கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

துபாய் ஈமான் அமைப்பு நடத்திய வினாடி வினா போட்டி


துபாய் ஈமான் அமைப்பு மீலாத் பெருவிழாவினை முன்னிட்டு 5 முதல் 12 வயது வரையிலான மாணவ, மாணவியருக்கு இஸ்லாமிய வினா விடை மற்றும் கிராஅத் போட்டி 04.01.2013 வெள்ளிக்கிழமை மாலை ஸ்டார் இண்டர்னேஷனல் ஸ்கூலில் வெகு சிறப்புற நடைபெற்றது.

ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன் காக்கா தலைமை வகித்தார்.  பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி முன்னிலை வகித்தார். துணைப்பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார்.

உணர்வாய் உன்னை பயிற்சியாளர் தஞ்சை ஜலாலுதீன், துபாய் கிரஸெண்ட் ஆங்கிலப் பள்ளி முதல்வர் முஹம்மது கலீஃபுல்லாஹ் நடுவர்களாக இருந்து நிகழ்வினை சிறப்புற நடத்தினர்.

ஜெயா தொலைக்காட்சியின் முன்னால் செய்தி வாசிப்பாளர் ரஃபீக் சுலைமான் குழ்நதைகளின் திறன்களை ஊக்கப்படுத்துவது குறித்து விளக்கவுரை வழங்கினார்.

வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத் நன்றியுரை நிகழ்த்தினார்.

விழாக்குழு செயலாளர் கீழை ஹமீது யாசின் தலைமையிலான குழுவில் ஃபைஜுர் ரஹ்மான், மதுக்கூர் ஹிதாயத்துல்லா, முஹைதீன், சாதிக் பாட்சா, ஜமால், காதர், முபாரக் அலி, முஸ்தபா, சலாஹுதீன் , ஹபீபுல்லாஹ், ஜாபர் சித்திக், மணல்மேல்குடி அம்ஜத் கான் உள்ளிட்ட நிர்வாக்குழு உறுப்பினர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்புற செய்திருந்தனர்.

0 கருத்துகள்: