கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

ந‌பிக‌ள் நாயக‌ம் ‌சி‌‌னிமா: அமெ‌ரி‌க்கா ம‌ன்‌னி‌ப்பு கே‌ட்க வே‌ண்டு‌ம் - வைகோ


ந‌பிக‌ள் நாயக‌ம் கு‌றி‌த்த தவறான ‌சி‌னிமா கு‌றி‌த்து அமெ‌ரி‌க்கா ப‌கிர‌ங்க ம‌ன்‌னி‌ப்பு கே‌ட்க வே‌ண்டு‌ம் எ‌ன்று மறுமல‌ர்‌ச்‌சி ‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து வைகோ வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை வருமாறு:
மனிதகுலம் போற்றுகின்ற அண்ணலாம் பெருமானார் நபிகள் நாயகம் அவர்களை, மிகமிக மோசமாக இழிவுபடுத்தி திரைப்படம் தயாரித்த நக்கோலா பசிலி நக்கோலா என்பவன் அமெரிக்காவில் வசிக்கிறான்.

குற்றங்கள் செய்ததற்காக சிறையில் இருந்து பரோலில் வந்து இருக்கிறான். தீயிட்டுக் கொளுத்தப்பட வேண்டிய இந்த திரைப்படத்தை தயாரித்த குழுவினுடைய பெயர்தான், மனதை வாள்கொண்டு பிளக்கிறது.

காரணம் அன்பு, கருணை, சகிப்புத் தன்மை, நீதியை உலகத்துக்கு உபதேசித்து, கல்வாரியில் சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதரின் பெயரை ‘கிறிஸ்துவுக்கான ஊடகம்’ என்று பெயர் சூட்டிக்கொண்ட கொடுமை ஆகும்.

பாலியல் உறவுகளை பச்சையாக சித்தரிக்கும் ஆலன் ராபர்ட் என்பவன்தான் ‘அப்பாவி இஸ்லாமியர்கள்’ என்ற இப்படத்தை இயக்கி உள்ளான். கோடானுகோடி இஸ்லாமியர்களின் உள்ளத்தை மட்டுமல்ல, அண்ணலார் நபிகள் நாயகத்தை போன்றுகின்ற, உலகெங்கும் வாழும் அனைத்து மக்களின் நெஞ்சிலும் நெருப்பை கொட்டிவிட்டது.

இந்த படம் அரசின் வெளியீடு அல்ல என்றும், தனி மனித சுதந்திரத்தில் தலையிட முடியாது என்றும், அமெரிக்க அரசாங்கம் கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் அக்கிரமம் ஆகும்.

இப்படத்தை தயாரித்த கூட்டத்தை கைது செய்து சிறையில் அடைத்து தண்டிக்க வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது கழுகுப் புத்தியை மாற்றிக் கொண்டு, இப்போது வந்துள்ள பிரளயத்தை கண்டாவது அறிவும், உணர்வும் பெற்று உடனே அமெரிக்க அரசு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இப்படத்தை தடை செய்ய வேண்டும் எ‌ன்று வைகோ வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.
http://tamil.webdunia.com

0 கருத்துகள்: