கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

குறை சொல்ல வேண்டாமே!!!

மனிதனாக பிறந்தஒவ்வொருவருக்கும்இறைவன்வாழ்வதற்காகஉறுப்புகளை அன்பளிப்பாக.......கொடுத்துள்ளான்..அவற்றில்மிகசிறந்ததுநாவுஎன்னும்சிறியதொருசதைத்துண்டுதான்..அதனுடையபயன்கள்தான்   எத்தனை     எத்தனை..
உண்மையைகூறிமக்களைநல்வழிப்படுத்துவதும்நாக்குதான்....பொய்கூறிவழிகெடுப்பதும்அதேநாக்குதான்....கைவலித்தாலும்....,தலைவலித்தாலும்....,மனசுவலித்தாலும்      அதை     வெளிப்படுத்துவதும்      நாக்குதான்......

மனிதனின் வெளி உறுப்புகளில் மிக கொடியதும் இந்த நாக்குதான்.....மற்ற உறுப்புகளைபோல்இதுஅடிக்கடிசோர்வடைவதுமில்லை.மற்றவர்களின் குறைகளையெல்லாம   சொல்லிகாண்பித்து     இன்பம்காணுவதில்   அதற்கு நிகர் யாருமில்லை நாக்குஇருக்கேன்னுதேவையில்லாமல் பேசாதீங்க,உப்பு போட்டாற்போல்கொஞ்சமாகபேசுங்கள்அளவுக்குஅதிகமாகஉப்புப்போட்டால்...அந்தசாப்பாட்டையாரும்தொடமாட்டாங்க....

அதுபோலவழவழவென்றுபேசுபவர்களுக்குமதிப்பும் ,மரியாதையும் துளியும் இருக்காது,இன்னும்நம்மில்பெரும்பாலானமக்களுக்குஎப்பபார்த்தாலும் பிறரைகுறைசொல்லும்பழக்கம்இருக்கும்,சாப்பாட்டைகுறைசொல்லும்............பழக்கம்சிலருக்குரொம்பபிடிக்கும்போல..சொந்தம்,பந்தவீட்டுக்குபோனாலும்.....கல்யணவீட்டிலயும்மூக்குமுட்டசாப்பிட்டுவிட்டுகுறைசொல்லுவார்கள்.

உப்புசரியில்ல,மட்டன்வேகலை,ஒழுங்கா கவனிக்கலனு ஆயிரத்தெட்டுகுறைசொன்னாதான் திண்ட சோறு ஜீரணமாகும்.

இன்னும் சிலர் அடுத்தவரின் உடை ரசனையைவிமர்சிப்பார்கள்.அது அழகாவேஇருந்தாலும்பாராட்டமனசுவராது...........அவங்களாகவேஇதுநல்லாஇருக்கானுகேட்டால்அய்யய்யோ...அந்தகடையிலஏன்வாங்குன.?துணிநல்லாவேஇருக்காதே....... இதெல்லாம் ஒரு கலரா.....?உனக்கு ஏன் கழுதை கலர்டிரஸ்ஸா கிடைக்குதேனு குறை சொல்வாங்க.

இன்னும்சிலர்அடுத்தவரின்உடல்குறையைசொல்லிகாட்டுவார்கள்.சொட்டைவழுக்கை,குட்டை,கருப்பு,என்றுஅதுஅவர்களுக்குஎவ்வளவு மனவேதனையை ஏற்படுத்தும்என அறியாமல்.....இன்னும்,அடுத்தவரின்அறியாமையை குறைசொல்லும்விதமாகஉன்தலையில களிமண்ணா இருக்கு???நீ மாடு மேய்க்கத்தான்லாயக்குனு.....மட்டம் தட்டுவார்கள்...

இவ்வாறு பேசுவது அவர்களின்மனதை குத்திகிழித்திறுக்கும்தெரியுமா?நாங்க உள்ளதைதானேசொல்றோம்எனதங்களின் செயலுக்கு  சரிகாண்கிறார்களே. அதுமிகப்பெரும்தவறு....நாம்உபயோகிக்கும்ஒவ்வொருவார்த்தைகளும் காற்றில்கரைந்துவிடுகிறது எனநினைக்கிறோம்....இல்லை...இல்லை....அது மற்றவர்களின் மனதில் பதியப்படுகிறதுஎன்பதை சுத்தமாக மறந்துவிடுகிறோம்..இவ்வாறுபேசுபவர்கள்யாரோ,எவரோஅல்ல.நம்முடையவாழ்க்கையில்நானும்,நீங்களும்இதேதவறைசெய்திருப்போம்,

நாம் அனைவரும் இனிமையாக பேச கற்றுக் கொள்வோம்,கடினமான வார்த்தைகளைபயன்படுத்தாதீர்கள்...ஒவ்வொரு வார்த்தையும் அன்பில் தோய்த்தெடுங்கள்.....அன்பு இவ்வுலகையே அடக்கியாளும் சக்தி படைத்தது....
அன்புக்கு அடிமையாகாதவர்கள் இவ்வுலகில் மிகக் குறைவு....ஒரு சிறிய இனிமையான வார்த்தையின் மூலமாகஅடுத்தவரின் மனதை குளிரவைக்கும் கலையை கற்றுக்கொள்வோம்...

நம் வாழ்க்கை என்பது ஒரு வழிப்பாதைதிரும்ப முடியாத பயணத்தைக் கொண்டது.....அதில் நாம் சந்திக்கும் மனிதர்களிடம் முக மலர்ச்சியோடு நடந்து கொண்டால்ஆயிரமாயிரம் இதயங்களை கொள்ளை அடிக்கலாம்.........
உதாரணமாக.....,சாப்பாட்டில் குறை இருந்தால் சாப்பாடு சூப்பர்....உப்பு மட்டும் கம்மியா இருந்தா இன்னும் நல்லா இருக்கும்னு சொல்லலாம்.

அடுத்தவங்க டிரஸ் ரசனை உங்களுக்கு பிடிக்கலைனாலும்வாவ்.....சூப்பர்னு சொல்லுங்கஅவங்க முகத்தில ஆயிரம் வாட்ஸ் லைட் ஜொலிக்கும்.....கருப்பா இருந்தாலும் உன் முகம் களையா அழகா இருக்குனு சொல்லுங்க...கண்டிப்பா சந்தோசப்படுவாங்க...புரிந்துகொள்ளும்திறமைஎல்லோருக்கும்ஒரேபோல இருப்பதில்லைஅதற்காக மட்டம் தட்டுவதை விட ,இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணலாம்உன்னால முடியும்னு தன்னம்பிக்கை தரக்கூடிய வார்த்தைகளைசொல்லிப்பாருங்களேன்....கண்டிப்பாக முன்னேற்றம் இருக்கும்.....


எத்தனையோ குடும்பங்கள் பிரிந்ததும் இதே நாவினால்தான்.....எத்தனையோ உறவுகள் சிதைந்தும் இதே நாவினால்தான்....எத்தனையோ நட்புகள் பிரிந்ததும் இதே நாவினால்தான்....பிரச்சினைகள் வரும்போது நமக்குள் சமாதானம்செய்து வைப்பது இதே நாவுதான்.....

அறிஞர் ஒருவரின் கூற்று இது.....
‘நாவு என்பது பேசுவதற்காகப் படைக்கப் பட்ட ஒன்று...பேச்சு என்பது ஒரு செல்வம்.....தன் கருத்தை தெளிவாக வெளியிடத் தெரிந்த மனிதனுக்குசமுதாயத்தில் நல்ல மதிப்புண்டு.....அவன் நாவு நேரிய வழியில் சென்றால்-அவன் உள்ளம் புனிதமான சிந்தனையை வளர்த்தால் அவன் பேச்சு
சீர்குலைந்த சமுதாயத்தையே திருத்தி அமைத்துவிடும்....நாமும் முயற்சிப்போமா????
http://nervazhii.blogspot.com/

0 கருத்துகள்: