கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கோணுழாம்பள்ளம் ஈகை திருநாள் தொழுகை

கோணுழாம்பள்ளம் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஃபித்ரா விபரங்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம்
கோணுழாம்பள்ளம் கிளையில் 08.08.13 வியாழக்கிழமை அன்று ஒரு நபருக்கு 491 வீதம் 90 குடும்பங்களுக்கு ரூ.44,185 க்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

கோணுழாம்பள்ளம் தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளையில்நடைபெற்ற பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கோணுழாம்பள்ளம் கிளையில் 09.08.13 வெள்ளிக்கிழமை அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் மாவட்டசெயலாளர்
O.வரிசை முஹம்மது அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்கள்.

இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்…

நமது இணைய தளத்திற்கு வருகை தந்த தாங்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றோம்

உமர் பின் கத்தாப் (ரலி): "உத்தம அரசியலின் அரிச்சுவடி"

{கட்டுரை சற்றே பெரிது, அவசியம் பொறுமையாக படித்து பார்க்கவும்.}

வரலாற்றின் தவறுகள் ஒரே மாதிரியானவை ஆட்களும் இடங்களுமே மாறுபடுகின்றன என "வார்த்தை சித்தர்" வலம்புரி ஜான் கூறுவார். இது, மற்றெவரையும் விட ஆட்சியாளர்களுக்கு சரியாகப்பொருந்தும்.

ரமழானை முடித்துவிட்டோம் இனி எங்கே?

ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை ரமழான்கள் வந்துவிட்டுப் போவது பருவகாலக் கடமைகள் சிலவற்றை நிறைவேற்றுவதற்காகவல்ல. தனது உள், வெளி வாழ்க்கையை இஸ்லாத்தினால் அழகுபடுத்தி வாழ நினைப்பவர்களுக்கு மேலும் உற்சாகத்தையும், ஊட்டச்சத்தையும் பயிற்சிகளையும் வழங்குவதற்காகவே.

இனிய ஈகை திருநாள் நல் வாழ்த்துக்கள்…!

படைத்தவனையும் பசியில் இருப்பவனையும் நினைவில்கொள்ள பகலெல்லாம் நோன்பைநோற்று இரவு வணக்கத்தை இனிதே நிறைவேற்றி இன்ப(கியாமத்து நாள் ) நினைவுகள் மனதில் பூ பூக்க
இறைவா உன்பாதம் பணிந்தவனாக எங்கள் பாவங்களை மன்னித்து எங்களையும் நல்லோர் கூட்டத்தில் சேர்ப்பாயாக ...
இனிய ரமலான் சிறக்க எங்களுக்கும் அருள்புரிவாயாக ...
கோணுழாம்பள்ளம நண்பர்கள் கோணுழாம்பள்ளம் அயல்நாடுகளில்வாழும்
நண்பர்கள் இணையதள வாசகர்களுக்கும்,உறவினர்கள்
அனைவருக்கும் கோணுழாம்பள்ளம்POST மனமார்ந்த இனிய ஈகை-பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது