கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்


ரமலான் மாதத்தின் இறைவனுக்காக பகல் முழுவதும் நோன்பிருத்த அனைவரும் சவ்வால் மாதத்தின் முதல் நாளில் ரமலான்பெருநாளை(பண்டிகையாக)கொண்டாடுகிறோம்.

அதிகாலையில் எழுந்து,புத்தாடை அணிந்து பள்ளிக்கு சென்று இறைவனை வணங்கி ஏழை எளியவர்களுக்கு பித்ரா எனும் தானதர்மத்தை கொடுத்து மகிழ்ச்சி அடைந்து ரமலானின் சிறப்பைபெற்றுள்ளோம்.

அல்லாஹ்விற்க்காக பசித்திருத்து,விழித்திருத்து,அல்லாஹுவை வணங்கி நல் அமல்கள் செய்து புனித ரமலான் நோன்பை முடித்திருக்கும் நமது முஹிப்பின்கள்  கோணுழாம்பள்ளம நண்பர்கள் கோணுழாம்பள்ளம் அயல்நாடுகளில்வாழும்நண்பர்கள்இணையதளவாசகர்களுக்கும்,உறவினர்கள்
அனைவருக்கும் கோணுழாம்பள்ளம்POST மனமார்ந்த இனிய ஈகை பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது

நோன்பு எனக்குரியது அதற்க்கு கூலியை நானே கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறி அமைந்ததற்கேற்ப அல்லாஹ்வின் கூலியை எதிர்பார்த்திருக்கும் நல்லடியார்களே உங்கள் அனைவர்களுக்கும் மீண்டும் ஒரு முறை பெருநாள் வாழ்த்துக்கள்.

படைத்தவனையும் பசியில் இருப்பவனையும் நினைவில்கொள்ள பகலெல்லாம் நோன்பைநோற்று இரவு வணக்கத்தை இனிதே நிறைவேற்றி இன்ப(கியாமத்து நாள் ) நினைவுகள் மனதில் பூ பூக்க

இறைவா உன்பாதம் பணிந்தவனாக எங்கள் பாவங்களை மன்னித்து எங்களையும் நல்லோர் கூட்டத்தில் சேர்ப்பாயாக ...

இனிய ரமலான் சிறக்க எங்களுக்கும் அருள்புரிவாயாக ...

வல்ல இறைவன் ஈருலக பாக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன்.

0 கருத்துகள்: