கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

விடுதலைச் சிறுத்தைகளுக்கு 10 இடங்கள்: தி.மு.க. அறிவிப்பு

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இன்று (பிப்ரவரி 28) அறிவாலயத்திற்கு வந்த திருமவளவன் கருணாநிதியோடு தொகுதி ஒப்பந்தம் போட்டார். தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் திருமாவளனும் கருணாநிதியும் கையெழுத்திட்டார்கள். அப்போது தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவை சேர்ந்த ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி ஆகியோர் உடன் இருந்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 13 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை வைத்தார். ஆனால் பத்து தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்று தி.மு.க. கையை விரித்துவிட்டது.கடைசியில் 11 தொகுதிகள் வரை கேட்டு போராடி பார்த்தார் திருமாவளவன். ஆனால் 10 தொகுதிகள் மட்டுமே இப்போது தி.மு.க. ஒதுக்கியிருக்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி இடம் பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட்டது. அதில் இரண்டு தொகுதிகள் விடுதலைச் சிறுத்தைகள் வெற்றி பெற்றது. கடந்த 2009 எம்.பி. தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு திருமா மட்டும் வெற்றி பெற்றார். 1998ம் ஆண்டில் இருந்து தேர்தல் அரசியலில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கெடுத்து வந்தாலும் அந்த கட்சிக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் கிடைக்கவில்லை. தனிச் சின்னமும் பெறமுடியவில்லை. இந்த முறை அதனை பெற்றுவிட வேண்டும் என்றுதான் அதிக தொகுதிகளை தி.மு.க.விடம் கேட்டது. ஆனால் கிடைக்கவில்லை

0 கருத்துகள்: