![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPsuJ0b7Ucy9D4k5MyhkkT_Kdyb4Qn16ixVkyhe8S8PFvRhrBphWE4qdJGkX2oZf-UhXM8JWT7nv0BA_6YfGGIFWxri8se1oZbCJXao0fHSFb9avtAMZRQoV1DySDp7jv-Jrx2FjZ5SiZN/s200/b129d744-de35-499a-8f4a-eaeb362c2308_S_secvpf.gif)
தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளில் இணைக்கப்பட்டுள்ள உள்தாள்களின் 2013 ஆம் ஆண்டுக்கான பக்கத்தின் மறு பக்கத்தில் 2014 ஆம் ஆண்டுக்குப் பயன்படுத்தும் வகையில் உள்தாள் அச்சடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 1.1.2014 முதல் 31.12.2014 வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
எனவே, குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டையைப் பயன்படுத்தி 1.1.2014 முதல் 31.12.2014 வரை தொடர்ந்து நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என சுப்பையன் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக