கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

நபிகளாரின் பொன்மொழிகள்..அமுத மொழிகள்


ஒரு முஸ்லிமைத் துன்புறுத்தியவன் என்னைத் துன்புறுத்தியவனாவான். என்னைத் துன்புறுத்தியவன் இறைவனைத் துன்புறுத்தியவனாவான். அந்நிய மதத்தினரை துன்புறுத்தியவன் என்னை (முஹம்மதை) துன்புறுத்தியவனாவான்.


* திருமணம் செய்ய வசதியிருந்தும் திருமணம் செய்யாதவன் என்னைச் சார்ந்தவன் இல்லை.


* பெற்றோரைக் கொடுமைப்படுத்தியவர் எதுநாள் வரை என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லையோ, அதுநாள் வரை அவர் பாவிகளின் கூட்டத்திலேயே சேர்ந்திருப்பார்.

* வெண்மையான ஆடைகளை அணியுங்கள். வெண்மையான ஆடை சிறந்ததாகும். அதனை மரணித்தவர்களுக்கு கபன் ஆடையாக அணிவியுங்கள்.

* சொர்க்கமும் நரகமும் உங்கள் பெற்றோர்களாகும். அவர்களுக்கு நல்லதைச் செய்தால் சொர்க்கத்தின் வாசலை அல்லாஹ் திறந்து விடுகிறான். நோவினைச் செய்தால் நரகம் தான் கிடைக்கும்.

* ஒருவன் தன் தந்தை மரணித்தபின் அவருடைய நண்பர்களுடன் உறவுகொள்வதே சிறந்த செயலாகும்.

* உங்கள் குழந்தைகளை முத்தமிடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும் சொர்க்கத்தில் பதவி உண்டு.

* உங்கள் குழந்தைகளை சங்கைப்படுத்துங்கள். குழந்தைகளைச் சங்கைப்படுத்துவது ஒரு வணக்கம்.

* ஒருவன் தனது பிள்ளைகளுக்கு தனது சொத்தில் அவர்களுக்குரிய பங்கைக் கொடுக்கவில்லையானால், அவர்களை பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி விடக்கூடிய நிலையில் ஆக்கினால் தீர்ப்புநாளில் அல்லாஹ் சுவர்க்கத்தில் அவருக்குரிய பங்கை நஷ்டப்படுத்தி விடுவான்.

* வயது வந்த பெற்றோர்களில் (தாய் தந்தை இருவரில்) ஒருவர் இருந்து அவருக்கு (பிள்ளைகள்) செலவு செய்யவில்லையானால் அவர்கள் சொர்க்கம் நுழைய முடியாது.

* பெற்றோர்களுக்கு உதவி செய்யும் பிள்ளைகளுக்கு (எனது) வாழ்த்து <உண்டாகட்டும். அவருடைய வயதை அல்லாஹ் அதிகப் படுத்துவனாக. ஆமீன்.

http://pettagum.blogspot.com/



0 கருத்துகள்: