கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

உனக்காக எப்போது நீ அழப் போகிறாய் ?

உனக்காக எப்போது நீ அழப் போகிறாய் ?
மனோயிச்சைகளுக்கு முன்னால் மண்டியிட்டு – நீ
பாவங்களுக்கு முன்னால் பலவீனப்பட்டு நிற்கும்போதா ?
தவறை கண்ணெதிரே கண்டும்
தட்டிக் கேட்க தைரியம் இல்லாதபோதா ?

நல்லறங்களின் நன்மை அறியாமல் – அவற்றை
நகைப்புக்குரியதாய் நீ பார்க்கும்போதா ?

குர்ஆன் ஓதக்கேட்டும் அழுகை வராமல் – கேளிக்கையின்
கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக கண்ணீர் விடும்போதா ?
அறச்செயல்களில் ஆர்வம் கொள்ளாமல் – அழியப்போகும்
அற்ப இன்பத்தை நாடி நீ ஒடும்போதா ?
வணக்கமாகத் தெரிந்த வழிபாடுகள் எல்லாம் – உனக்கு
வழக்கமான சடங்குகளாக மாறும்போதா ?
சுகம் தந்த வழிபாடுகள் யாவும் – உனக்கு
சுமையாகத் தெரியும்போதா ?
இன்னல்கள் நீங்க இரவின் பின்னேரம் (தஹஜ்ஜுத் நேரம் ) இருந்தும்
பகல் முழுவதும் நீ துக்கத்தால் துடிக்கும்போதா ?
பொன்னான பொழுதுகள் வீனாகிப்போனதே என்று – நீ
வருந்தாமல் வாளாவிருக்கும்போதா?
ஆயுளின் விளிம்பில் நீ அசைந்து கொண்டிரும்போது
பாதை மாறி விட்டதை எண்ணி வருந்தும்போதா ?
அழு ! மீழு !! உன் அழுகையும் புலம்பலும் – அல்லாஹ்வின்
அர்ஷை தட்டும் வரை அழு !!!
இன்னமும் தௌபாவின் வாசல் திறந்தே இருக்கிறது – உன்
உயிர் உனது தொண்டை வாசலை அடையாதவரை !
உனக்காக எப்போது நீ அழப் போகிறாய் ?
- அரபி கவிதை ஒன்றின் தமிழாக்கம்
– Syedali SYED MASOOD
http://www.mudukulathur.com/

0 கருத்துகள்: