ஹஜ் பயணிகளுக்கு பாஸ்போர்ட் சலுகை
ஹஜ் பயணம் மேற்கொள்வோர், அக்கமிட்டியின் ஒதுக்கீடு கடிதத்திற்கு காத்திருக்காமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்’ என, சென்னை மண்டல துணை பாஸ்போர்ட் அதிகாரி தவ்லத் தமீம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வோர், கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கும் வகையில், ஹஜ் கமிட்டியின் ஒதுக்கீடு கடிதத்திற்கு காத்திருக்காமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள், தங்கள் விண்ணப்பத்தின் முதல் பக்கத்தில் ஹஜ் பயணி என, சிவப்பு மையால் குறிப்பிட்டு, வழக்கமான ஆவணங்கள் மற்றும் கட்டணங்களுடன் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மாநில ஹஜ் கமிட்டியிடமிருந்து ஒதுக்கீட்டு எண் பெறப்பட்டதும், போலீஸ் சரிபார்த்தல் அறிக்கை பெறப்படாத விண்ணப்பங்களுக்கும், ஹஜ் பிரிவில் எட்டு மாதங்கள் செல்லத்தக்க, சவூதி அரேபியாவுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படும். ஹஜ் பயணம் முடிந்ததும், விண்ணப்பதாரர்களின் போலீஸ் சரிபார்த்தல் அறிக்கையின் ஒப்புதல் உறுதி செய்யப்படும். அதன்பின் அவர்கள், ஹஜ் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட வேண்டும். அவர்களுக்கு 10 ஆண்டுகள் செல்லத்தக்க புதிய பாஸ்போர்ட் தரப்படும். இவ்வாறு தவ்லத் தமீம் தெரிவித்துள்ளார்.
லேபிள்கள்:
சமுதாய செய்திகள்
பாரிமுனை பள்ளிவாசல் தகர்ப்பும்! முஸ்லிம்கள் முறியடிப்பு!!
சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள 7 வருட பாரம்பரியமுள்ள ஒரு மஸ்ஜிதை தேசவிரோத குண்டர்கள் சிலர் நேற்று தகர்க்க முயற்சி செய்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சார்ந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று குண்டர்களைத் தடுத்து நிறுத்தி, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
லேபிள்கள்:
சமுதாய செய்திகள்
வேதனைதான்..வேறு வழியில்லை!-மகளீரணி அமைப்பாளர் ஃபாத்திமாவுக்கு கடிதம்
எனது அன்பு மகள் ஃபாத்திமாவுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்…)
நான் பன்னெடுங்காலம் தலைவராகவும், உறுப்பினராகவும் ஊழியம் செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில மகளிர் அணி மற்றும் உறுப்பினர் பொறுப்பிகளிலிருந்து உன்னை நீக்கம் செய்த செய்தி நான் உருவாக்கிய மணிச்சுடர் நாளிதழில் 23-03-2011 அன்று வெளிவந்ததை கண்டு கண் களங்கினேன். அதற்கு இணையதள மூலம் நீ நியாயம் கேட்டு எழுதி இருந்ததை பார்த்து உணர்ச்சி வசப்பட்டேன்.
கட்சியின் தன்மானத்தை காப்பது தவறா? காயிதெ மில்லத், சிராஜுல் மில்லத் போன்ற சிறந்த தலைமை வேண்டுமென நினைப்பது தவறா? சொந்த சின்னத்தில் நிற்காமல் மற்றவர்களுக்கு பினாமியாக நிற்பதை கண்டிப்பது தவறா?
லேபிள்கள்:
கட்டுரைகள்
குழந்தையின் முதல் உணவு
தாய்ப்பால் தான் குழந்தையின் முதல் உணவு. அல்லாஹ்வின் படைப்பில் இது இவ்வாறு அமைந்தது மிக முக்கியமானது. தாயின் மார்புக் காம்பு ஈரிப்பாக நுண் கிருமிகளின் இருப்பிடமாகவும் திகழ்கிறது. இந்த நுண்கிருமிகள் ஒரு வித மணத்தை ஏற்படுத்தி பிறந்த குழந்தையின் இதழ்களை அதைநோக்கி ஈர்க்கின்றன. கண்களைக்கூட திறக்காத குழந்தை தாய்ப்பால் சுரக்கும் இடத்தை அறியும் விந்தை இதுதான். மேலும் பெரியவர்களுக்கு உள்ளதைவிட கைக்குழந்தைப் பருவத்தில் குரல்வலையானது சற்றுமேலே தள்ளியே இருக்கும். இதன் காரணமாத்தான் தாயிடம் பாலமுது பருகும்போது அவைகளுக்கு மூச்சு முட்டு வதில்லை, மூச்சிக்குழலிலும் நுரையீரலுக்குள்ளும் பால் வடிந்துவிடுவதுமில்லை.
குழந்தைப்பருவத்தில் கிருமிகள் வாயின் வழியாகவும் சுவாசக் குழாயின் வழியாகவும் நுரையீரலையும் வயிற்றையும் சென்றடைகின்றன. இதன் மூலம் கிருமிகளை எதிர்த்த முதல் கட்டப் போராட்டம் குழந்தையின் உடலுக்குள் துவங்குகிறது.
லேபிள்கள்:
கட்டுரைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
