கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!
------------------------------------------------------------------------------------------------------------
மணமகன்:E.முஹம்மது ஹாஜா பஹத்           மணமகள்:J.சமீரா பானு
                      இடம்:கோணுழாம்பள்ளம்,ஜாமிஆமஸ்ஜித்.
   நாள் :06.01.2013
------------------------------------------------------------------------------------------------------------

சிதறிக்கிடந்த முத்துக்களைச்
சிறு நூலில் கோர்த்தாற்போல்
பரவிக் கிடந்த மலர்களை
ஒரு நூலில் சேர்த்தாற்போல்
எங்கோ பிறந்த ஈருயிர்கள்
இங்கு ஒன்றாய் இணைவதைக் காணீர்!

பார்ப்போரெல்லாம் வாழ்த்தும்வண்ணம்
பாரினில் பிணைந்திட்ட தம்பதிகாள்!
பாருக்கெல்லாம் இறைத்தூதரான
பார்போற்றும் உத்தமர் வழியிற்சென்று
சீர்மிகு இல்லறத்தை- நீவிர்
சீரோடும் சிறப்போடும் நடத்திடுவீர்!

வண்ண வண்ணப் பூக்கள்
சோலைக்குப் பெருமை
மின்னும் விண்மீன்கள்
வானுக்குப் பெருமை 
செழித்த பசும்பயிர்கள்
வயலுக்குப் பெருமை
பணிவான பெண்ணே
இல்லத்தின் பெருமை!

அன்பான கணவரைக் 
கரம்பிடித்த நங்கையே!-உன்
பண்பாலும் பணிவாலும்
அவருள்ளம் கவர்வாயே!-இனிய
சொல்லாலும் செயலாலும்
கல்பட்ட நெஞ்சமும் பஞ்சாகும்
நல்வஞ்சியே! நீஇதை உணர்வாயே!

இறைமறையின் வாக்குகளை
இதயத்தில் ஏந்தி-நீவிர் 
மறை வாழ்வு வாழ்வீரே!
நிறை வாழ்வு வாழ்வீரே!
குறையற்ற வாழ்க்கைதனை-இக்
குவலயத்தில் வாழ்ந்து-நீவிர்
ஒருவருக்கொருவர் காக்கும்
திரையாக ஆவீரே!

விட்டுக்கொடுத்தோர்
கெட்டுப் போனதில்லை-எனும்
பட்டறிவுப் பழமொழியைப்
பட்டென மனதில் ஏற்று
விட்டுக்கொடுத்து வாழ்ந்திடுவீர்!-நீவிர்
தட்டிக்கொடுத்து உயர்ந்திடுவீர்!

இன்பங்கள் எத்துணைதான்
இவ்வுலகில் இருந்தாலும்
இனியதொரு துணைவிபோல்
இன்பம் ஆங்குண்டோ?
பார்க்கும் இடமெல்லாம்
பாவைகள் பலர் இருந்தாலும்
பாரினில் அன்புமிகு
துணைவிபோல் உண்டோ?

பரந்து விரிந்திட்ட
பசுமையான இப்பாரினிலே
திறந்த மனத்துடனே
இனிய நற்பண்புடனே
சிறந்த இல்வாழ்வைச்
சீரோடும் சிறப்போடும்
பிறர் போற்ற நீவிர் 
பல்லாண்டு வாழ்ந்திடுவீர்!

உள்ளங்கள் ஒன்றுபட்ட
நல்ல எண்ணங்களோடு
உள்ளவரை உலகில் வாழ
உளமார வாழ்த்துகிறோம்!-நீவிர்
இருவரும் இணைந்தே
இப்பாரினில் நீடூழி வாழ
இருகரமேந்தி-தூய
இறைவனிடம் இறைஞ்சுகிறோம்! 
வாழ்த்தும் நெஞ்சம்
A.தாஜுத்தீன்
 (துபாய்) 
கோணுழாம்பள்ளம்
நன்றி:நூ.அப்துல் ஹாதி பாகவி
இணையத்தளம்

0 கருத்துகள்: