கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இவர்கள் படித்தது சட்டப்புத்தகமா? மனுதர்மமா?

அன்பார்ந்தவர்களே சிந்திக்கவும்: நம் நாட்டிலே கேள்வி கேட்க முடியாத இரண்டு நபர்கள் உண்டு, ஒன்று ஜனாதிபதி, மற்றொன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி. இதில் மதிப்பிற்குரிய சுப்ரீம் கோர்டின் அவலங்களை பற்றி இன்று பாமரன் கூட மதிப்பு குறைந்த வார்த்தைகளால் விமர்சிக்க தொடங்கி விட்டான். ஏன் இந்த இழி நிலை? அதற்கு காரணம் இந்தியாவின் நான்கு தூண்களில் ஒன்றான "நீதி துறை" இன்று உயர் ஜாதிகாரர்களின் பிடியில் அகப்பட்டு கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டதுதான் காரணம். அதற்க்கு சில உதாரணங்களை பார்க்கலாம்.


1) நாட்டையே உலுக்கிய "போபால் விஷவாய்வு துயரம்" இதில் ஆயிரக் கணக்கில் மக்கள் இறந்தார்கள் இன்றும் அதன் பாதிப்பு தொடர்ந்து கொண்டிருகிறது. அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றும் நீதி மறுக்கப்பட்டு வருகிறது.

2) மும்பை கலவரம் அதற்க்கு காரணம் பயங்கரவாதி பால்தாக்கரே என்று கோர்ட் கூறியும் அவனை ஜெயிலில் அடைக்க முடியவில்லை. என்மேல் கைவைத்தால் "இந்தியாவே பத்தி எறியும்" என்று கூறி நீதித்துறையும், அரசையும் கேவலப்படுத்திய பால்தாக்ரேயை நீதியின் முன்னால் நிறுத்த முடியவில்லை.

3) பாபரி மஸ்ஜித் இடிப்பில் முக்கிய பங்காற்றிய குற்றவாளிகளான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அசோக்சிங்கால், உமாபாரதி, போன்ற பயங்கரவாதிகள் இன்றும் சுதந்திரமாக வெளியே இருக்கிறார்கள். "ரதயாத்திரை என்ற பெயரிலே ரத்த யாத்திரை" நடத்தி ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று குவித்தார்கள். அவர்களுக்கு தூக்கு இல்லை.

4) ஒரிசாவில் "பாதிரியாரையும் அவரது பச்சிளம் குழந்தைகள் இரண்டையும்" தூங்கி கொண்டு இருக்கும் போது தீயிட்டு கொளுத்திய கயவர்களின் தண்டனையை குறைத்து தீர்ப்பு கொடுத்துள்ளார்கள்.

5) "கர்நாடகாவில் சுர்சுகளுக்கு தீ வைத்தவர்களை" ஆதாரம் இல்லையென்று சொல்லி நியாப்படுத்தினார்கள்.

7) "கோயம்பத்தூர் கலவரத்தில்" ஈடுப்பட்டவர்கள் இன்றும் அடுத்த கலவரம் செய்வதற்கு தங்களை தயார் படுத்தி கொண்டு தைரியமாக உலா வருகிறார்கள் .

8) "மாவீரன் கர்கரேயே கொன்றவர்கள்" இந்த தேசத்துரோகிகள் தான் என்று தெரிந்தும் அவாள்களை ஒன்றும் செய்ய முடியவில்லை,

9) ஒரிசாவில் "கிருத்துவ மத குருமார்களை கொன்றவர்கள்", "கன்னியாஸ்திரிகளை கற்பழித்தவர்கள்","கிருத்துவ தேவாலயங்களை எரித்தவர்கள்" இதுவரை நீதியின் முன்னே நிறுத்தப்படவில்லை. யாருக்கும் "தூக்கு தண்டனை" கொடுக்கப்பட வில்லை.

இந்தியாவில் இதுவரை நடந்த எல்லா குண்டு வெடிப்புகளும் காரணம் இந்த வந்தேறிகளால் தான் என்று குற்றவாளிகள் வாக்குமூலம் கொடுத்த பிறகும், அதை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் இயக்கம் என்று சந்தேகம் இல்லாமல் நிரூபணம் ஆகியும் "இதுவரை அதன் தலைவர்கள் கைது" செய்யப்படவில்லை. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால்? நாம் எல்லாம் இன்னும் நம்பிக்கை வைத்திருகின்ற சுப்ரீம் கோர்ட் இது விசயத்தில் இன்றுவரை உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை என்பதுதான்.

இது ஒரு பக்கம் என்றால், சாமானிய மக்கள் விசியத்தில் இந்த கோர்ட் என்னதான்? செய்திருக்கிறார்கள் என்று பார்ப்போம். கோயம்பத்தூர் குண்டு வெடிப்பில் எந்த வித தொடர்பும் இல்லாத அப்துல் நாசர் மதனியை பத்து வருடமாக ஜெயிலில் அடைத்து வைத்தார்கள். இவரை குற்றவாளி இல்லை என்று கூறி "உலக மகா அற்புத தீர்ப்பை கூறினார்கள்". மீண்டும் செய்யாத குற்றத்திற்காக ஜெயிலில் அடைத்து "மீண்டும் அந்த மகா அற்புதத்தை அரங்கேற்ற" (ஜாமீன் கொடுக்காமல்) காத்து கொண்டு இருக்கிறார்கள்.

தொடர் குண்டுவெடிப்பை "ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்தான் நிகழ்த்தினார்கள்" என்று தெளிவான பின்னாலும் அந்த "வழக்குகளில் அநியாயமாக பழி போட்டு ஜெயிலில் அடைப்பட்டு கிடக்கும் நம் அப்பாவி சகோதரர்களை" குற்றவாளிகள் இல்லை என்று தெரிந்தும் அவர்கள் விடுதலை விசயத்தில் தலையிடாமல் இன்றுவரை மவுனம் காத்து வருகிறார்கள். மனித உரிமை ஆர்வலர் டாக்டர் பினாயுக்சென் அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து அநியாயமாக ஜெயிலில் அடைத்து இதை "உலகமே எதிர்த்த போதும்" கண்டு கொள்ளாமல் இருந்து இந்த வந்தேறிகள் நம் நாட்டை கேவலப்படுத்தி இருகிறார்கள்.

பாப்ரி மஸ்ஜித் விசயத்தில் "உலகமே காறித்துப்பும் ஒரு அற்புதமான தீர்ப்பை கூறி" இந்த நாடு எப்படி? கேவலப்பட்டால் எங்களுக்கு என்ன? என்று இந்த வந்தேறிகள் தங்கள் புத்தியை காட்டினார்கள். இது எப்படி போனால் என்ன? பெருமை சேர்பதற்கு இது என்ன அவர்கள் நாடா? இறுதியாக ஒன்று மட்டு புரிகிறது "டாக்டர் பாபா சாஹிப் அம்பேத்கர் இந்திய அரசியல் சட்டதிட்டம் எழுதிய காரணத்தால்" பாபாஜியின் மக்களை தீண்டத்தகாத மக்களாக ஆக்கியது போல், அவர் எழுதியதையும் "தொட்டால் தீட்டு பட்டுவிடும்" என்று எண்ணி மக்களை பிரித்தால சொல்லிக் கொடுக்கும் "அவாள்களின் வேதபுத்தகம் ஆன மனுதர்மத்தின்" அடிப்படையில் தீர்ப்பு சொல்கிறார்கள் என்றுதான் நினைக்க தோன்றுகிறது .

அப்படி சொல்லக்கூடிய "அவாள்களின் தீர்ப்பும், நீதிமன்றங்களும்" இனியும் நமக்கு தேவையா?சிந்தியுங்கள்! செயல் படுங்கள்! அநீதிக்கு எதிராக வீறுகொண்டு எழுவோம்! தேசத்துரோகிகளை விரட்டி அடித்து தாய் மண்ணையும், மண்ணின் மைந்தர்களையும் காப்பாற்றுவோம்! இவர்களை வெளியேற்றும் வரை முரசு முழங்கிக் கொண்டே இறுக்கும்! ......உங்கள் அன்புள்ள முரசு.
நன்றி:சிந்திக்கவும்.நெட்

0 கருத்துகள்: