
கர்நாடக அரசும் முழுமையாக தண்ணீர் திறந்துவிட மறுத்துவிட்டது. பருவமழையும் பொய்த்து விட்டது. இதையடுத்து மழை வேண்டி ஆயங்குடி பெரியபள்ளிவாசல் அருகே திறந்தவெளி மைதானத்தில் முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.
ஆயங்குடி பெரிய பள்ளி வாசல் இமாம் முகம்மது அப்பாஸ் ஹஜ்ரத் தலைமை தாங்கினார். ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக