கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

பதவி ஆசை கொடூரமானது, ருசி கண்டவர்களை அது விடாது!


கா. அஹ்மத் அலீ பாகவி 
[ ‘முஸ்லிம் குடி மக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்துவிடுவாரானால் அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தை தடைசெய்து விடுகிறான்.’ (நூல்: புகாரி) இந்த நபிமொழி, பதவியாளர்களுக்கு விடப்பட்ட பகிரங்க எச்சரிக்கையாகும்.

கோர்ட்டு, வழக்கு என்று வக்ஃபுச் சொத்துக்களை வீணடிக்கின்ற பொறுப்பாளர்கள், மு(த்)தவல்லி பொறுப்பை இறுக்கிப் பிடித்துக்கொண்டு மார்க்கத்தை அப்பட்டமாக மீறுகின்ற, பொதுப்பணத்தை சூறையாடி வயிற்றுக்குள் நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்கிற ஜமாஅத் நிர்வாகிகள் மேற்படி நபிமொழியை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டும்.]

வாய் துர் நாற்றம் – சரி செய்வது எப்படி?

சிலர் பேச வாயைத் திறந்தாலே குப்பென்று துர் நாற்றம் நம் முகத்தில் அடிக்கும், மூக்கைத் துளைக்கும். அவரவர் வாயில் குடியிருக்கும் (Anaerobic Gram Negative Bacteria) நுண் கிருமிகள் பிராணவாயு இல்லாத சூழ் நிலையிலும் பெருகும். நுண்கிருமிகள் வெளியேற்றும் கழிவுகளால் துர் நாற்றம் உண்டாகிறது.

திருமணவாழ்த்து


------------------------------------------------------------------------------------------------------------
மணமகன்:Jமுகம்மது ஜியாவுதீன்.                       மணமகள்:H.சுபைதாபேகம.
                                  இடம்:கோணுழாம்பள்ளம்,ஜாமிஆமஸ்ஜித்.
                                                             நாள் :30.08.2012.
 ------------------------------------------------------------------------------------------------------------

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்.
------------------------------------------------------------------------------------------------------------

திருமணவாழ்த்து

                                             எல்லாப்புகழும் இறைவனுக்கே
                                       
-----------------------------------------------------------------------------------------------------------
               மணமகன்:J.அஜ்மல்கான்.                         மணமகள்:S.அன்சார்பேகம்.
                S/O A.ஜெகபர்அலி.                                         D/OK.A சம்சுதீன்.
------------------------------------------------------------------------------------------------------------
                                  இடம்:கோணுழாம்பள்ளம்,ஜாமிஆமஸ்ஜித்.
                                                             நாள் :27.08.2012.
 

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்.

கோணுழாம்பள்ளம் தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளையில்நடைபெற்ற பெருநாள் தொழுகை


                                                          நன்றி:தஞ்சை TNTJ

கோணுழாம்பள்ளம் தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளையில்கிளையில் ரூ.21,370 க்கு பித்ரா விநியோகம்.


கோணுழாம்பள்ளம் தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளையில் 19.08.12 சனிக்கிழமை அன்று பத்து நபர்களுக்கு ஜக்காத் நிதியிலிருந்து ரூ.1000 வீதம் கொடுக்கப்பட்டது.
நன்றி:தஞ்சை TNTJ

கோணுழாம்பள்ளம் ஈகை திருநாள் தொழுகை

மெஹந்தி பீதி:ஹிந்துத்துவா சதியா?


சென்னை:தமிழகத்தில் முஸ்லிம்களின் ஈதுல் ஃபித்ர் பெருநாள் தினத்தில் மெஹந்தி எனப்படும் மருதாணி வைத்துக்கொண்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்ற எஸ்.எம்.எஸ் செய்தி தீவிரமாக பரவியுள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள் மருத்துவமனையை நாடியுள்ளனர். இந்த எஸ்.எம்.எஸ் செய்தியின் பின்னணியில் இருப்பவர்கள் ஹிந்துத்துவா சக்திகளா? என சந்தேகம் எழுந்துள்ளது.

அமீரகத்தில் ஈகைத் திருநாள் கொண்டாட்டம்! துபாய் ஈத்கா திடலில் மக்கள் உற்சாகம்!

துபாய்:ஒரு மாத காலம் நோன்பு நோற்று, இறை தியானத்தில் திளைத்த மக்கள் இன்று(ஆக:19) அமீரகத்தில் ஈகைத் திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடினர்.
அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள தேரா ஈத்கா திடலில் மக்கள் பெருநாள் சிறப்பு தொழுகையை தொழுதனர்.
காலை 5:00 மணி முதலே மக்கள் ஈத்கா திடலை நோக்கி அலை மோதத் தொடங்கினர். தக்பீர் ஒலி முழக்கம் விண்ணை முட்டியது. 6.12 மணியளவில் தொழுகை ஆரம்பித்தது. தொழுகை முடிந்ததும் குத்பா பேருரை நடைபெற்றது. இறுதியாக மக்கள் ஒருவரை ஒருவர் சகோதரப் பாசத்துடன் கட்டித் தழுவி ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இனிய ஈகை திருநாள் நல் வாழ்த்துக்கள்…!


படைத்தவனையும் பசியில் இருப்பவனையும் நினைவில்கொள்ள பகலெல்லாம் நோன்பைநோற்று இரவு வணக்கத்தை இனிதே நிறைவேற்றி இன்ப(கியாமத்து நாள் ) நினைவுகள் மனதில் பூ பூக்க
இறைவா உன்பாதம் பணிந்தவனாக எங்கள் பாவங்களை மன்னித்து எங்களையும் நல்லோர் கூட்டத்தில் சேர்ப்பாயாக ...
இனிய ரமலான் சிறக்க எங்களுக்கும் அருள்புரிவாயாக ...
கோணுழாம்பள்ளம நண்பர்கள் கோணுழாம்பள்ளம் அயல்நாடுகளில்வாழும்
நண்பர்கள் இணையதள வாசகர்களுக்கும்,உறவினர்கள்
அனைவருக்கும் கோணுழாம்பள்ளம்POST மனமார்ந்த இனிய ஈகை-பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது

இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்…


நமது இணைய தளத்திற்கு வருகை தந்த தாங்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றோம்..



“இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்”

நோன்புப் பெருநாளும் புத்தாடைத் தேடலும் ! -


  எம்.ரிஷான்ஷெரிப்
நோன்புப் பெருநாளை அண்மித்த நாட்களில் இப்பொழுது நாம் இருக்கிறோம். ‘எவ்வளவு விரைவாக நோன்பு முடியப் போகிறது? நேற்றுத்தான் முதல் நோன்பு ஆரம்பித்த மாதிரி இருக்கிறது’ என்றெல்லாம் வியந்தபடி கதைத்துக் கொள்கிறோம். கிட்டத்தட்ட எல்லா இஸ்லாமிய வீடுகளிலும் பெருநாளுக்கான முதலாவது ஆயத்தம் குடும்பத்தவர்களுக்கான புத்தாடைகள் குறித்தான தேடல் தான். புனித ரமழானின் இறுதிப் பத்து நோன்புகளும் அனேகமாக, நமது புத்தாடைகளின் கொள்வனவிற்காகவும், அவற்றைத் தேடுவதற்காகவுமே கழிந்துவிடுகின்றன.

மஸ்ஜிதுல் அக்ஸா:ஜும்ஆ தொழுகையில் 3.5 லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்பு!


Muslims pray in Al-Aqsa on penultimate Ramadan Friday
ஜெருசலம்:இஸ்லாத்தில் மூன்று முக்கிய புனித மஸ்ஜிதுகளில் ஒன்றான மஸ்ஜிதுல் அக்ஸாவில் ரமலானின் நான்காவது வெள்ளிக்கிழமையன்று மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகையில் பங்கேற்றனர்.

திருக்குர்ஆனின் நற்செய்தியை உலக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கவேண்டும் – யூசுஃப் எஸ்டஸ்!


Shaikh Yousuf Estes
துபாய்:திருக்குர்ஆனை அதிகமாக புரிந்து, எல்லா பிரிவு மக்களுடனும் அதிகமான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி உலகில் அனைவருக்கும் திருக்குர்ஆனின் நற்செய்திகளையும், மகத்துவங்களையும் புரியவைப்பது அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாகும் என்று பிரபல அமெரிக்க அறிஞர் யூசுஃப் எஸ்டஸ் கூறியுள்ளார்.

லைலத்துல் கத்ர் இரவு.


ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாளாகிய லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் அறிவோம். எனினும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து அதை நாம் பெற வேண்டும் எனும் ஆவலில் நாம் செயல்பட வேண்டும். அல்லாஹ் இதைப்பற்றி குர் ஆனில் கூறுவதையும் முறையாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
 அல்லாஹ் லைலத்துல் கத்ர் எனும் ஓர் இரவின் நன்மையைப்பற்றி குறிப்பிடும்போது, “அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது” என்று கூறுகின்றான். பார்க்க (97 :3) 

ஒரு நிமிடம்..! ஒரு துளி கண்ணீர்...! ஒரு வேளை பிரார்த்தனை..!


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது பொன்மொழிகள்


நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.  
உலக மக்கள் அனைவருக்கும் அருட்கொடையாக, முஸ்லிம்களால் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கப்படும் நாயகம் (ஸல்) அவர்களது பொன்மொழிகள்.

துபை சர்வதேச திருக்குர்ஆன் மாநாட்டில் மணிச்சுடர் நாளிதழுக்கு விருது !


தமிழக முஸ்லிம்களின் ஒரே நாளிதழுக்கு வெள்ளி விழா ஆண்டில் சர்வதேச அங்கீகாரம் !!

அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி பெற்றார்! 

நோன்புப் பெருநாள் தர்மம் (ஜகாத்)

நம்மிடையே ஏழைகள், செல்வந்தர்கள், நடுத்தர வர்க்கத்தினர் எனும் ஏற்றத்தாழ்வு வாழ்க்கை அமைப்பில் இருந்தாலும், இஸ்லாம் இந்த வேறுபாடான மக்களை ஒன்று சேர்க்கும் விதமாக சில வணக்கங்களை விஷேசமான முறையில் ஏற்படுத்தித் தந்துள்ளது. அதில் ஒன்றுதான் 'ஸதக்க‌துல் ஃபித்ர்' அல்லது 'ஜகாத்துல் ஃபித்ர்' என்று சொல்லப்படும் தர்மமாகும். இஸ்லாம் கூறும் இந்த ஃபித்ரா தர்மத்தின் முக்கியத்துவத்தையும் அதன் சட்டங்களையும் இப்போது பார்ப்போம்.

உயர்வும்-தாழ்வும் உங்கள் கையில்

                                          http://tharjumaramadanspecial.wordpress.com/

இறைவனை மறக்கடிக்கும் செல்வச் செருக்கு


பிலால் (ரலி) அவர்களின் வரலாறு


பிலால் (ரழி) அவர்கள் அபிஷீனிய நாட்டைச் சார்ந்த நீக்ரோ அடிமையாவார். சில பேரித்தம் பழங்களுக்கு அடிமையாய் இருந்தவர். பிலால் (ரழி) யின் எஜமான் உமைய்யா பின் கலஃப் என்பவன். இவன் பனு ஜுமஹ் வம்சத்தை சார்ந்தவன்.

அரிசிச்சோறு அமிர்தமா? ஆபத்தா?

உலகின் மிகப் பழமையான தானியம் அரிசி. இன்னும் மிகச் சரியாக அரிசி எப்போதிலிருந்து நம் பசியாற்றி வருகிறது என்று திட்ட வட்ட மாகத் தெரியாது. இந்தியாவின் அஸ்ஸாம், சீன எல்லை, திபெத் பகுதியில் தோன்றியிருக்கலாம் என்ற கருத்து உண்டு. கிமு 2400 சமயங்களிலேயே வட நா ட்டில் வேதங்களிலும், சீன இல க்கியங்களின் கதைகளிலும் அரிசி குறித்த அடையாளம் அதி கம் உண்டு. கிடைத்திருக்கும் சான் றுகளை வைத்துப்பார்க்கு ம்போது மொத்தத்தில், கிட்டத்த ட்ட 12000 ஆண்டுகளாக அரிசி நம் அடுப்பங்கரையில் ஆட்சி செய்து வருவதை மறுக்க முடியாது.