கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அல்குர்ஆன் கூறும் அல்லாஹ்வின் தன்மைகள்

* அல்லாஹ் நித்திய ஜீவன் (என்றென்றும் வாழ்பவன்) (2:255)

* அவனைத் தவிர மற்ற அனைத்தும் அழியக் கூடியவையே! (28:88)


* அவனைப் போன்று வேறு எதுவும் இல்லை. (42:11)



* அவன் எவ்வகையிலும் பிறப்பெடுப்பதில்லை. வேறு பொருளுடன் கலந்து விடுவதில்லை; இணைவதில்லை. (5:17)


* ஒவ்வொரு பொருளையும் படைத்தவன்; முழு பிரபஞ்சமும் அவனுடைய படைப்பே! (6:101)


* அவன் யாரையும் பெறவில்லை; யாராலும் பெறப்படவுமில்லை. (112:3)


* பிரபஞ்சம் முழுவதின் ஆட்சியதிகாரம் நேரடியாக அவனிடத்தே இருக்கிறது. (36:83)


* வானம், பூமி மற்றும் பிரபஞ்சம் முழுவதையும் அவனே நிர்வகிக்கின்றான். (32:5)


* அனைத்துக்கும் உணவளிப்பவன். (37:5)


* வாழ்வையும், மரணத்தையும் படைத்தவன் (67:2)


* அவனே வாழ்வையும் வழங்குகிறான்; மரணத்தையும் அளிக்கின்றான். (53:44)


* அனைத்துக்கும் அமைதியும், புகலிடமும் அளிப்பவன். (59:23)


* மறைந்திருப்பவை, நிகழ்ந்தவை, நிகழக் கூடியவை அனைத்தையும் அறிந்தவன். (2:29,59:22)


* அனைத்தையும் செவிமடுப்பவன். (6:13)


* அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவன். (2:20)


* அனைத்தையும் மிகைத்தவன்; அவனது தீர்ப்பை யாரும் எதிர்த்திட முடியாது. (59:23)


* அவன் நுண்ணறிவாளன்; அவனது எந்த படைப்பும் வீணானவை, இலக்கற்றவை அல்ல! (34:1)


* அளவிலாக் கருணையுடையவன்; இணையிலாக் கிருபை உடையவன். (1:2)


* மிகவும் அன்புடையவன். (2:207)


* அவனுடைய கருணையும், கிருபையும் ஒவ்வொரு அணுவையும் சூழ்ந்திருக்கின்றது. (7:156)


* நீதி செலுத்துபவன்; மக்களிடம் முழு நீதியுடன் நடந்து கொள்பவன். (10:4)


* யார் மீதும் அணுவளவும் கொடுமை புரியாதவன். (50:29)


* அவனுடைய கட்டளைகள் அனைத்தும் நீதியின் அடிப்படையிலானவை. (6:115)


* அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்பவரைப் பழிவாங்குபவன். (3:4)


* மன்னிப்புக் கோருபவருக்கு மன்னிப்பு அளிப்பவன். (85:14)


* பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்பவன். (110:3)


* நன்மைகளைப் பெரிதும் மதிப்பவன். (64:17)


* தான் நாடியதைச் செய்யக் கூடியவன். (55:16)


* பேசுகிறவன். (2:253)


* தான் விரும்பும் வகையில் செயல்படுபவன். (3:40)


* அவன் நாடுவது உண்டாகும்; அவன் நாட்டமின்றி எதுவும் தாமாகவே நடப்பதில்லை. (76:30)


* தன்னிறைவுடையவன்; யாருடைய தேவையுமற்றவன்; அவனுக்கு தேவையானது எதுவுமில்லை. (35:15)


* தனக்குத்தானே பெருமைக்குறியவன்; மிகவும் சிறப்புடையவன்; கண்ணியமானவன். (11:73)


* எந்த ஒரு குறையையும் விட்டுத் தூய்மையானவன். எல்லா சிறப்பு அம்சங்களும் கொண்டவன். அந்த உன்னத அந்தஸ்தை விட்டுத் தாழ்மையான அல்லது அதற்கு முரணான எந்தத் தன்மையும் அவனிடம் இல்லை. (59:23)


* ஒவ்வொரு தகுதியிலும் இணையற்றவன். அவனுடன் எதையும் ஒப்பிட முடியாது. (42:11)


* வானம், பூமியில் நிகழும் எதுவொன்றையும் வைத்து அவனது எதார்த்த நிலையை யூகிக்க முடியாது. (30:26)


* வணக்கத்திற்குரியவன் அவன் ஒருவனே! (2:163)


* பிரபஞ்சம் முழுவதும் அவனுடைய மகிமையே படிந்திருக்கிறது. (45:37)


* அவனுடைய ஆட்சியதிகாரத்தில் பங்கு கொள்ளும் அளவுக்கு அவனுடைய அடியார்களில் யாருக்கும் தகுதியில்லை. (18:26)

Note: எல்லா இணையதலங்களிலும் இதனை இடம்பெறச்செய்யுங்கள், அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
நன்றி:http://www.nidur.info/

0 கருத்துகள்: