்க. இனி என்னால தாங்க முடியாது.

என்ன பெத்த ராசா மாருவளா…! நீங்க சமுதாயத்துக்கு தொண்டு செய்யறது எனக்கு நல்லா தெரியுது. அத ஒன்னும் நான் குத்தஞ்சொல்லல. ஆனா என்னைய மாதிரி பொம்பளைங்கள கொஞ்சம் நெனைச்சுப் பாருங்க! எங்க பயலுகளுக்கு நீங்க என்னாத்த சொல்லிக் கொடுக்கறீங்களோ… எங்க உசிரு போவுது.

சொர்க்கத்துக்கு வழிகாட்டுறோம்னு சொல்லி எல்லாருமா சேர்ந்து எங்களுக்கு இங்கயே நரக வேதனைய அனுபவிக்க வெச்சுட்டீங்களே! இது ஒங்களுக்கு நாயமா படுதா?

எல்லா மக்களும் ஒரே நாள்ல பெருநாள் கொண்டாடினாக்கா நாங்க பொம்பளைங்க சேர்ந்து, நீங்க, ஜமாஅத்காரங்க, தலைவருங்க, அமைப்பை நடத்துறவுங்க எல்லாரும் சொர்க்கத்துக்கு போவனும்னு துவா செய்வம்ல. இன்னொரு முக்கியமான விசயமுங்க.

எங்க வீட்டுல தொல்லை தாங்க முடியலங்க. வாப்பாவும் மகனுங்களும் அடிச்சுக்கிறாங்க. வாப்பா ஒன்னு சொன்னா அதுக்கு மார்க்கத்துல ஆதாரம் எங்கன்னு என் பசங்க கேக்கறானுங்க. என் வீட்டுக்காரரு அந்த காலத்து மனுசன். ஏதோ அவருக்கு ஹஜரத்மாரு சொன்ன மார்க்கம்தான் தெரியும். அறுபது வயசாகற அவருகிட்ட போய் ஆதாரம் குடுன்னு கேட்டா அத எந்த கடையில வாங்குறதுன்னு கேக்குறாரு. அவருக்கு கோவம்தான் வருது. வீட்டுல எப்ப பார்த்தாலும் ஒரே பெரச்சனைதான்.

ஒங்க அமைப்புல பயான் செய்யும்போது எல்லாரும் ஒத்துமையா, பொறுமையா இருங்கன்னு சொல்லிக் கொடுங்க. பெரியவங்களயும் பெத்தவங்களயும் மதிக்கனும்னு சொல்லிக் கொடுங்க.

இததானே நபியும் சொல்லித் தந்தாங்க.

வேதனையுடன்
பாப்பம்பட்டி பாத்திமுத்து ஜொகரா

காயிதே மில்லத்தின் கல்விச் சிந்தனைகள் !

அரசு பள்ளிக்கூடங்களில் மத கல்வி போதிக்கப்பட வேண்டும் !
சிறுபான்மையினர் தாய்மொழிகளில் ஆரம்ப கல்வி தேவை !
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் கண்ணியத்திற் குரிய காயிதே மில்லத் அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தின் போது ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று தனது கல்லூரி படிப்பை தியாகம் செய்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்த்தே ! இந்திய முஸ்லிம்கள் கல்வித்துறையில் முன்னேற வேண்டும் என்ற அக்கறையுடன் அவர் அரும்பாடு பட்டார். சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும் எதிர்கட்சித் தலைவராகவும் அரசியல் நிர்ணய சபைக் குழு சபை உறுப்பினராகவும், பாராளுமன்ற லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினராகவும் அவர் பணியாற்றிய காலங்களில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி முன்னேற்றத்திற்காக அவர் ஆக்கப்பூர்வமான பல யோசனைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளார்.
இந்திய முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட ‘அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக’ த்திற்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்ட போதெல்லாம் அதன் உரிமைக்காக அவர் துணிந்து குரல் கொடுத்துள்ளார். காயிதே மில்லத்தின் அயராத உழைப்பின் காரணமாகவே, கேரளா மாநிலத்திலும் தமிழகத்திலும் முஸ்லிம்கள் கல்வித் துறையில் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளனர். கேரளாவின் முஸ்லிம் லீக் தலைவர், சி.ஹெச். முகம்மது கோயா, அம்மாநில கல்வி அமைச்சராகவும் மாநில முதலமைச்சராகவும் பதவி வகிக்க முடிந்ததென்றால், அதற்குக் காரணம் காயிதே மில்லத் அவர்களின் கல்விச் சிந்தனையும் சேவையுமே ஆகும்.
சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக அவர் பதவி வகித்த போது 06.03.1947, 30.10.1947, 26.04.1948, 14.03.1949, 05.08.1950, 28.03.1951, ஆகிய தேதிகளில் அவர் உரையாற்றும்போது இந்திய முஸ்லிம்களின் கல்வி பிரச்சினைகள் குறித்து தெளிவாக பேசியதுடன் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
அரசியல் நிர்ணய சபையில் …
08.11.1948, 7.12.1948 ஆகிய தினங்களில், அரசியல் நிர்ணய சபையில் காயிதே மில்லத் அவர்கள் உரையாற்றும்போது கல்வி நிலையங்களில் மதக் கல்வி போதிக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார். அரசாங்கம் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய ஆன்மீகக் கல்வி வழங்குவதன் மூலமே எதிர் காலத்தில் சிறந்த குடிமக்களாக மாணவர்களை உருவாக்க முடியும் என்பதை வலியுறுத்தினார்.
ராஜ்ய சபாவில் 11.09.1956 அன்று உரையாற்றும்போது உருது மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு உருது மொழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார். 03.09.1965, 06.09.1965 ஆகிய தேதிகளில் உரையாற்றும்போது அலிகர் முஸ்லிம் கலாச்சாலை பிரச்சினை குறித்து விரிவாக பேசி பதிவு செய்துள்ளார்.
சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் மட்டுமல்லாது பொது மேடைகளிலும் முஸ்லிம் சமுதாயம் கல்வித் துறையில் முன்னேற வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து அதற்காக அவர் பாடுபட்டதன் காரணமாகவே தமிழகத்தில் முஸ்லிம் மக்களால் பல கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 1919 –ல் இஸ்லாமியா கல்லூரி, வாணியம்பாடி என்ற ஒரே ஒரு கல்லூரி மட்டுமே முஸ்லிம் களால் நடத்தப்பட்டு வந்தது. சென்னையில் சுதந்திரத்திற்கு முன் முஹம்மதன் கலைக்கல்லூரி என்ற பெயரில் இயங்கி வந்த கல்லூரியை அரசு கலைக்கல்லூரி என பெயர் மாற்றம் செய்ததுடன் அக்கல்லூரியில் முஸ்லிம்களுக்கு கிடைத்து வந்த சலுகைகளையும் அரசாங்கம் தடை செய்ததனால் அன்றைய கல்வியமைச்சர் அவிநாசி லிங்கத்தின் ஆலோசனையின் பேரில் முஸ்லிம்களுக்கென்று தனியாக கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்து அதற்காக ஊர் ஊராகச் சென்று முஸ்லிம் செல்வந்தர்களை அணுகி உழைத்ததன் மூலமாகவே, இன்று ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சில –
முஸ்லிம் வள்ளல்கள் உருவாக்கிய கல்வி நிறுவனங்கள்
தமிழகத்தில் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டு மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் அளித்துவரும் உயர்நிலைக் கல்விக்கூடங்கள்.
புதுக் கல்லூரி, சென்னை
ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை
சி. அப்துல் ஹக்கீம் கல்லூரி, மேல்விஷாரம்
ஜாஹிர் ஹூசைன் கல்லூரி, இளையான்குடி
ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, உத்தமபாளையம்
காதிர் முஹைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்
ஜஸ்டிஸ் பஷீர் அஹ்மது பெண்கள் கல்லூரி, சென்னை
காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி, மேடவாக்கம், சென்னை
முஸ்லிம் கலைக் கல்லூரி, திருவிதாங்கோடு
மழ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூர்
எம்.என்.எஸ். வக்ஃப் கல்லூரி, மதுரை
தாசிம் பீவி பெண்கள் கலைக்கல்லூரி, கீழக்கரை
வாவு வஜிகா வனிதையர் கல்லூரி, காயல்பட்டணம்
அன்னை ஹாஜரா மகளிர் கல்லூரி, மேலப்பாளையம்
எம்.ஐ.டி. மகளிர் கல்லூரி, திருச்சி
ராஜகிரி தாவூத் பாட்சா கல்லூரி, தஞ்சாவூர்
ஆலிம் முஹம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி, சென்னை
கிரஸண்ட் பொறியியல் கல்லூரி, வண்டலூர்
(தமிழக பொறியியல் கல்லூரிகளில் முதல் இடத்தை பல ஆண்டுகளாக இக்கல்லூரி பெற்று வந்துள்ளது).
சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை
டானிஷ் அஹமது பொறியியல் கல்லூரி, சென்னை உட்பட
ஏராளமான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மகளிர் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் பல மருந்தியல் கல்லூரிகள் எனப் பலதரப்பட்ட கல்லூரிகளையும், மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்களையும் முஸ்லிம்கள் தமிழகத்தில் நடத்தி வருகின்றார்கள். இக்கல்லூரிகளில் அதிகம் பயின்று பயன்பெற்றவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்திந்திய அளவில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமும் பன்னெடுங்காலமாக கல்விச் சேவையை ஆற்றி வருகின்றன.
கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்களில் தமிழகத்தை விட பன்மடங்கு அதிகமான அளவில் முஸ்லிம்கள் கல்வி நிலையங்கள் நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் மருத்துவ கல்லூரியைத் துவக்கி நடத்துவதற்கான முயற்சிகளும் ஆரம்பமாகியுள்ளன. கடந்த 2010, மே 25 ஆம் தேதி முஸ்லிம் லீக் மாநில தலைமையகத்தில் நடைபெற்ற முஸ்லிம் கல்வியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் இதற்கான அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கெல்லாம் காரணம் காயிதே மில்லத் என்பதை எவரும் மறுக்க முடியாது !


நன்றி :
பள்ளபட்டியில் ஜுன் 9 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு 2010 ல் வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் இருந்து

அறிவுக்கு விருந்து!!

பூமியானது தன்னையும் சுற்றிக்கொண்டு சூரியனைச்சுற்றி வருகின்றது என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்திருப்பீர்கள். பூமியில் இருக்கும் நாம் முதலில் நம்மைச்சுற்றி என்ன நடக்கின்றது என்பதை அவதானித்துக்கொள்ள வேண்டும் என்பதை பூமி சொல்லித்தரும் பாடமாக அறிந்து கொள்வோம். அத்தோடு இதையும் அறிந்து கொள்ளுங்கள்.

***பூமியின் நீர்ப்பரப்பு: 139,440,000 சதுர கி.மீ

***பூமியின் நிலப்பரப்பு: 14 கோடி 90லட்சம் கி.மீxகி.மீ

***பூமியின் விட்டம்: 7920 கி.மீ

***பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம்: 240,000 கி.மீ

***பூமியிலிருந்து வாயு பரந்திருக்கும் தூரம் :1000 கி.மீ

***பூமி சுழலும் வேகம்: 66,600 கிமீ/மணிக்கு

***பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது : அமாவாசை

***சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வருவது: பெளர்ணமி

***பூமி சுழலும் பக்கம்: மேற்கிலிருந்து கிழக்காக

***பூமிக்கு சூரிய ஒளி வர எடுக்கும் நேரம்: 480 விநாடிகள்

***சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும் சந்திரன் சூரியனை மறைப்பதால் ஏற்படும் நிழல் பூமியின் மீது விழும் போது “சூரிய கிரகணம்” ஏற்படும் அதாவதுஅமாவாசையில் வரும்

***சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும் பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும் போது “சந்திரகிரகணம்” ஏற்படும்; அதாவது பெளர்ணமியில் வரும்

பூமியின் சராசரி உஷ்ணம் ஒரு டிகிரி உயர்ந்தால் கூட நோயால் 30 ஆயிரம் மக்கள் இறப்பார்கள் — ஆராய்ச்சி கருத்து
நன்றி;கொள்ளுமேடு தாரிப்.WordPress.

அமெரிக்காவில் முஸ்லிம்கள்-ஓர் பயணக்கட்டுரை

அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் 14..7.2010 மாலை சி.என்.என் டி.வி சேனல் செய்தியினைப் பார்த்துக் கொணடிருந்த எனக்கு ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க ஹிஜாப் அணிந்த முஸ்லிம் சிறிமி மிகவும் வீராவேசமாக ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தாள். அது என்ன பேச்சு என்று கேட்க உங்களுக்கு ஆவலாக இருக்கும். 2001 செப்டம்பர் மாதம் 9ந்தேதி அமெரிக்காவின் வர்த்தக நகரமான நியூயார்க்கில் இரட்டைக் கோபுரத்தினை விமானகங்கள் மூலம் மோதி தகர்த்து அதன் மூலம் 2000 பேர்களுக்கு உயிர் சேதமிட்ட இடத்தின் அருகில் ஒரு பள்ளிவாசல் கட்ட அனுமதிக்கலாமா என்ற கருத்தாய்வுக் கூட்டத்தில் தான் அந்த சிறுமி ஆவேசமாக பேசினாள். அவளுக்கு முன்பு பேசிய அமெரிக்கர்கள் முஸ்லிம்கள் தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்கள், ஆகவே அந்த இடத்தில் மசூதி கட்ட அனுமதிக்கக்கூடாது என்று பேசினார்கள. ஆனால் அவர்களுக்கு பதில் சொல்லும் விதத்தில் இந்த 15 வயது சிறிமி, ‘தன்னுடைய பெற்றோர்களும், உறவினர்களும் கூட அந்த சம்பவத்தில் இறந்து தான் அனாதை முஸ்லிம் சிறிமியாக இருப்பதாகவும் அதற்காக எல்லா முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் என்று கூறி முஸ்லிம் அமைதியாக வழிபடுவதிற்கு பள்ளிவாசல் கட்ட இடம் மறுப்பது என்ன நியாயம் என்று கேட்டது, சிலப்பதிகார இலக்கியத்தில் தன்னந்தனியாக கணவன் கோவலனை இழந்த கண்ணகி மதுரை பாண்டியமன்னர் தர்பாரில் நியாயம் கேட்டது போன்ற இலக்கிய உண்மை நிகழ்ச்சியாக இருந்தது. அந்தப் முஸ்லிம் சிறிமி பேசியதினைக் கேட்டு வாயடைத்த கருத்துக் கேட்க வந்த அமெரிக்க நடுவர்கள் கருத்துக் கேட்டும் நிகழ்ச்சியினை ஒத்தி வைத்து விட்டு சென்று விட்டார்கள்.
1) அந்த சிறிமி பேசிய பின்பு அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் வழிபாடு தளங்கள,; அவர்களின் வாழ்க்கை முறைகள் பற்றி செய்திகளை சேகரித்து உங்களுக்கு வழங்கலாம் என் ஆசைப்பட்டு இந்தக் கட்டுரை எடுதுகிறேன்:
அமெரிக்காவில் இஸ்லாமிய கம்யூனிட்டிகள் 1920ல் தோன்றி வீடுகளில் கூட்டுத் தொழுகை நடத்தி தங்களுடைய சமூக பிரச்சனை பற்றி விவாதிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் 1950 ஆம் ஆண்டில் தான் ‘நேஷன் ஆப் இஸ்லாம’ என்ற அமைப்பினை அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் ஹார்லீன் நகரத்தில் ஆரம்பித்து ஒரு பள்ளிவாசலினை உருவாக்கியுள்ளனர்.
ஆனால் இன்று ஆயிரத்திற்கு மேலான பள்ளிகள் உள்ளன. அமெரிக்காவில் மிக பெரிய பள்ளிவாசல் அடிராய்டு நகரில் உள்ள இஸ்லாமிக் செண்டரில் 1962லிருந்து 1965வரை உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் அமெரிக்கா- ஆப்ரிக்க முஸ்லிம் மக்களின் உதவியால் உருவாக்கப்பட்ட பள்ளிவாசல்கள் பின்பு எகிப்து, சௌதி அரேபியா, ஈரான் மற்றும் லெபனீஸ் அரசுகளின் பண உதவியால் எழுப்பப்பட்ட பள்ளிவாசல்கள் அனைத்து இன முஸ்லிம் மக்களும் தொழும் பள்ளிகளாக மாற்றப்பட்டன. இஸ்லாமியர் மதசேவைக்காக ‘கவுன்சில் ஆப் மஸ்ஜித்’ அமைக்கப்பட்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சர்வேயின் படி 33 சதவீத தெற்கு ஆசிய மக்களும், 30 சதவீத அமெரிக்க-ஆப்ரிக்க இனத்தவரும், 25 சதவீத அரபிய மக்களும் தொழுகைக்காக பள்ளிக்கு வருகிறார்கள். பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதிற்காக இன்னமும் இமாம்கள் எகிப்து, துருக்கி, பாலஸ்த்தீனம் ஆகிய நாடுகளிலிருந்து தருவிக்கப்படுகிறார்கள். அத்துடன் ‘இமாம்கள் கவுன்சில்’ 1972 ஆம்; ஆண்டு நிறுவப்பட்டு இமாம்களுக்கான பயிற்சி கொடுத்து அமெரிக்காவில் வசிக்கும் மார்க்க அறிவாளிகளே தொழுகை நடுத்தும் முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிவாசலும் மற்றும் அதனை ஒட்டியுள்ள கம்யூனிட்டி சபை கட்டிடங்களும் மார்க்க மற்றும் பொது கல்விக்காக பயன்படுத்தப்படுகிறது. வாரந்தோறும் சிறுவர் மார்க்கக் கல்வி கற்க ஏற்பாடும், முதியோர் மார்க்க கல்விக்கும், இஸ்லாமியர் அல்லாதவர் இஸ்லாத்தினைப் பற்றி தெரிந்து கொள்வதிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வே படி அமெரிக்கா முஸ்லிம்களில் 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை ஐந்து வேளை தொழுகின்றனர். ஆனால் அமெரிக்கா கிறித்துவர்கள் 40 சதவீதம் கிறத்துவ சர்ச்சுகளுக்குச் செல்கின்றனர்.
தற்போது கிட்டத்தட்ட 2000 பள்ளிவாசல்கள் உள்ளன. அதனில் 200க்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் கலிபோர்னியா, நிய+யார்க் மாநிலங்களில் உள்ளன. 100லிருந்து 200 வரை பள்ளிவாசல்கள் டெக்ஸாஸ,; புளோரிடா, இல்லினோஸ், ஓகியோ, மிக்சிகான், பென்சில்வேனியா, நியூஜெர்சி போன்ற மாநிலங்களில் உள்ளன, 50திலிருந்து 100வரை பள்ளிவாசல்கள் வாசிங்டன், டென்னசி, அரிசோனா, ஓக்லாமா போன்ற மாநிலங்களில் உள்ளன.
2) அமெரிக்காவில் இஸ்லிமிய சமூதாய ஆரம்பமும் வளர்ச்சியும்:
முதன் முதலில் 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டினவர் அமெரிக்க மண்ணில் காலடி வைக்கும் போது இஸ்லாமியர் வந்தனர் எனக் கூறப்பட்டாலும் 1860ஆம் ஆண்டில் குடியேறிய சிரியா மட்டும் லெபனான் முஸ்லிம் மக்கள் பெருவாரியாக இருந்தனர். இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்பு ஐரோப்பா, ஆசியா, கிழக்கு ஆப்ரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் குடியேறினர். முதன் முதல் அமெரிக்க முஸ்லிம்கள் ஆப்பிரிக்க நாடுகளைச்சார்ந்த அடிமைகள் தான் என்றால் மினையாகாது. அவர்கள் பெரும்பாலோனோர் படித்தவர்கள். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்கா வெள்ளையினத்தினவரிடமிருந்து கறுபு;பின மக்களை விடுதலைக்காகவும் அவர்கள் உரினைமக்காகவும் குரல் கொடுத்தார். ஆனால் அமெரிக்கா-ஆப்பிரிக்கா முஸ்லிம் தலைவர் எலிஜா முகம்மது ‘நேஷன் ஆப் இஸ்லாம’; இயக்கத்தினை ஆரம்பித்து வெள்ளை நிற அமெரிக்க மக்களுடன் கறுப்பின மக்களுக்காக சமாதானத்தில் இஸ்லாம் மதத்தினை பரப்ப வழிவகுத்தார். எலிஜா முகம்மது கறுப்பின அமெரிக்கருக்கு தனி கறுப்பின இஸ்லாமிய மாநிலம் கேட்டார். அந்த இயக்கத்தினைச் சார்ந்தவர்கள் பல் வேறு குற்ற பின்னணியில் சிறையில் வாடும் கறுப்பினத்தவரை திருத்தி இஸ்லாத்தினைத் தழுவ தனி அமைப்பான ‘ரிகேபிளிட்டேஷன் ஆப் அமெரிக்கா பிளாக்’ ஏற்படுத்தினர். ஜெயிலில் வாடும் கறுப்பின மக்களை சந்தித்து கீழ்கண்ட உபதேசங்கள் செய்கின்றனர்:
1) கறுப்பராக பிறந்திருப்பது ஒரு வரப்பிரசாதம் அது இழிவல்ல. ஆகவே தாழ்வு மனப்பான்மையினை விட்டொழிக்க வேண்டும்.
2) நீங்கள் எந்த முஸ்லிமையினையும் அழுக்கான உடையிடனோ அல்லது முகச்சவரம் செய்யாத நபரையோ உடல் சுத்தமில்லாத நபரைவேயா பார்க்க முடியாது.
3) எந்த் முஸ்லிமையும் குடிபோதைக்கு ஆளாவதினைப் பார்க்க முடியாது.
4) எந்த முஸ்;லிமும் போதை தரும் புகைப்பான்களை உபயோகிப்பதினைக் காண முடியாது.
5) எந்த முஸ்லிமும் அநாகரிக ஆடல்களில் ஈடுபட்டதினை பார்க்க முடியாது.
6) எந்த முஸ்லிமும் தன் மனவியினைத் தவிர வேற்றுப் பெண்களில் உடல் ரீதியான தொடர்பு கொள்வதினைக் காண முடியாது.
7) எந்த முஸ்லிமும் சிறிய வருமானம் தரும் வேலை செய்யாமல் கூட வாழ பிச்கையெடுப்பதினைக் காணமுடியாது.
8) ஏந்த முஸ்லிமும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதினைக்காண முடியாது.
மேற்கொண்ட போதனைகள் மூலமே பல்லாயிரக்கணக்கான அமெரிக்க-ஆப்ரிக்க இனத்தவர் முஸ்லிம் மதத்திற்கு மாறினர். அதில் ஒருவர்தான் உலகக் குத்துச்சண்டை பதவியிலிருந்து பாலியில் குற்றச்சாட்டில் ஜெயிலில் வாடிய மைச் டைசன.; இன்று இஸ்லாத்திற்கு மாறி மாலிக்காக வெளி வந்துள்hர்.
எலிஜா முகம்மது 1965 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பின்பு அவருடைய மகனார் வாலாஸ் கறுப்பின முஸ்லிம்களுக்கு தனி மாநில கொள்கையினை கைவிட்டு கறுப்பினர் அல்லாத மக்களையும் நேஷன் ஆப் இஸ்லாம் இயக்கத்தில் சேர்த்துக் கொண்டார். அந்த அபை;பிற்கு மேற்கத்திய ‘வேர்ல்டு கமிட்டி ஆப் இஸ்லாம’ என்று பெயர் சூட்டினார். அதன் பின்பு அந்த அமைப்பிற்கு ‘அமெரிக்கன் முஸ்லிம் மிஷன்’ என்று மாற்றப்பட்டது.


3) குடிபெயர்ந்த அமெரிக்க முஸ்லிம்களின் பழக்க வழக்கங்கள்:
1) ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்தாரும் 100 டாலரிடமிருந்து 250 டாலர் வரை வருடத்திற்கு செலுத்தி ஒவ்வொரு கம்யூனிட்டி அமைப்பிலும் உறுப்பினராகி உள்ளனர்.
2) தங்கள் குழந்தைகளை இஸ்லாமிய மார்க்க போதனைகளை வாரத்தில் இருமுறை கற்க வழிவகை செய்கின்றனர்.
3) பள்ளிவாசல் நிதிக்காக விருந்துடன் கூடிய சிறப்பு முகாம் நடத்தி வசூல் செய்கின்றனர். ஒரு தடவை நான் அது போன்ற முகாமில் கலிபோர்னியா மாநிலம் பிரிமாண்ட் பள்ளிவாசலில் பங்கேற்றேன்.
அப்போது நான், நீ என்று ஆண்கள், பெண்கள,; சிறார்கள் போட்டிபோட்டு நன்கொடை செலுத்தியதில் ஒரு லட்சத்து பத்தாயிரம் டாலர் நன்கொடையாக கிடைத்தது.
4) வெள்ளிதோறும் பெண்கள் தங்கள் வீட்டில் தயார்செய்த பண்டங்கள், உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் விற்று அந்தக் பணத்தினை பள்ளிவாசலுக்காக நன்கொடையாக தருகின்றனர்.
5) சிறப்பு பேச்சாளர்களின் பேச்சினை ஏற்பாடு செய்து அதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அது போன்ற மக்கா பல்கலைக் கழகத்தில் பயிற்சி பெற்று முதலிடத்தில் தேறிய ஒருவருடைய கம்யூட்டர் விளக்கத்துடன் கூடிய சொற்பொலிவினை நான் சானோஸ் கம்யூனிட்டி பள்ளியில் கேட்டேன்.
6) முஸ்லிம்கள் ஹலாலான உணவினையே சாப்பிடுகின்றனர். பெரும்பாலான கறிக்கடைகள் பாகிஸ்தானியர் மற்றும் ஆப்கானிஸ்தியர் தான் நடத்துகின்றனர். கலிபோர்னியாவிலுள்ள சாப்ட்வேர் தலைமையிடமான சானோசில் ஒரு சைனீஸ் முஸ்லிமின் ஹலால் ஹோட்டலில் அத்தனைக் கூட்டம் என்றால் பாருங்களேன்.
7) கம்யூனிட்டியில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ‘பாட்லாக்’, ‘பார்க்யூ’ என்ற முஸ்லிம் குடும்பங்கள் கூடி பொது பார்க்கில் விருந்துண்கின்றனர். அப்போது குடும்ப உறுப்பினரிடையே கலந்துரையாட ஏதுவாக உள்ளது. ஆனால் அப்படி நடக்கும் விருந்தோம்பல் நிகழ்வுகளில் கூட ஒவ்வொரு நாட்டிலும் அல்லது மாநிலத்தில் வந்தவர்களுக்கிடையே மட்டும் பழகும் பழக்கமாக இருந்து வருகிறது. எல்லை தாண்டி குடும்பப் பழக்கங்கள் வேரூன்றவில்லை.
8) வெள்ளிக்கிழமையில் ஜூம்மா குத்துபா முடிந்த பின்பு நோயுற்றவர்களுக்கு, இறந்தவர்களுக்கு துவா செய்யவும், மருத்துவச் செலவு, ரத்தம் தேவைப்படும் நோயாளிக்கு உதவவும் வேண்டுகோள் விடப்படுகிறது. அங்கு இறந்தவர்களை அடக்ம் செய்யும் இடம் மிகவும் விலை அதிகமாக இருக்கிறது. வசதியில்லாது இறந்தவரகளுக்கு அடக்கம் செய்ய கம்யூனிட்டிகள் வசூல் செய்து அடக்கம் செய்கிறார்கள்.
9) பெண்கள் நீண்ட கையுள்ள சட்டையினை அணிந்தும் மேலங்கி, தலை முக்காடும் அணிந்தும் காணப்படுகின்றனர். ஆனால் சில ஆண்கள் தான் சமூதாயம் கூடும் இடங்களுக்கு முனங்காலுக்கு மேலுள்ள அரைக்கால் சட்டையணிந்து வருகின்றனர். அதுவும் பெண்கள் கூடும் இடங்களுக்கு வருவது அந்த இளைஞர்களுக்கு மேலை நாகரிகமாக இருக்கலாம் ஆனால் என்னால் முகம் சுழிக்காமல் இருக்க முடியவில்லை. தமிழக முஸ்லிம் ஊர்களிலிருந்த முஸ்லிம் பட்டதாரிகள் ஊரில் கைலியும் தொப்பியும் அணிந்து விட்டு, அமெரிக்காவின் நகரங்களில் நாகரீகமென்று அரைக்கால் சட்டையினை அணிந்து வருவது அவ்வளவு இஸ்லாமிய பண்பாடுக்கு உகந்ததாக கருத முடியவில்லை.
10) சிறார்கள் அமெரிக்காவின் மேதாவி கலாச்சாரத்தில் ஈடுபடாமல் தங்கள் மதக்கோட்பாடோடு வாழ பெண்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.
11) இஸ்லாமியர் கருத்துச்சுதந்திரத்துடன் வழிபாடு நடத்த பல இஸ்லாமிய நாடுகளில் கூட இல்லாதிருந்தும் அமெரிக்காவில் இருக்கிறது பாராட்டத்தக்கது.
12) இந்திய முஸ்லிம் கூட்டமைப்பு, தமிழ் முஸ்லிம் கூட்டமைப்பு போன்ற அமைப்புகள் சமூதாய தொண்டுகளும் மற்றும் இனையதளங்களும் நடத்தி வருகின்றன.

4) மேற்கத்தியவர் பார்வையில் இஸ்லாமியர:; 1989ஆம் ஆண்டு ஈரானியர் புரட்சிப்படை அமெரிக்காவின் தூரகத்தினைக் கைப்பற்றி அமெரிக்கர்களை பயணக்கைதிகளாக வைத்த பின்னரும், அமெரிக்காவின் இரட்டைக்கோபுரங்கள் 11.9..2001 ஆம் ஆண்டு தகர்க்கப்பட்ட பின்பும், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாட்டோ நாடுகளின் கோபம் உலக முஸ்லிம்கள் மீது திரும்பியுள்ளது என்றால் அது மிகையாகாது. அந்த இரண்டு நிகழ்ச்சிகளுமே இஸ்லாமியர் வன்முறையாளர்கள் என்ற மாயைத்தோற்றத்தினை உருவாக்கி உள்ளது. அதன் விளைவு தான் அந்த நாடுகள் ஆப்பானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் படையெடுக்கத்தூண்டியதோடு மட்டுமல்லாமல், பாகிஸ்தானையும், ஈரானையும் பயமுறுத்தும் பம்மாத்துக்களில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமா? பிரான்ஸ், ஹாலந்து, நிய+ஜிலாந்து, இட்டாலி போன்ற நாடுகளில் பெண்கள் ஹிஜாப் அணிந்து வரவும், புர்கா போடவும் மறுக்கப்படுகிறது. ஆனால் கிறித்துவ இளைஞர்களும், பெண்களும் குளிர் காலத்தில் தலை மூடிய ‘ஹ_ட்’ கவச உடை அணிய அனுமதியள்ளது எவ்வாறு நியாயமாகும்? ஏன் இந்தியாவில் கூட முஸ்லிம் அல்லாத பெண்கள் வட மாநிலங்களிலும் முக்காடு போட்டும், இரு சக்கர வாகனத்தில் போகும் போது முகத்தினை மூடி செல்வதில்லையா? ஏன் இஸ்லாமியரை மட்டும் தனிமைப் படுத்துகிறார்கள் என்பது ஆச்சரியமே!
அமெரிக்காவின் இரட்டைக்கோபுர தகர்ப்பிற்கு பின்பு உலக முஸ்லிம்களைப் பற்றி தவறான தகவல்கள் எலக்ட்ரானிக் மீடியாவிலும், பத்திரிக்கைகளிலும் வராமலில்லை. பொதுவாக இஸ்லாமியர் வன்முறையாளர் என்ற கருத்தினை புகுத்தப் பார்க்கின்றனர். அதே வேளையில் அமெரிக்காவின் ஓக்லாமா சிட்டியில் ஃபெடரல் அரசு கட்டிடத்தினை குண்டு வைத்து தகர்த்த டிமோட்டி என்ற அமெரிக்கன் கிறித்துவ மதத்தினன் என்பதால் எல்லா கிறித்துவரும் தீவிரவாதிகள் என்று யாரும் சித்தரிக்க மாட்டார்கள். ஆனால் முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதிகள் என்று சாயம் பூசப்பார்;க்கிறார்கள். அவர்களெல்லாம் இஸ்லாம் அமைதியினைப் பேணிக்காக்கும் மதம் என்று அறியாதவர்கள். இஸ்லாம் மதமும், கிறித்துவ மதமும் சகோதர மதம். ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சொல்லிக் கொள்ளும் முகமனான ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதே உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாகுக என்று சொல்லப்படுவதே என்று அறியாதவர்கள். இஸ்லாமியர் மக்கள் ஒற்றுமைக்காகவும் ஏக இறை தத்துவத்தினை எடுத்தியம்பும் முக்கிய கடமையாக கொள்பவர்கள். அதே தத்துவத்தினைத்தானே ரசூலல்லாஹ் மட்டுமல்லாமல் அவர்களுக்கு முன்பு வந்த கிறித்துவ, யூத மதத்தின் கடவுள்களாக கருதப்படும் அப்ரஹாமும், மோசசும், ஜீசசும் போதித்தனர். அவர்களெல்லாம் ரசூலல்லாஹ்வின் முன்னோடி நபிமார்கள் என்று குர்ஆனில் சொல்லப்பட்டதினை அவர்கள் அறியாதவர்களா?
பொதுவாக இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர் கூட்டுப்படை வெற்றி பெற்ற பின்னரும் முன்னாள் காலணி ஆகிக்கத்தினால் விடுபட்ட நாடுகளில், அல்லது இஸ்ரேயில் போன்று திணிக்கப்பட்ட நாடுகளில் உள்ள ஆட்சிக்கு ஆதரவாக அமெரிக்க-ஆங்கிலேய கூட்டுப்படை ஆதரவு அளித்து வருகிறது. அந்த திணிக்கப்பட்ட நாடுகளின் எல்லைகளை ஏற்காத நாடுகளில் வசிக்கும் எதிர்ப்பாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அப்படி எதிர்ப்பு காட்டுபவர்களில் பெரும்பாலும் முஸ்லிம்களாக இருப்பதால் கூட்டுப்படை தன் நவீன ஆயுத பலத்தினைக் காட்டி தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மறு காலணி ஆதிக்கத்திற்கு வழிவகுக்கிறது என்றால் மிகையாகாது. இதனை நான் சொல்லவில்லை அமெரிக்கா-கூட்டுப்டை எதிர்ப்பாளரான அமெரிக்க அறிஞர் நோம் சோம்கி சொல்கிறார் என் 7.8.2010 தேகியிட்ட ஹிந்துப ;பத்திரிக்கை தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் மேற்கத்திய நாடுகள் என்ன நினைக்கின்றனரென்றால் உலகத்தில் அவர்களைத் தவிர உயர்ந்த இனமில்லை என்றுதானே எண்ணத்தோன்றுகிறது. ஆனால் அமெரிக்கா 1776 ஆம் ஆண்டு விடுதலை பெற்றபோது பிரகடனப்படுத்திய குடிமக்களின் உயிருக்கும், உடமைக்கும், வழிபாடுக்கும் உத்திரவாதம் இஸ்லாமும் போதிக்கதானே செய்கிறது.
இஸ்லாமிய-இந்து மக்கள் சண்டைகள் பற்றி ஆராய்ச்சி செய்த பேராசிரியர் அஷ்டுஸ் வார்ஷ்னே, இரு கமூகத்தினர் சண்டைகளைக் களைந்து சமரசம் ஏற்பட அரசியல் கட்சிகள், வியாபாரிகள் சங்கத்தினர், தொழிற்சங்கத்தினர், அறிவு ஜீவிகள், பத்திரிக்கையாளர்கள், சினிமாத்துறையினர், விளையாட்டு சங்கத்தினர் முன்வந்து அதற்கான வழிவகை செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே முஸ்லிம் மக்களின் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்க உணர்விற்கு எதிரான கசப்பினைப் போக்கி நல்லெண்ணம் உண்டாக்க வேண்டுமென்றால் கீழ்கண்ட வழிமுறைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்:
1) முஸ்லிம் நாடுகளின் வறுமையினை ஒழித்து அந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டு தன்னிறைவு பெற உதவ வேண்டும்.
2) முஸ்லிம் நாடுகளின் இறையான்மைக்கு உத்திரவாதம் தர வேண்டும்.
3) முஸ்லிம் மக்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு வழிவகுக்கும் பாலஸ்தீனத்தில் அமைதி ஏற்பட உடனே முழு ஒத்துழைத்து அதனை நிலை நாட்டவேண்டும்.
4) மதசம்பந்தமான போதனைகளை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் மதரஸாக்களில் கல்வியினை கற்றுக் கொடுக்க கல்விக்கான உதவித் தொகையினை பின் தங்கிய முஸ்லிம் நாடுகளுக்குத் தரவேண்டும்.
5) நான் மேற்கூறிய யோசனைகளுக்கு அமெரிக்க முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்? அவர்கள் முதலில் அமெரிக்காவில் வாழும் முஸ்லிம் என்ற நிலை மாறி அமெரிக்கா முஸ்லிம்களாக மாறி அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடு மக்களினன் தவறான எண்ணத்தினை மாற்ற கீழ்கண்ட வழிகளில் செயலாற்ற வேண்டும்:.
1) அமெரிக்கா முஸ்லிம்களில் 60 சதவீதம் வெளிநாடுகளிலிருந்;து வந்து குடியுரிமை பெற்றவர்கள். 40 சதவீதம் அமெரிக்கா-ஆப்பிரிக்கா இனத்தினர். இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் வாழும் கிறித்துவர்கள்-யூதர்களுடன் நல்ல உறவினை ஏற்படுத்தி அமெரிக்கா அல்லாத முஸ்லிம் நாடுகளுடன் நல்லுறவினை நிலைநிறுத்தும் பாலமாக அமைய வேண்டும்.
2) அமெரிக்காவின் யூதர்கள் என்ன செய்ய வேண்டும்?
பாலஸ்தீன மக்கள் அமைதியுடனும், சொந்த நாடு, உரிமை, மற்றும் உடல், பொருள் உத்திரவாதத்துடன் வாழ முயற்சி எடுக்க வேண்டும்.. ஏனென்றால் எந்த வன்முறையும் இஸ்ரேயில் நாட்டினை விடுவிக்க முடியாது. அதேபோல பாலஸ்தீனர்களை தங்கள் சொந்த இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக நிறந்திறமாக வெளியேற்றவும் முடியாது. ஆகவே இஸ்ரேயிலும், பாலஸ்தீன மக்களும் தன்னுரிமையுடன் வாழ அமெரிக்கா வாழும் கிறித்துவர்களும், யூதர்களும் வழிவகுக்க வேண்டும். அதற்கான முயற்சியினை அமெரிக்காவின் முஸ்லிம்கள் எடுக்க வேண்டும். அமெரிக்காவில் ஒரு பழமொழி சொல்வார்கள், நீங்கள் சிரியுங்கள், அடுத்தவரும் சிரிப்பார்’. அந்த பழமொழியே யூத மக்களுக்கும் பொருந்தும்.
3) அமெரிக்காவின் பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், சினிமாத்துறையினர் அமெரிக்கா படைகள் முஸ்லிம் நாடுகளில் தற்காலிக வெற்றியினை பிரதானப்படுத்தாது, எப்படி ஆப்பிரிக்கா மக்களை ‘டார்ஜன்’; படத்தின் மூலம் காட்டுமிராண்டிகள் போல எழுத்திலோ அல்லது எலக்ட்ரானிக் மீடியாவிலோ, அல்லது அமெரிக்கா கூட்டுப்படையின் தங்கள் நவீன போர் எந்திரங்கள் மூலம் எப்படி ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் வெற்றி கொண்டு முஸ்லிம்களை கோழையாக சித்தரிக்காது அவர்களும் தாங்கள் வாழும் கிரகத்தில் பிறந்த மனித பிறவிகள் தான் அவர்களுக்கும் கவுரவமாக, அமெரிக்காவின் 1776 ஆம் ஆண்டு சுதந்திர பிரகடனத்தில் கூறப்பட்டது போல சுதந்திரமாக வாழ அனைத்து உரிமைகளும் உண்டு என்பதினை உணர்ந்து செயலாற்ற வேண்டும். அவ்வாறு செயலாற்றினால் நிச்சயாக முஸ்லிம் மக்களின் வெந்த புண்ணிற்கு மருந்து போட்டது போல ஆதரவாக இருக்குமல்லவா? அதற்கான கருத்து ஒற்றுமையினை அமெரிக்க முஸ்லிம் ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

அணைக்கரை பாலத்தில் மார்ச் முதல் பஸ் போக்குவரத்து: அமைச்சர் தகவல்

அணைக்கரை பாலத்தில் வரும் மார்ச் மாதம் முதல் பஸ் போக்குவரத்து துவங்கும் என அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார். சென்னை – கும்பகோணம் சாலையில் உள்ள அணைக்கரை பாலம் பலவீனமடைந்ததால் பாதுகாப்பு கருதி கனரக வாகனங்கள் மற்றும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இலகு ரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை – கும்பகோணம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பாலத்தில் நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனையொட்டி பாலத்தின் முக்கியத்துவம் கருதி தற்காலிகமாக சீரமைப்பு பணி மேற்கொள்ள 6 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி துவங்கியது. பாலத்தில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ரசாயன பூச்சு மூலம் சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று அதிகாரிகளுடன் சென்று பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “பழுதடைந்த 174 ஆண்டுகள் பழமையான அணைக்கரை பாலம் கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கி வருகிறது. இப்பாலம் 6 கோடியே 21லட்சம் ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் துரிதமாக ரசாயன பூச்சு மூலம் உறுதித் தன்மை படுத்தப்படுகிறது. மொத்த பணிகளும் 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முடிக்கப்பட்டு மார்ச் மாதத்தில் இருந்து போக்குவரத்து துவங்கும். நிரந்தமாக புதிய பாலம் கட்ட “நகாய்’ மூலம் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது’ என்றார்

அறிவுப் புரட்சி ஓங்குக !

பேராசிரியர் டாக்டர் சேமுமு. முகமதலி
( பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் )


அன்றைய அரபுலகத்தை ஆய்வு செய்த ஜெர்மானிய ஆய்வாளர் ஜோசப் கெல் என்பார் இஸ்லாம் தோன்றிப் பரவத் தொடங்கிய காலங்களில் பள்ளிவாசல்களில் தொழுகை நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் குர் ஆன் , ஹதீது, கணிதம், அறிவியல் , வானியல் முதலான பல்வேறு துறைகளைச் சார்ந்த பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன எனக் குறிப்பிடுகின்றார் . அத்தகைய காலத்தில் கணிதம், மருத்துவம், இயற்பியல் வானியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துச் சாதனைகள் பலவற்றை உலகளவில் செய்து பெருமிதம் மிக்கவர்களாக இஸ்லாமியர் அவனியில் உலா வந்தார்கள். ஆனால் அதன்பின் அவர்களது அறிவுத்திறன் ஒழிந்து கொண்டுவிட்டது. அதே சமயத்தில் யூதர்கள் பல்வேறு துறைகளிலும் ஆளுமை செலுத்தத் தொடங்கினார்கள் .

இன்று உலகளவில் யூதர்கள் 140 லட்சம் பேர் உள்ளனர் முஸலிம் களோ 1500 லட்சம் பேர் உள்ளனர் அதாவது ஒரு யூதருக்கு 107 முஸ்லிம்கள் என்ற கணக்கில் இருக்கிறார்கள் உலகளவிலும் இந்திய அளவிலும் மக்கள் தொகையில் ஐவரில் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார். ஆயினும் நிலைமை எவ்வாறு உள்ளது ?

விஞ்ஞானி ஐன்ஸ்டீன், உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃபிராய்ட், கம்யூனிஸத்தந்தை எனக் கருதப்படும் கார்ல் மார்க்ஸ் உள்பட உலக வரலாற்றில் சாதனை படைத்தவர்கள் யூதர்களே ஆவர்; கடந்த 105 ஆண்டுகளில் நோபல் பரிசு பெற்ற யூதர்கள் 180 பேர்; ஆனால் முஸ்லிம்களோ 3 பேர்தாம்; மருத்துவத்துறையில் தடுப்பூசி, சிறுநீரகச் சுத்திகரிப்பு, குடும்ப நலம், கருவியல், குடலியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் புதிய கண்டிபிடிப்புகளைத் தந்து சாதனைப் படைத்தவர் களும் யூதர்களே ஆவர் கோகோ கோலா போலோ லெவிஸ் ஜீன்ஸ் கணிணியியல் ஆரகிள் டெல் கம்ப்யூட்டர்ஸ் முதலான பல்வேறு வணிகத் துறைகளிலும் உலகளவில் கோலோச்சிக் கொண்டிருப்பவர் களும் யூதர்களாவர்.


உலகப் புகழ்பெற்ற தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் பெரும்பான்மையான ஆதிக்கம் யூதர்களுடையதே ஆகும்; ஊடகங்களுக்கு செய்திகளைத் தரும் பல செய்தி நிறுவனங்களும் அவர்களுடைய ஆதிக்கத்தில்தான் இருக்கின்றன; அவ்வாறிருக்கும் போது உலகளவில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகவும் பயங்கர வாதிகளாவும் வன்முறையாளர்களாகவும் சித்திரிக்காமல் இருப்பார்களா என்பதையும் சிந்திக்க வேண்டும்.

கல்வித் துறையில் கணிப்பைச் செலுத்தினால் 57 இஸ்லாமிய நாடுகளில் 500 பல்கலைக் கழகங்கள் மட்டுமே இருப்பதைக் காணலாம்; அமெரிக்காவில் மட்டுமே 5758 பல்கலைக் கழகங்கள் உள்ளன ; பல்கலைக்கழகங்களின் தரவரிசையைக் கணக்கிட்டால் முதல் தரத்திலிருந்து 500 தரம் முடிய உள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்று கூட ஒரு முஸ்லிம் நாட்டின் பல்கலைக்கழகம் கிடையாது.


கிறிஸ்துவ நாடுகளில் படித்தவர்கள் சதவிகிதம் 90 ஆக இருக்கும் போது முஸ்லிம் நாடுகளில் படித்தவர்களின் சதவிகிதம் 40 ஆகவே இருக்கிறது; கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் 15 நாடுகளில் படித்தவர்கள் சதவிகிதம் 100 ஆக இருக்கும்போது முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு நாட்டில் கூட படித்தவர்கள் 100 சதவிகிதம் இல்லை ; கிறிஸ்தவ நாடுகளில் 10 இலட்சம் மக்களுக்கு 1000 பேர் தொழில்நுட்ப வல்லுநர்களாக இருக்கும்போது முஸ்லிம் நாடுகளில் 10 இலட்சம் மக்களுக்கு வெறும் 50 பேர் மட்டுமே தொழில்நுட்ப வல்லுநர்களாக இருக்கிறார்கள்; உலகளவில் முஸ்லிம்களின் இத்தகைய நிலையைக் கண்ணுறும்போது வேதனையே விஞ்சுகிறது .

உலகளாவிய இந்த நிலைமையின் தாக்கத்தையே இந்தியாவிலும் காண முடிகிறது; இந்தியாவில் முஸ்லிம்கள் 16 சதவிகிதம் இருப்பதாக அரசுப் புள்ளிவிவரம் கூறுகிறத;. நாமோ 22 லிருந்து 25 சதவிகிதம் இருக்கிறோம். தமிழகத்தில் முஸ்லிம்கள் 5.8 சதவிகிதமென அரசுப் புள்ளிவிவரம் காட்டுகிறது; நாமோ 10 லிருந்து 13 சதவிகிதம் இருக்கிறோம். 10 சதவிகிதம் எனக் கணக்கிட்டாலும் தமிழக சட்டமன்ற 234 உறுப்பினர்களில் 23 அல்லது 24 முஸ்லிம்கள் இருக்க வேண்டும். ஆனால் இருப்பதோ 7 பேர்தாம் ! பாராளுமன்றத்தில் ஏறக்குறைய 120 முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்க வேண்டும் ஆனால் இருப்பதோ 40 க்கும் குறைவே !


நிர்வாகத்துறையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் அதிகாரிகளில் 2 சதவிகிதமே முஸ்லிம்கள்; தமிழகத்தில் 527 பேரில் 18 பேரும் குரூப் ஏ அதிகாரிகள் 540 பேரில் 15 பேரும்தாம் முஸ்லிம்கள் .நீதித்துறையில் கணக்கிட்டால் உள்ளூர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை முஸ்லிம் நீதிபதிகள் 1 சதவிகிதமே இருக்கிறார்கள்; ஒருகாலத்தில் தமிழக உயர்நீதிமன்றத்தில் 22 நீதிபதிகள் இருந்தபோது 4 முஸ்லிம் நீதிபதிகள் இருந்தனர். இன்று 49 நீதிபதிகள் இருக்கு மிடத்தில் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகவில்லை.

ஊடகத்துறையில் கிடைத்த ஒரு புள்ளிவிவரப்படி பத்திரிகை ஆசிரியர், துணை ஆசிரியர், உரிமையாளர் உள்ளிட்ட பத்திரிகை யாளர்களில் 55 சதவிகிதம் பேர் உயர் வகுப்பைச் சார்ந்தவர்களாக உள்ளனர் ;முஸ்லிம்களோ 3 சதவிகிதம் தாம் உள்ளனர். இவ்வாறே ஒரு ஜனநாயக நாட்டின் தூண்களாகக் கருதப்படும் ஆட்சி ,நிர்வாகம், நீதி, ஊடகம் ஆகிய நான்குத் துறைகளிலுமே முஸ்லிம்களுடைய நிலை கவலையளிப்பதாகவே இருக்கிறது.


இந்திய நாட்டில் முஸ்லிம் தணிக்கையாளர் 1 சதவிகிதமே ;பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் இன்னும் 3 சதவிகிதத்தை எட்டவில்லை; வங்கி போன்ற துறைப் பணிகளிலே 2 . .2 சதவிகித மாகவே முஸ்லிம்கள் உள்ளனர்; அரசுத்துறையானாலும் அரசு சார்ந்த துறையானாலும் தனியார் துறையானாலும் முஸ்லிம்கள் 3 சதவிகிதத் திற்கும் குறைவாகவே வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

மண்டல் கமிஷன் தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் முஸ்லிம்களில் 94.61 சதவிகிதம் பேர் பிற்படுத்தப்பட்டவர்களெனச் சுட்டுகிறது சச்சார் குழு அட்டவணை 10ல் பாகம் 3ல் பக்கம் 204ல் முஸ்லிம்களில் 93.3 சதவிகிதம் பேர் பிற்படுத்தப்பட்டவர்களெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 35 சதவிகிதம் முஸ்லிம்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர்; 49 சதவிகிதம் முஸ்லிம்கள் தினக் கூலிகளாக இருக்கிறார்கள்.


கல்வித்துறையில் இன்றைக்கும் இந்தியாவில் 6 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட முஸ்லிம் குழந்தைகளில் 30 சதவிகிதம் பேர் மழைக்குக்கூட பள்ளிக் கூடத்திற்குள் ஒதுங்குவதில்லை ;ஆரம்பத்தில் பள்ளியில் சேர்பவர்களிலும் பள்ளிப் படிப்பை நிறைவு செய்வோர் 11.5 சதவிகிதமே ஆகும்; பட்டமேற்படிப்பு படித்தவர்கள் 2 சதவிகிதமே உள்ளனர்; பட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்கள் 0.78 சதவிகிதமே என்றால் கல்வியில் நமது நிலையைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

இந்தியாவில் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை 3 சதவிகிதத்திற்கும் குறைவே என்றபோதிலும் இன்று இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் 10 சதவிகிதமும் ஊனமுற்றோருக்கான கல்வி நிறுவனங்களில் 25 சதவிகிதமும் கிறிஸ்தவர்களுக்குச்சொந்தமானவை யாகும்; கல்வி வேலைவாய்ப்புகளில் ஏற்கனவே கிறிஸ்தவர்கள் அதிக சதவிகிதம் பேர் இருப்பதாலேயே தமிழகத்தின் 3.5 சதவிகித இட ஒதுக்கீடு தேவையில்லையெனக் கூறிவிட்டனர்.


தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் 3.5 சதவிகித ஒதுக்கீட்டால் சாதக நிலையும் ஏற்பட்டிருக்கிறது, சில துறையில் பாதக நிலையும் ஏற்பட்டிருக்கிறது; சாதகத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் பாதகத்தை எடுத்துக்கூறிக் களைந்து கொள்ளவும் முஸ்லிம்கள் பாடுபட்டாக வேண்டும்; வருங்காலத்தில் இந்த இட அளவை அதிகப்படுத்தவும் போராடியாக வேண்டும்.

அக்காலத்தில் இந்தியாவில் கல்வி வேலைவாய்ப்புகளில் மட்டு மல்லாது மாகாண சட்ட மன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் முஸ்லிம்களுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீடு இருந்து வந்தது ஆனால் அவை காலத்தின் கோலத்தில் காணாமல் போயின. ஆகவே இழந்த உரிமையை மீட்டெடுக்கவும் நாம் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது; 10 சதவிகித இட ஒதுக்கீட்டை உடனடியாகச் செயல்படுத்திடவும் மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டியிருக்கிறது.


மத்திய –மாநில அரசுகளிடம் உரிய சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்காகப் போராடும் அதே சமயம் நம்மை நாமே கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உயர்த்திக் கொள்ளவும் போராட வேண்டியிருப்பதை மறந்து விடக்கூடாது. பெரும்பாலும் ஒரு கிறிஸ்துவத் தேவாலயம் இருக்குமிடத்தில் ஒரு பள்ளிக்கூடமும் இருப்பதைக் காணலாம். அதே போன்று இடவசதியும் பொருள் வசதியும் உள்ள பள்ளிவாசல்களில் மார்க்கக் கல்வியும் நடப்புக் கல்வியும் இணைந்து கற்பிக்கப்படும் தரமுள்ள பிரைமரி பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும்.

ஆரம்பப் பள்ளியில் நுழையும் ஏறக்குறைய 70 சதவிகித மாணவர்கள் 11 வயதிலிருந்து 14 வயதுக்குட்பட்ட நிலையை அடையும் போது மூன்றில் ஒரு பங்கினாராகச் சுருங்கி விடுகின்றனர். மேற்பட்டப் படிப்பு வகுப்பைத் தொடுபவர்கள் 2 சதவிகிதமாக மேலும் சுருக்கம் காணுகின்றனர். பெண் குழந்தைகளில் 39 சதவிகிதம் பேர் ஐந்தாம் வகுப்புக்கு முன்னரே படிப்பை நிறுத்தி விடுகின்றனர். எட்டாம் வகுப்புக்கு முன்னர் மேலும் 57 சதவிகிதம் மாணவிகள் படிப்பை நிறுத்திவிடும் போக்கு சமுதாயத்திலிருந்து முற்றிலுமாகக் களையப் படவேண்டும். அதற்கான முழுமுயற்சிகளைப் புயல்கால அடிப்படையில் முஸ்லிம்கள் எடுத்தாக வேண்டும் .


உலக அளவில் யூத சகோதரர்களும் இந்திய அளவில் பிராமணச் சகோதரர்களும் குறைந்த சதவிகித அளவே இருந்தாலும் தங்களது அறிவுத் திறனால் உயர்ந்திருப்பதைப் போன்று முஸ்லிம் சமுதாயமும் முன்னேற வேண்டியுள்ளது அத்தியாவசியமாகும். இறைமறை நெறியும் திருநபி ( ஸல் ) வழியும் வற்புறுத்துகிற அறிவை – கல்வியை – இஸ்லாமியர்கள் முற்றிலுமாகப் பற்றிக் கொள்ளுதல் வேண்டும். அனைத்து நிலைகளிலும் முஸ்லிம்கள் முன்னேற இன்றைய தேவை அறிவுப் புரட்சியே ஆகும் .

ஓங்கட்டும் அறிவுப் புரட்சி....
ஒளிரட்டும் சமுதாயம்...
கூடட்டும் இறையருள்....




( IMCT யின் சிறப்புமலர் 2009 லிருந்து )
இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை ( IMCT )
துபை.

உன் தாயின் கருவறையில் உனக்கு சுவாசகாற்றை தந்தது யார்?

அல்லாஹ் - அளவற்ற அருளாளன்!
சகோதரர்களே
இங்கு அல்லாஹ்வை அளவற்ற அருளாளன் என்று புகழப்பட்டுள்ளது அதற்குப் பொருள் என்ன என்றைக்காவது சிந்தித்ததுண்டா? வாருங்கள் சிந்திப்போம்
அல்லாஹ்வின் அருளுக்கு அளவுகோல் உள்ளதா? என்று சிந்தித்துப்பாருங்கள்!· உங்கள் தாயின் கர்ப்பக்கோளரையில் பார்ப்பதற்கே அறுவருப்பான சதைப் பிண்டமாக நீங்கள் இருந்தீர்கள் உங்களுக்கு உருவம் கொடுத்து அருளினான்!· உங்களுக்கு அழகான பொம்மையைப் போன்று உருவம் கொடுத்தால் மட்டும் போதுமா என்று எண்ணி உங்களுக்கு உணர்வையும் கொடுத்தான்!· உணர்வு மட்டும் போதுமா என்று எண்ணி உணர்வை வெளிப்படுத்தும் ஆற்றலையும் கொடுத்தான்· குறிப்பிட்ட மாதங்கள் தாயின் வயிற்றில் தங்க வைத்து உணவையும் கொடுத்தான்!· தாயின் சுவாசக்காற்றுடன் உங்களுக்கும் சற்று சுவாசக் காற்றை சிரமமின்றி கொடுத்தான்!· மூச்சுவிடக்கூட முடியாத கப்ரு போன்ற அந்த கற்பக் கோளரையில் அழகான நித்திரை கொடுத்தான்!· இறுதியாக முழு வடிவம் கொடுத்து உங்களை குழந்தையாக பிறக்க வைத்தான்!· குழந்தை பிறந்ததும் தாயின் மடியில் தவழ்வதற்காக அவளிடம் அன்பைக் கொடுத்தான் தந்தையிடம் பாசத்தை கொடுத்தான்!· அன்பு செலுத்த பெற்ற தாய் தந்தை மட்டும் போதுமா? என்று எண்ணி உற்றார் உறவினர்களின் உள்ளத்தில் மென்மையாக தொட்டுக்கொஞ்சும் கலையை கொடுத்தான்! அனைவரும் உங்களை கொஞ்சி மகிழ்ந்தனர் நீங்களோ கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்தீர்கள்!
அல்லாஹ் - நிகரற்ற அன்புடையோன்
இங்கு அல்லாஹ்வை நிகரற்ற அன்புடையோன் என்று புகழப்பட்டுள்ளது அதற்குப் பொருள் என்ன என்றைக்காவது சிந்தித்ததுண்டா? வாருங்கள் சிந்திப்போம்!
அல்லாஹ்வின் அன்புக்கு அளவுகோல் உள்ளதா? என்று சிந்தித்துப்பாருங்கள்!· சுவாசிக்கும் காற்றைக்கொடுத்து உதவினான், பருகும் நீரை கொடுத்து உதவினான், அமர்வதற்கு நிலத்தையும், ரசிப்பதற்கு இயற்கை எழில் கொஞ்சும் அழகையும் கொடுத்தான்! இது நிகரற்ற அன்பில்லையா?·
நிலத்தில் உணவுக்காக உழுகிறீர்கள் உங்கள் உழைப்புக்கு ஊதியமாக பயிரை வெளிப்படுத்துகிறான் சிந்தித்துப் பாருங்கள்
நிலத்தில் பயிர் வெளிப்படாமல் இருந்தால் எதை உண்பீர்கள்! இது நிகரற்ற அன்பில்லையா?·
சுவாசிக்கும் காற்றின் உதவியுடன் விமானத்தில் பறக்கிறீர்கள், பருகும் நீரில் மீன் பிடித்து மகிழ்கிறீர்கள், நிலத்தில் உழுதும், வீடு கட்டியும், உங்கள் மலஜலங்களை சுத்தப்படுத்தியும் சுகம் காண்கிறீர்கள் இறுதியாக மரணித்து மண்ணரைக்கு செல்ல இடத்தையும் ஒதுக்கினான் இது நிகரற்ற அன்பில்லையா?சிந்தித்துப்பாருங்கள்!
உங்கள் மலஜலங்களை மண் விழுங்காமலும் விழுங்கியதை மக்கச் செய்யாமலும் இறுதியாக உங்கள் மலஜலம் கெட்ட துர்நாற்றம் பிடித்து காற்றில் கலந்து பரவினால் இந்த உலகில் வாழ முடியுமா? இப்படிப்பட்ட இழிவான நிலைக்கு உங்களை அல்லாஹ் தள்ளிவிட்டானா? அல்லது உங்களை செம்மையாக்கி வாழ வழிவகை செய்தானா?·
தாயின் வயிற்றில் இருக்கும் போது உங்கள் உடலில் இதயத்தை பொறுத்தியவன் எவன்?·
நுரையீரைலையும், கல்லீரலையும் பொருத்தயவன் எவன்?·
பற்களையும் நாக்கையும் உதடுகளையும் பொறுத்தியன் எவன்?·
மலஜலம் கழிக்க அந்தரங்க உறுப்புகளையும் அதன் அருகில் வீரியமிக்க விந்துத் துளிகளையும் பொறுத்தியவன் எவன்?·
எலும்புகளையும் நரம்புகளையும் அவற்றை இயக்க சிந்திக்கும் மூளையையும் அதற்கென்று நரம்புகளையும், தோலையும் பொருத்தியன் எவன்?· துள்ளிக்குதிக்கும் நீரை உங்கள் முதுகுத்தண்டு வடப்பகுதியில் செம்மையாக்கியவன் எவன்?·
முகவரியற்ற உங்களுக்கு முகவரியைக் கொடுத்து உதவியவன் எவன்? இதன் மூலம் உலகில் வாழவழிவகை செய்து உங்களுக்கு உங்கள் மனைவியை கொடுத்து அவளின் மூலம் கட்டுக்கடங்காத மிருகத்தனமான உங்கள் உடல் சுகத்தை தனிப்பவன் எவன்?
ஓ மாண்புமிகு மனிதர்களே!உங்களில் நல்லோரும் உள்ளனர், உங்களில் தீயோரும் உள்ளனர் நல்லோர் படைத்த இறைவனின் அருளையும் அன்பையும் நினைத்து புகழ்ந்துக்கொண்டும் அஞ்சிக்கொண்டும், தீயோர் படைத்த இறைவனின் அன்பையும் அருளையும் மறந்து தங்கள் நாதாக்களையும், மரணித்த மனிதர்களிடம் உதவி தேடியும் அலைகின்றனர்.உங்கள் நாதாக்களும் அவ்லியாக்களும் எதைப் படைத்தனர் என்பதை பட்டியல் போட்டு காட்ட முடியுமா? அற்பமான ஒரு ஈ-யின் இறக்கையைக்கூட அவர்களால் உருவாக்க முடியுமா? அல்லது அந்த ஈ-யிடும் முட்டையின் ஓட்டைக் கூட உருவாக்க முடியுமா?
உங்களில் வசதிபடைத்தோர் ஏழைகளை உதாசீனப்படுத்துகிறீர்கள் வலிமையான ஆற்றல் படைத்தோர் வலிமைற்ற மனிதர்களை அடக்குமுறைகளால் அடக்கிக்கொண்டும் வாழ்கிறிர்கள்! பெற்ற தாய் தந்தையரை வயதான காலத்தில் துரத்துகிறீர்கள், கட்டிய மனைவியை காசுக்காக மிதிக்கிறீர்கள், பெற்ற பிள்ளைகளை முறையாக பேணாமல் அநாதைகளைப் போன்று அங்கும் இங்கும் அலைய விடுகிறீர்கள் இந்த பாவங்களையெல்லாம் செய்துக் முஸ்லிமாகிய நான் சுவனம் போகவேண்டும் என்று எண்ணினால் உங்கள் ஆசை நிறைவேறுமா?
மஹ்சரில் அல்லாஹ்வின் கேள்விக்கணைகளிலிருந்து உங்களால் தப்பித்து ஓடிவிட முடியுமா? வாதத்திறமையால் தவறான வழியில் அடைந்த சொத்து சுகங்கள் பயனளிக்குமா?எதற்கும் சக்தியற்று, உழைக்க வசதியற்ற வக்கற்றவர்களாக பிறந்தீர்கள்! வாழ்க்கையைக் கொடுத்தான்! வசதிவாய்ப்புகளைக் கொடுத்தான் தாயைக் கொடுத்தான், தாரத்தை கொடுத்தான் பிள்ளைச் செல்வத்தை கொடுத்தான், உங்களை நேர்வழிப்படுத்த அருள்மறைக் குர்ஆனையும் நல்வழிப்படுத்த அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளான ஹதீதுகளையும் உங்களிடம் கூலியை எதிர்பார்க்காமல் இலவசமாக அருளினானே இந்த அன்பிற்கு நிகராக வேறு ஏதாவது அன்பு உள்ளதா? இந்த அருளுக்கு நிகரான அருள் உலகில் ஏதாவது உள்ளதா?
சிந்தித்துப்பாருங்கள் இனியாவது அல்லாஹ்வின் அருளையும் அன்பையும் உணர்ந்து அவனுக்கு அஞ்சிவாழும் மூமின்களாக மாற முயற்சி செய்யுங்கள்!
உங்கள் மீது அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக!
-

திருக்குர்ஆன் பற்றி அறிஞர்களின் கருத்துக்கள்!

ஒரு பழங்கால வேதத்திலிருந்து வியத்தகு நவீன விசயங்கள் வந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. இதன் ஆதிமூலம் திண்ணமாக இறைதன்மை உடையதாகவே இருக்க முடியும் என்று என்ன இதுவே போதுமானதாகும்.

எல்லா புகழும் இறைவனுக்கே!!

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் இந்த இணைய தளத்தை துவங்குகின்றோம்....