கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும் ....எச்சரிக்கைச் செய்தி.

முழுவதும் படித்துவிட்டு மற்றவர்களுக்குப் பகிரவும்..எனக்குத் தெரிந்த நண்பரின் வாழ்வில் நடந்த கொடுமை இது..Internetல் எல்லா தளங்களுக்கும் செல்பவர்..ஒருநாள், அத்தளத்தில் 'அழகான தமிழ்ப் பெண்கள்'என்ற தலைப்பில் இருந்த பகுதியைத் திறந்து பார்த்திருக்கிறார்..நான்கைந்து பக்கங்களைப் பார்வையிட்டவருக்கு ஆறாவது பக்கத்தில் காத்திருந்தது பேரதிர்ச்சி...ஆம்...!

அதில் அவரது 'தங்கையின்' புகைப்படமும் இருந்தது கூடவே அவரது அழகைப்பற்றிய அருவருப்பான commentகளும்..நன்றாக யோசித்துப் பாருங்கள்...ஒரு சராசரி அண்ணனுக்கு இது எப்படி இருந்திருக்குமென்று..!

தங்கை வீட்டிற்கு வந்ததும் பளார்.. பளார்.. என்று அறைந்தவர்இதுபற்றித் தங்கையிடமே நேரில் கேட்க, அவரது தங்கை அங்கேயே மயங்கிவிழ..ஓடிவந்து பார்த்த பெற்றோரிடம் எல்லாவற்றையும் போட்டு உடைத்தார்..

(அப்போது அவருக்கும் ஒரு பளார் கிடைத்ததாம்)மயக்கம் தெளிந்து எழுந்த தன் தங்கையிடம் அந்த தளத்திலுள்ள அவரது படத்தைக் காட்டியபோது அவருக்குப் பேரதிர்ச்சி..அண்ணா..இது நான் Facebookல் வைத்திருக்கும் என்னுடைய Profile picture...

அப்போதுதான் அவருக்கு உறைத்தது.. Facebookல் தன்னுடைய பதிவுகளை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று Privacy settingsல் கொடுத்தது..அதன்பிறகு,உண்மை தெரிந்து அந்தப் படத்தை எடுத்துவிட்டு settingsகளிலும்மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டார்..இந்த நிகழ்வு எனது நண்பருக்கும் ஒரு பாடமாக அமைந்துவிட்டது..

இந்த Facebook இன்றைய இளைய சமுதாயத்தில் எவ்வளவு ஆழமாக வேரூன்றிவிட்டதென்று எல்லோருக்கும் தெரியும்..இது சரியா தவறா என்ற விவாதஞ்செய்யாமல்,இதுபோன்ற மோசமான நபர்களும், தளங்களும்உலாவும்இணையஉலகில்நம்மைநாமேகாத்துக்கொள்ளவேண்டும்..இதற்கு, நமது  பெண்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்..

முகம் தெரியாத நபர்கள் 'நட்பிற்கான விடுகையைத் தரும்போது'(friendship request),அவற்றை எக்காரணங்கொண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டாம்..ஏனெனில், உங்களது படத்தை எடுப்பதற்கான பெரும் வாய்ப்பை அவர்களுக்கு நீங்களே அளிக்கிறீர்கள்..அப்படியொருவேளை இதில் விருப்பமில்லையென்றால், உங்களது உண்மையான படங்களை எக்காரணங்கொண்டும் இங்கே பதிவேற்றாதீர்கள்..

இதுதான் மிகச்சிறந்தவழி..இப்போதே இந்த மாற்றங்களைச் செய்யுங்கள்..இது பெண்களுக்கு மட்டுமல்ல..எல்லா ஆண்களும் இதனைப் படித்து தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் விளக்கமாக எடுத்துரையுங்கள்..

பொழுதுபோக்கிற்காக உலாவ வரும் பெரும்பாலோனோருக்கு,இங்கே பல புறம்போக்குகளும் உலாவுகின்றனர் என்பதை எச்சரிக்கே இதை கைவலிக்க எழுதியுள்ளேன்..தயவுசெய்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்..நன்றி.

(சொல்வது எங்கள் கடமை - தீர்மானிப்பது உங்கள் கையில்)

0 கருத்துகள்: