கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

வேண்டும் ஆட்சி மாற்றம்!


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!

சகோதரர்களே! நம் மாநிலத்தினுடைய சட்டமன்றத் தேர்தலை எதிர் நோக்கி இருக்கிற இச்சூழ்நிலையில் பல விதமான கேள்விகளும், ஆதங்கமும், அதிருப்தியும், நம்மில் பலரை ஆட்கொண்டுடிருப்பதை நம்மால் உணர முடிகிறது. இவ்வேலையில் சில எதார்த்த நிலைகளை நாம் அறிந்த கொண்டாமேயானால் அல்லாஹ் நாடினால் அது நமக்கு பயனுல்லாதாக அமையும் என்று நம்புகிறேன்.

சகோதரர்களே! கடந்த பல வருடங்களாக நம் நாட்டில் எந்த ஒரு அரசும் சாமானிய மக்களின் நலம் நாடும் அரசாக இல்லை என்பதையும் அதிலும் முஸ்லிம்களின் நலனை அறவே விரும்பவில்லை என்பதையும் நாம் தெளிவாக புறிந்துகொள்ள வேண்டும். ஆளும் கட்சிகளின் இலட்சியம் மேலை நாடுகளுக்கு அடிமைப்படுவதும், அதன் மூலம் தன்னை வளப்படுத்திக்கொள்வதும், எதிர்க் கட்சிகளின் இலட்சியம் இரு அவைகளையும் நடக்கவிடாமல் முடக்குவது! (மேலை நாடுகளுக்கு நம் வளங்களை தாரைவாற்கிறார்களே என்பதற்காக அல்ல, இந்த பாக்கியம்(?) நமக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தின் காரணமாக!) என்று எண்ணும் அளவுக்குத்தான் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன. அரசியலில் வெகு சிலரே நல்லுள்ளம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் சொற்பமானவர்களாக இருப்பதால் அவர்களால் அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாமல் போய்விடுகிறது.

இச்சூழ்நிலையில் எந்த அரசியல் கட்சியும் அவர்களுடைய கட்சியின் சார்பாக முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதின் மூலம் எந்தப் பலனும் பெரிதாக கிட்டிவிடப் போவதில்லை. வேண்டுமானால், முஸ்லிம்களின் நேர்மையின் காரணமாக தங்களின் தொகுதி மக்களுக்கு கிடைக்கிற நலத் திட்டங்களைக் குறைவின்றி அம்மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்க முடியும். தவிர சமூக அநீதிக்கு எதிராக நாம் சார்ந்திருக்கிற கட்சிகள் களமிறங்கும் போது அதிலே சிறிய அளவிலான எண்ணிக்கையில் இருக்கிற முஸ்லிம்களால் தங்களின் எதிர்ப்பைக் கூட பதிவு செய்ய முடியாமல் குரல்வலை நெறிக்கப்பட்டவர்களாக அங்கே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

காங்கிரஸின் M P அப்துல் ரஹ்மான் அந்துலே ஹேமந் கர்கரே-யின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. எனவே விசாரனை நடத்தப்பட வேண்டும்  என்றதற்காக தன்னுடைய பதவியையே இழக்க நேரிட்டது! இது தான் பிற கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடுவோருக்கான நிலை என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். நம் சமுதாய உரிமையை கேட்பதற்கு, நம் உணர்வுகளை பிரதிபளிப்பதற்கு என்று அனைத்திற்கும் கட்சித் தலைமையிடம் அனுமதி பெற வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் நாம் வாய் திறந்து பேசமுடியா பொம்மைகளாக ஆக்கப்படுவோம். அதையும் மீறி வாய் திறந்தால், பின் அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.

"நீங்கள் ஒரு தீமையைக் கண்டால், அதை உங்களுடைய கரங்களால் தடுங்கள்! அதற்கு நீங்கள் சக்தி பெறாவிட்டால் உங்களின் நாவினால் அதைத் தடுங்கள்! அதற்கும் நீங்கள் சக்தி பெறாவிட்டால் உங்களின் மனதால் அதை வெறுத்து ஒதுங்கிவிடுங்கள்! இதுவே ஈமானின் தாழ்ந்த நிலையாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்க நாம் எவ்வாறு வாய் மூடியவர்களாக அங்கேயே இருக்க முடியும்.

அதே வேலையில் நாம் தனிக் கட்சியாக உருவாகி கூட்டனி என்ற ரீதியில் ஆதரவளித்தோம் என்றால், நம் குரல் வலை நெரிக்கப்படாது. மேலும் ஆட்சி அதிகாரங்களிலே பங்குபெற்றிருந்தாலும் தேவைப்பட்டால் ஆதரவை விலக்கிக் கொள்ளவும் முடியும். முக்கியமாக நம் உரிமைக் குரல் ஒலிக்க எவரிடத்திலும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. நம் உரிமைக் குரல் சட்டம் இயற்றும் அனைத்து அவைகளிலும் ஒலிக்க வேண்டும் என்பதற்குத் தானே அதிகாரத்திலே பங்கு கேட்கிறோம்! பின் அந்த உரிமையை இழந்து பிற அரசியல் கட்சிகளில் அங்கம்வகித்து என்ன பிரயோசனம்? என்பதை நம் சமூக சகோதரர்கள் அனைவரும் சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேலும், முஸ்லிம்களால் மட்டுமே தன்னலமற்ற, மக்களின் நலம்நாடுகிற, சமூக நலம் பேனுகிற, சமய சார்பற்ற சரியான ஆட்சியை கொடுக்க முடியும் என்பதே சரியான வரலாறுகள் நமக்குச் சொல்லித் தறுகிற பாடம்.

அகன்ற பாரதத்தை உருவாக்கியது முஸ்லிம்கள்! வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டிருந்த நம் நாட்டின் விடுதலைக்கு வித்திட்டு அதை வேரூன்றி விருட்சமாக படரவிட்டு அதற்காக தங்களின் உயிர், கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் என்று அனைத்தையும் தங்களின் சதவிகிதத்திற்கும் அதிகமாகவே இழந்து விடுதலையை வென்றெடுத்தது முஸ்லிம்கள்.

நாடு சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகளைக் கடந்தும், நாம் சுதந்திர இந்தியாவில் தான் வாழ்கிறோமா? என்று சாமானிய மக்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளும் இழி நிலைக்குக் காரணம் அன்று முதல் இன்று வரை முஸ்லிம்கள் நம் நாட்டின் எந்த ஒரு அதிகாரத்திலும் பங்கு பெறவே இல்லை!.

முஸ்லிம்கள் ஆட்சி அதிகாரங்களில் பங்கேற்றுவிடக் கூடாது என்று சூழ்ச்சி செய்து நாடு சுதந்திரம் அடைந்ததும் முதல் வேலையாக முஸ்லிம்கள் உருவாக்கிய அகன்ற பாரதத்தைக் கூறு போட்டு, முஸ்லிம்களை சிறுபான்மைகளாக்கி, வெள்ளையர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்த முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டையும் பிடிங்கிக்கொண்டு வெள்ளையனை நாட்டைவிட்டுத் துரத்தியதற்காக பழி தீர்த்துகொண்டார்கள் நம் நாட்டின் ஒட்டு மொத்த தேச பக்தியின் சொந்தக்காரர்கள்(?) வெள்ளையனின் கூட்டாளிகளான பாசிசவாதிகள்.

இன்று அரசியலில் அனாதைகளாகப்பட்டிருக்கிற முஸ்லிம்கள் ஆட்சி அதிகாரம் பெற வேண்டும் என்று நினைப்பது முஸ்லிம்களின் மேன்மைக்காக மட்டுமல்ல, நம் நாட்டு மக்கள் அனைவரும் நலம்பெற வேண்டும் என்பதற்காக. ஒரு முஸ்லிம் தான் மட்டும் அல்லது தான் சார்ந்திருக்கும் சமுதாயம் மட்டும் நலம் பெற வேண்டும் என்ற சிந்தனையுடையவனாக இல்லாமல் அனைத்து மக்களும் நலமோடும் வளமோடும் வாழ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டவனாக இருப்பான். ஏனென்றால் "தான் விரும்புவதையே தன் சகோதரனுக்கும் விரும்பாதவரை நீங்கள் இறை நம்பிக்கையாளராக முடியாது" என்று அல்லாஹ்வின் தூதர் நம்மை எச்சரித்துள்ளார்கள். அதனால் தான் முஸ்லிம்களின் ஆட்சியை மிஞ்சிய ஒர் ஆட்சியை வேறெவரும் கொடுத்தாக வரலாறு இல்லை.

மேலும் "அண்டை வீட்டார் பசித்திருக்க வயிறாற உண்பவன் இறை நம்பிக்கையாளனாக முடியாது" என்றும் "ஆள் அரவமற்ற வனாந்திரத்திலே தான் குடித்தது போக மீதமுள்ள நீரை பிறருக்குக் குடிக்கக் கொடுக்காதவனை மறுமை நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான்! அவனோடு பேச மாட்டான்!! அவனைத் தூய்மைப் படுத்தவு மாட்டான்!!!" என்றும் அல்லாஹ்வின் தூதர் எச்சரித்திருப்பதன் மூலம் பிறர் நலம் பேனாதவன் ஒரு முஸ்லிமாகவும் இருக்க முடியாது, மறுமை வாழ்க்கையில் வெற்றி பெறவும் முடியாது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அதனால் தான் முஸ்லிம்களால் மட்டுமே மக்கள் விரும்புகிற நேர்மையான ஆட்சியைக் கொடுக்க முடியும் என்று சொல்கிறேன். இந்த இடத்தில் நான் ஒன்றைப் பதிவுசெய்ய ஆசைப் படுகிறேன் "முஸ்லிம்கள் நம் நாட்டில் அவர்களின் எண்ணிக்கைக்கேற்ப அரசு அதிகாரத்திலோ, அரசாங்க வேலைகளிலோ இல்லை என்பது ஒரு புறம் வேதனையளித்தாலும் குற்றவாளிகளாக இருக்கிற முஸ்லிம்களின் எண்ணிக்கை மற்ற சமுதாயத்தோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்பதை எண்ணும்போது மனம் மகிழாமல் இருக்க முடியவில்லை".

ஒரு நாள் இரவு மதினத்து மக்களெல்லாம் குதிரையின் காலடிச் சத்தம் கேட்டு நம் மீது யாரும் போர் தொடுத்து வருகிறார்களோ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது அம் மக்களை நோக்கி சீறிப்பாய்ந்து வந்தது ஒரு குதிரை. அதிலிருந்தது அன்றைய ஆட்சித் தலைவரும், ஆன்மீகத் தலைவருமான அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் "மக்களே! அஞ்ச வேண்டாம், மதீனத்தின் எல்லை வரை சென்று பார்த்து வந்துவிட்டேன் யாருமில்லை" என்று மக்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் தந்தார்கள்.

நபி அவர்களின் ஆட்சி எவ்வாறு முழுமையான மக்கள் நலம்பேனும் ஆட்சியாக இருந்ததோ அதே போல் தான் கலிஃபாக்களின் ஆட்சியும் இருந்தது. அதனால் தான் மக்கள் நலம் நாடிய மகாத்மா காந்தி அவர்கள் மக்கள் உண்மையான சுதந்திரத்தை அடைய வேண்டும் என்றால் கலிஃபா உமருடைய ஆட்சி வேண்டும் என்று ஆசைப்பட்டார்! அதனாலல்லவோ அவரைக் கொன்றொழித்தனர் மக்கள் நலம் நாடா பாசிச தீவிரவாதிகள்.

நிச்சயமாக நம் நாட்டு மக்கள் நலம்பெற வேண்டுமென்றால் நம் நாட்டில் ஆட்சி மாற்றம் வேண்டும். அதுவும் இது வரை இல்லாத புதிய அரசாக இருக்க வேண்டும். இச்சூழ்நிலையில் அரசியலில் முஸ்லிம்கள் அடி வைத்திருப்பது காலத்தின் கட்டாயம். முஸ்லிம்களால் மட்டுமே மக்கள் நலம் நாடுகிற ஆட்சியை அமைக்க முடியும் என்பது திண்ணம். எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புறிவானாக! ஆமீன்.

-- அபு ஈசா
tanks:http://adirainirubar.blogspot.com

0 கருத்துகள்: